Sunday, April 10, 2011

வருவாரா விஜய் ஆடுகளத்திற்கு


இளையதளபதி விஜய் தமிழ் நாட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவர்.விஜயை சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் அம்பாசிட்டராக தெரிவுசெய்தார்கள்.விஜயும் சிறந்த அம்பாசிஸ்டராக இருந்து வந்தார்.இம்முறை இந்திய அணி உலககோப்பையை வென்ற போது டோனிக்கு போன் போட்டு வாழ்த்து தெரிவித்தார்.இப்பொழுது ஐபிஎல் தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது.எல்லா அணியினதும் அம்பாஸிஸ்டர்களும் தமது அணி விளையாடும் போட்டிகளுக்கு வந்து தமது அணியை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.ஆனால் சென்னை சூப்பர்கிங்ஸ் விளையாடிய போட்டியில் விஜயும் திரிஸாவும் வரவில்லை.அப்போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.முதலாவது ஐபிஎல் காலகட்டத்தில் விஜய் பல போட்டிகளுக்கு வந்து சென்னை சூப்பர்கிங்ஸ் அணியை உற்சாகப்படுத்தினார்.மகனையும் அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.சென்ற வருடம் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பை வென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.இம்முறையும் அந்த நோக்கத்திலே விளையாடுகிறது.இச்சென்னை சூப்பர் கிங்ஸை உற்சாகப்படுத்த விஜய் திரிஸா வருவார்களா? என ரசிகர்கள் எதிர்பார்த்து நிற்கிறார்கள் வேலாயுதம் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதால் விஜய் கலந்து கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் இம்முறை வருவாரா என்பதை எதிர்வரும் சென்னை சூப்ப கிங்ஸ் விளையாடும் போட்டிகளில் தான் தெரியவரும்.விஜய் வருவாரா என்பதை ரசிகர்களும் எதிர்பார்த்து நிற்கிறார்கள். 

0 comments:

Post a Comment