Friday, April 8, 2011

தேர்தலால் அவதியுறும் தமிழ் திரையுலக பிரபலங்கள்


இன்னும் தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ளது.விஜய் அதிமுகாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பார் எனக்கூறினர்.ஆனால் அது இன்னும் நடந்தேறியதாக தெரியவில்லை.விஜய் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாக இது வரை ஒரு வார்த்தை கூடப்பேசவில்லை.இதனை முழுமையாக கவனித்துக்கொண்டிருக்கின்றனர் திரையுலகினரும் அரசியல் கட்சிகளும்.
விஜய் அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்காததற்கு முக்கிய காரணம் ஒன்று என தற்பொழுது சினிமா உலகில் கிசுகிசுக்கப்படுவது தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ஆவார்.இவ் ரவிசந்திரன் விஜயை வைத்து மிகப்பிரமாண்டமாக எடுத்து வரும் வேலாயுதம் படம் மிக விரைவில் வெளிவர உள்ளது.விஜய் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஏதாவது பிரச்சினை நடந்தால் அதனால் தனது படத்துக்கு பிரச்சனை வரும் என ரவிச்சந்திரன் கூறியதாலே விஜய் மெளனம் சாதிப்பதாக கூறப்படுகிறது.விஜயின் காவலன் படத்தை வெளியிட தடை வந்த போது இப்படம் வெளிவர உதவியவர்களில் ஒருவராக இருந்தவர் இந்த ரவிச்சந்திரன் எனவே இவரது வார்த்தைக்கு விஜய் மதிப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது.
விஜய் தற்போது வேலாயுதம் படத்தில் சிறப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார்.வேலாயுதம் படத்தில் மிக பிஸியாக இருக்கும் விஜய் வாய் திறந்து பேசுவாரா என்பது சந்தேகமே.
இதனை தவிர ரஜனி திமுகாவிற்கு ஆதரவு அளிப்பார் என கூறப்பட்டது அவரும் மெளனம் சாதிக்கிறார்.வீடு தேடி வரும் வேட்பாளருக்கு சால்வை அணிவிக்கிறார் .இப்பொழுது அதிமுக வேட்பாளரும் வீடு தேடி வருவதால் குழப்பத்தில் உள்ளார் ரஜனி.

0 comments:

Post a Comment