Wednesday, April 13, 2011

நண்பன் அடுத்த கட்டப்படப்பிடிப்பு டெக்ராடூன் ராணுவப் பள்ளியில்


நண்பன் படத்தில் இடம்பெரும் கல்லூரி வளாகக் காட்சிகளை, இரண்டாம் கட்ட படப்பிடிப்பாக டெல்லியை அடுத்த டெக்ராடூன் ராணுவப் பள்ளியில் படம் பிடித்து திரும்பினார் இயக்குனர் ஷங்கர்.
மொத்த தமிழகமும் தேர்தல் நெருப்பில் எரிந்துக்கொண்டிருக்க டெல்லியில் இருந்து வந்த வேகத்தில் லண்டன் கிளம்பிவிட்டார் ஷங்கர். கூடவே தனது ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் இருவரையும் அழைத்துக்கொண்டு பதினைந்து நாள் பயணமாக லண்டனில் முகாமிட்டிருந்தவர், தேர்தலுக்கு முதல்நாளான நேற்று  ஏப்ரல் 12-ஆம் தேதி சென்னை திரும்புவதாகத் தெரிய வருகிறது.
ஷங்கரின் இந்தப் பயணத்தின் நோக்கம், நண்பன் படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களில் முதல் பாடல் சென்னையிலேயே உருவாகி விட்ட நிலையில், மீதமுள்ள இரண்டு டூயூன்களை கம்போஸ் செய்து முடிப்பது. இரண்டாவதாக ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளை லண்டன் பர்மிங்காமில் மூன்றாவது ஷெட்யூலாக எடுப்பதற்கு லொக்கேஷன் பார்ப்பது. போன வேலையை சின்சியராக செய்து முடித்து விட்டதாம் ஷங்கரின் மூவர் கூட்டணி. இதற்கு அத்தாட்சியாக நாங்க சின்சியரா வேலை செஞ்சிருக்கோம்ல என்று சொல்லும் விதமாக ஷங்கரின் மக்கள் தொடர்பாளர் படங்களை அனுப்பி வைத்திருகிறார்.

0 comments:

Post a Comment