Monday, April 18, 2011

விஜயுடன் டீல் ராஜாவுடன் நோ டீல்


விஜயின் நடிப்பில் மிக விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் வேலாயுதம் .இப்படத்துக்குரிய இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் என இருந்து இறுதி நேரத்தில் இசையமைப்பாளராய் விஜய் அன்டனியை போடும்படி விஜய் கூறி விஜய் அன்டனியை இசையமைப்பாளராய் தெரிவுசெய்தனர்.ஜெயம் ராஜாவும் விஜய் அன்டனியை தெரிவுசெய்ததில் மகிழ்ச்சியடைந்தார்.ஏனெனில் அன்டனியும் ராஜாவும் இணைவது முதன் முறையாகும்.விஜய் படம் என்றால் பாடல்கள் முக்கியம் பெறும்.அந்த வகையில் இப்படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமைய வேண்டும் என ஜெயம் ராஜா ஆசைப்பட்டு விஜய் அன்டனி போட்டுக்கொடுக்கும் இசையில் நல்லதை தெரிவு செய்து கொடுத்தார்.இவ்வாறு மூன்று பாடல்களை பதிவு செய்த பின் விஜய் அன்டனி பின்பு தான் போட்ட மூன்று பாடல் இசையை ராஜாவுக்கு கேட்காமல் விஜய்க்கு காட்டி ஓகே வாங்கிவிட்டாராம்.விஜய் படத்தில் பாடல் எழுதுவதற்கு பா.விஜய் நா.முத்துக்குமார் கபிலன் யுகபாரதி என பிரபல்யமான எழுத்தாளர் பட்டாளமே எழுதும் ஆனால் இப்படத்தின் இரு பாடல்களை புது முக எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர் எனவும் இது ஆன்டனியின் செயற்பாட்டில் உருவானது எனவும் கூறப்படுகிறது ஆனால் இது பற்றி ஆன்டனி ஒன்றும் கூறவில்லை.விஜய் வீட்டையே விலைக்கு வாங்கிய ஆன்டனி இப்போ விஜயின் அடுத்த படத்துக்கும் இசையமைக்கும் முயற்சியில் இப்படித்தொழிற்படுவதாக கிசுகிசுக்கிறது வேலாயுதம் குழு.பாடல் வெளியீட்டில் தெரியும் விஜய் அன்டனியின் முயற்சி.

0 comments:

Post a Comment