Sunday, April 3, 2011

பத்தாவது உலகக் கிண்ணத்தை இந்தியா சுவீகரித்தது

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பி ரசிக்கப்பட்ட பத்தாவது உலகக்கிண்ணம் நேற்றுடன் நிறைவடைந்தது.இந்த இறுதிப்போட்டியில் இலங்கை இந்தியா ஆகிய ஆசிய நாடுகள் இரண்டு மோதின.டொஸ்ஸில் வெற்றிபெற்ற இலங்கை அணி வெற்றி பெற்று 274 ஓட்டங்களை முதலில் குவித்தது.50 ஓவரில் இலங்கை 6 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து இவ் ஓட்டங்களை பெற்றது .பதிலுக்கு ஆடிய இந்தியாவில் ஆரம்ப விக்கெட்டுக்களான் செவாக் சச்சின் சொர்ப ரன்களில் அவுட் ஆக அதன் பின் வந்த வீரர்கள் அபாரமாக ஆடி இந்தியாவின் வெற்றி வழி சமைத்தனர்.இறுதியில் இந்தியா அணி வெற்றி பெற்று பத்தாவது உலகக்கோப்பையை 1983 ஆம் ஆண்டுக்கு பின் நேற்று 2 வது முறையாக டோனி தலைமையிலான அணி சுவீகரித்தது.இப்போட்டி இலங்கை இந்தியா ரசிகர்காளால் மாத்திரம் அல்லாமல் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.இறுதி ஆட்டம் வரை பரபரப்புக் குறையாமல் இப்போட்டி இடம்பெற்றது.இலங்கை 9 வது 10 வது உலகக்கிண்ணங்களில் இறுதிப்போட்டி வரை வந்து ரன்னராக தெரிவுசெய்யப்பட்டது.வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு சிறப்பாக விளையாடிய இலங்கைக்கும் kishor-vimal.blogspot.com சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

0 comments:

Post a Comment