பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Showing posts with label ஏனையவை. Show all posts
Showing posts with label ஏனையவை. Show all posts

Monday, January 14, 2013

விஜய், சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை நான்: துளசி நாயர்

பழைய நடிகை ராதாவின் இளைய மகள் துளசி நாயர், கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.
மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் துளசி நாயர் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில்தான் முடிவடைந்தது.
இது குறித்து துளசி நாயர் கூறுகையில்: நான் விஜய், சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை.
கடல் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு தயாராகுவதற்காக அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தை பத்து தடவை பார்த்தேன்.
அந்தப் படத்தில் கார்த்திக் மற்றும் அம்மாவின்(ராதா) கெமிஸ்ட்ரியை கண்டு இன்றும் வியப்படைகிறேன் என்றார்.

Wednesday, January 2, 2013

2012ம் ஆண்டின் Top 10 Celebrities



தமிழ் திரையுலகில் 2012ம் ஆண்டு முதல் பத்து இடங்களை பிடித்த முன்னணி நடிகர், நடிகைகளின் வரிசையை சினி உலகம் தெரிவு செய்துள்ளது.
ரசிகர்களாக இருந்தாலும் வசூலாக இருந்தாலும் தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை இளைய தளபதி விஜய்க்கே அதிகமான வரவேற்பு இருக்கிறது.

அதே போல் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், சூர்யா, சியான் விக்ரம், சிம்பு ஆகியோர் அடுத்த நிலையில் உள்ளனர்.

இந்த வருடம் அஜித் குமார் பில்லா 2, சூர்யா மாற்றான், விக்ரம் தாண்டவம், சிம்பு போடா போடி ஆகிய படங்களில் நடித்திருந்தனர்.

இதே போல் கதாநாயகிகளின் வரிசையில் காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா, அமலா பால், அஞ்சலி ஆகியோர் சினி உலகம் தெரிவு செய்துள்ள டாப் 10 நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர்.

காஜல் மாற்றான், துப்பாக்கி, ஹன்சிகா ஒரு கல் ஒரு கண்ணாடி, அமலா பால் முப்பொழுதும் உன் கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படி, சமந்தா நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம், அஞ்சலி கலகலப்பு மசாலா கபே படங்களில் நடித்தனர்.

Thursday, December 27, 2012

Vijay in Top 3 Actors of Kollywood


Illayathalpathy Vijay is in the Top 3 Actors list of Kollywood, based on the rankings done by popular website behindwoods. The list is topped by Rajinikanth and Kamal Haasan is in 2nd spot. Vijay occupies the 3rd position and it show the mass of Vijay.
Thew website stated
Vijay started the year off with an almighty bang with Nanban. He has also ended the year with the explosive Thuppakki. Now all eyes are on the actor’s next which is to be directed by AL Vijay.
Vijay fans are confident that he will continue to deliver the goods in his inimitable style.
Future projects: AL Vijay Untitled Movie
Movies in 2012: Nanban, Thuppakki
Movies in 2011: Velayudham, Kaavalan
Top 3 Actors of the List are
  1. Rajinikanth
  2. Kamal Haasan

Sunday, December 23, 2012

தல, தளபதி படத்துக்கு சிக்கல்

தல, தளபதி படங்களுக்கு தலைப்பு வைப்பதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தல அஜித் விஷ்ணுவர்தன் இயக்கத்திலும் தளபதி விஜய் ஏ.எல்.விஜய் இயக்கத்திலும் நடிக்கின்றனர்.
தல படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஆனால் தளபதி படத்திற்கு தலைவன் என்று தலைப்பை வைத்தார்கள்.
இது வேறொரு நபருடையது என்பதால் தலைப்புக்கு சொந்தக்காரர் உரிமை கொண்டாட இந்த தலைப்பை ஒதுக்கி விட்டார்கள்.
பின்னர் தங்க மகன் என்று வைக்க, இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் என்பதால் இதுவும் தோல்வியில் முடிந்தது.
படத்தின் இயக்குநர் திரைக்கதை, வசனம் கூட எழுதிவிடுவார் போல ஆனால் படத்தலைப்புதான் தலைவலியாக இருக்கிறது.
ஏற்கனவே துப்பாக்கி படத்தில் நேர்ந்த அனுபவம் விஜய் கூட்டணியை வெகுவாக யோசிக்க வைத்திருக்கிறது என்றே கூறப்படுகிறது.

Sunday, May 27, 2012

ரஜனி படத்தில் விஜய்

கொஞ்ச நாட்களாக ரீமேக் ஜூரம் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது ரசிகர்களை. அதுவும் ரஜினி படத்தை திரும்பி எடுக்க துடித்துக் கொண்டு இருக்கிறார்கள் அத்தனை முன்னணி நடிகர்களும், பில்லா ஒன்றாகி இரண்டாகி அதுவும் ஹிடானால் மூன்றாகும் போல் இருக்கிறது. இந்த வேளையில் ரஜனியின் பாட்ஷா அண்ணாமலை ஆகிய படங்களின் ரீமேக் இல் நடிக்க நடிகர்கள் போட்டி போடுகின்றனர். அண்ணாமலை படம் தான் விஜயின் அடுத்த ரீமேக் படமாக இருக்கிறது. ரஜனியிடம் சென்று விஜய் இப்படம் தொடர்பாக ஆலோசனை கேட்க போகிறாராம். யார் இயக்கம் மற்றும் தயாரிப்பு என்பாத்து இன்னும் முடிவாகவில்லி. எனினும் இப்படத்தின் நாயகி ஹன்சிகா என்பது உறுதியாகிவிட்டது. 

Saturday, May 12, 2012

விஜயின் அதிரடி முடிவு

துப்பாக்கி படத்தினை முடித்து விட்டு,அடுத்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

இக்கேள்விக்கு கெளதம் வாசுதேவ் மேனன் என்ற பரவலாக முன்னர் செய்திகள் வந்தாலும், விஜய் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை கூறப்படாமல் இருந்தது. 

இந்நிலையில், ஒரு புதிய செய்தி கோடம்பாக்கத்தில் உலா வருகிறது. ராஜேஷ் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் விஜய்.

சிவா மனசுல சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஹாட்ரிக் வெற்றி கொடுத்து, தன்னுடைய கலா கலா காமெடிக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் ராஜேஷ் இயக்கத்தில், முழுநீள நகைச்சுவை படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம் விஜய்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்திற்கான தேதிகள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்.  ராஜேஷ் இயக்கத்தில் வழக்கம்போல் இடம்பெறும் சந்தானமும் இணைவார் என்பதால், இந்த மூவர் கூட்டணியின் படம் கண்டிப்பாக ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்..

முன்னணி இயக்குனர்களான ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், விஜய், ராஜேஷ் என விஜய் ஒப்பந்தமாகி இருப்பது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் த்ள்ளி இருக்கிறது.

Saturday, February 25, 2012

சந்தோஷ் சிவனுடன் இணையும் விஜய்


ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் அடுத்த படத்தில் இளையதளபதி விஜய் நடிக்க உள்ளார்.
கொலிவுட்டில் நண்பன் படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தில் நாயகன் விஜய் நடித்து வருகிறார்.
துப்பாக்கியில் விஜய்யுடன் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. பெப்ஸி பிரச்சினையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் இரண்டம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தோஷ் சிவனின் வேகமான மற்றும் துல்லியமான ஒளிப்பதிவை பார்த்த விஜய், துப்பாக்கி படத்தினைத் தொடர்ந்து தனது திகதிகளை சந்தோஷ் சிவன் இயக்கும் படத்திற்கு கொடுத்து இருக்கிறார்.
ஆனால் இப்படத்தினை தயாரிக்கும் நிறுவனம் குறித்து இன்னும் முடிவாகவில்லை.

Sunday, February 19, 2012

விருது பெற்ற மகிழ்ச்சியில் இளையதளபதி விஜய்


எடிசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இரண்டு விருதுகளை வாங்கிய மகிழ்ச்சியில் இளையதளபதி விஜய் உள்ளார்.
சமீபத்தில் விஜய், சிறந்த நடிகருக்கான எடிஷன் விருது மற்றும் வேலாயுதம் படத்தில் சிறப்பாக நடித்ததற்கு “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” விருது என இரண்டு விருதுகளை பெற்றார்.
இதுகுறித்து இளையதளபதி விஜய் கூறியிருப்பதாவது, இந்த வருடத்தின் தொடக்கம் எனக்கு மகிழ்ச்சிகரமாக அமைந்துள்ளது.
தொடர்ந்து வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய நல்ல படங்களில் நான் நடிப்பேன் என்று நம்பிக்கை வைத்துள்ளேன்.
தற்போது எனது நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் நடிக்கிறேன்.
இது ஆக்ஸன் தீப்பொறி பறக்கும் படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் நிச்சயம் நிறைவேற்றும் என்று இளைய தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.

Wednesday, February 15, 2012

காதல் கதாநாயகர்கள்


ரஜினி-லதா
பேட்டிக்கு வந்த பெண்ணிடம் (லதா) காதல் வயப்பட்ட வரலாறு ரஜினியுடையது. தனியாக வந்த ரஜினியை வளைத்துப்போட நடிகைகள் கூடி நின்று வலை வீசியபொழுது ரஜினி பார்த்து ரசித்து, மனதை பறிகொடுத்த பெண் லதாதான். கண்ணும் கண்ணும் வைத்து, எளிமையாக கல்யாணம் நடந்தாலும் இன்று வரை வெற்றிகரமாக வலம் வரும் கலர்புல் ஜோடி இவங்கதான். இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை, 60 வயதைக் கடந்தவர் என்றாலும் இன்றைக்கும் ரஜினிதான் மாஸ். 25 வருஷத்திற்கு முன்பு பேசப்பட்ட ஜோடி ரஜினி-லதாதான்.

அஜித்-ஷாலினி
அஜித்தோடு கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின் கணக்கை எடுத்தால் அதற்கு பத்து விரல்கள் பத்தாது. உடனே மனதை ‘பறிகொடுக்கிற' சுபாவம் அவருடையது. அவருடன் இணைத்து கூறப்பட்ட நடிகைகள் பட்டியல் நீளமானது. ஆனால் அஜீத் மனம் விரும்பி கலயாணம் செய்து கொள்ள விரும்பியது ஷாலினிதான். இன்றைக்கு வரைக்கும் டார்லிங் என அழைத்து காதலை உறுதி செய்து கொண்டே இருப்பார் அஜித். அவரின் மோசமான தோல்விகளிலும் பாசத்துடன் உடன் இருந்து பேலன்ஸ் செய்தவர் ஷாலினி. நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களின் வாழ்க்கையில் வசந்தமாய் வந்தது குட்டி தேவதை - அவரது மகள் அனோஷ்கா.

விஜய் - சங்கீதா
தமிழ் சினிமாவில் பரபரவென முன்னேறி வந்த விஜய்க்கு காதல் வாய்ப்புகளும் களை கட்டிவந்தன. ஒட்டியும் ஒட்டாமலும் பழகும் விஜய்க்கு காதல் வந்தது லண்டனில் வாழ்ந்த சங்கீதாவிடம். விடுமுறைக்காக சென்ற விஜய் கண்ணில் பட்டதும் வந்தது காதல். சத்தம் போடாமலும், வெளியே தெரியாமலும் காதலை வைத்துக்கொண்டார். இலங்கைத் தமிழரான சங்கீதா மணமொத்து விஜய்யோடு வாழ்ந்து வருகிறார்.

தன் ஆண், பெண் குழந்தையோடு நீலாங்கரையில் வசிக்கும் விஜய் சந்கீதாவை காதல் செய்த வருடங்கள் நான்கு. இன்னும் அவர்கள் இருவரிடமும் காணக்கிடைக்கும் அன்பு, பிரியம் ஆச்சரியமானது.

சூர்யா - ஜோதிகா
சூர்யா-ஜோ திருமண நடந்தது சூர்யா போராடிப்பெற்ற விஷயம். அப்பாவின் சம்மதத்திற்காக வருடக் கணக்கில் காத்திருந்தார். ஒருவருக்கொருவர் அக்கரை செலுத்தி, பின்பு காதலாக உருவெடுத்த வரலாறு சூர்யாவுடையது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பார்கள். இருந்து மணம் முடித்த இப்போது சூர்யா வாழ்வது பூர்ணவாழ்வு. தன் ஒவ்வொரு வளர்ச்சியிலும் ஜோவின் பங்களிப்பைக் காண்கிறார் சூர்யா.

சூர்யாவின் திருப்பம் எடுத்த ‘காக்க காக்க' கூட ஜோவின் ஆலோசனையிலும், வழிகாட்டுதலிலும் வந்த வாய்ப்புத்தான். இதை அவரே நேர்பட பேட்டியில் சொல்லியிருக்கிறா. காதல் கனிந்து இவ்வளவு நாட்களாகியும், அன்று பார்த்த அதே அன்னியோன்யத்தை நான் பார்ப்பது இவர்களிடமே.

மாதத்திற்கு ஒருமுறை வெளியே குழந்தைகளோடு புறப்பட்டுப்போய் வருவது, இரண்டாவது சனிக்கிழமை வீட்டுக்குள்ளேயே குழந்தைகளோடு கொண்டாட்டம், வருஷத்திற்கு 20 நாட்களாவது பாரின் ட்ரிப் என கண்டிப்பாக பேமிலியோடு செலவழிக்கிற காதல் மனிதர் சூர்யா.

இன்றுவரைக்கும் காதல் காட்சியில் கொஞ்சம் அதிகப்படியாக நெருக்கம் காட்டி நடிக்கக் கூட சங்கப்படுவார் சூர்யா. ஜோவிற்கு சங்கடம் அளிக்கும் எதிலும் ஆர்வம் காட்டாத மனது அவருடையது. முழுமையான சமர்ப்பணம், முழுமையான தன்னிறைவு கொண்ட காதல் குடும்பம் இது.

கிரிஷ்-சங்கீதா
இன்றைக்கு வரைக்கும் கிரிஷ்ஷின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத காதல் இவர்களுடையது. Made for each other ஜோடி. பார்க்கவே நன்றாக இருக்கும். நவீனமான ஜோடியாக இவர்களைச் சொல்லலாம். ரொம்பவும் ஜோவியல், நாட்டி, பொருத்தமான ஜோடி என்று கூட சொல்லலாம்.

ஜெயம்ரவி-ஆர்த்தி
ரொம்ப நாட்களாக காதல் ‘சீக்ரெட்' காத்தவர் ஜெயம்ரவி. கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் காதலுக்கு கிரின் சிக்னல் கிடைத்தது இவர்களுக்கு. அவ்விதமே என்றாலும் குழந்தையோடு இன்றைக்கு சந்தோஷமாக வலம் வருவது இந்த தம்பதியினரின் வழக்கம். நண்பர்களின் திருமணம் என்றால் முதல் ஆளாக வந்து நிற்பார். காதலை உணர்ந்து, பிடிவாதமாக வீட்டில் அனைவருக்கும் உணர்த்தி வெற்றிபெற்று  காதல் ஜோதியை இன்னமும் தொடர்ந்த் அணையாமல் கொண்டு செல்கிறது இந்த சூப்பர் ஜோடி!

ஸ்ரீகாந்த்-வந்தனா
இவர்கள் மாதிரி காதலித்ததும் கிடையாது. திட்டிக்கொண்டதும் கிடையாது. அநாகரீகத்தின் உச்சிக்கு சென்ற சண்டை, அமைதியாக முடிந்து, இப்போது மிக அழகான வாழ்க்கையை நடத்தி சென்று கொண்டு இருக்கிறார்கள். மனம் இருந்தால், வழியும் இருந்தால் எப்பவும் மனது ஒன்றிப்போகலாம் என்பதற்கு ஸ்ரீகாந்த்-வந்தனா ஜோடியை விட்டால் உதாரணம் சொல்ல ஆளில்லை. அன்றைய உறவுச் சிக்கல் மட்டும்தான், இப்போது எல்லோருக்கும் உதாரணமாக காட்டுகிற ஜோடி ஸ்ரீ-வந்தனா.

உதயநிதி-கிருத்திகா
கல்லூரியிலிருந்து, மணமேடை வரைக்கும் வந்த அருமையான காதல் உதயநிதியுடையது. மகனின் வேண்டுகோளில் இருந்த அன்பையும், ஈரத்தையும், காதலையும் பார்த்த ஸ்டாலின் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட, உதயநிதி வெற்றிக்கொடி கட்டினார். இன்றுவரைக்கும் காதலில் கண்ணியத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கிருத்திகாவிற்கு காதலோடு முழு சுதந்திரத்தையும் வழங்கியிருக்கிறார் உதயநிதி. சொந்தமான பத்திரிகை ஆரம்பித்தது முதல், குறும்படம் டைரக்ட் செய்தது வரை கிருத்திகா செயல்பட பார்த்துக் கொண்டு இருப்பது உதயநிதியின் இயல்பு.

விஜய்-விக்ராந்த்தின் பாட்டி மரணம்


ஷோபா சந்திரசேகரனின் அம்மாவும் விஜய்யின் பாட்டியுமான லலிதா நீலகண்டன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.
லலிதா நீலகண்டனின் பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தி, பல படங்களைத் தயாரித்துள்ளனர். அவற்றை பெரும்பாலும் லலிதாவின் மருமகன் எஸ்ஏ சந்திரசேகரனே இயக்கினார்.
லலிதா நீலகண்டனுக்கு இரண்டு மகன்கள். பாடகரும் நடிகருமான எஸ் என் சுரேந்தர் மற்றும் சுந்தர். இரண்டு மகள்கள் ஷோபா சந்திரசேகரன் மற்றும் ஷீலா. ஷோபாவின் மகன் நடிகர் விஜய். ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்த்.
பாட்டி மீது மிகுந்த பாசமாக இருந்தார் விஜய். மகள் ஷோபா- மருமகன் சந்திரசேரனுடன் வசித்து வந்த லலிதா நீலகண்டனுக்கு நேற்று நெஞ்சுவலி வந்தது. அவரை விஜயா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் இன்று காலை அவர் மரணமடைந்தார்.
அவருக்கு நுங்கம்பாக்கம் தெரஸா சர்ச்சில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. மாலையில் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. லலிதா நீலகண்டனுக்கு விஜய் ரசிகர்கள், திரையுலகினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Monday, February 13, 2012

2வது முறையாக சாம்பியன் : சென்னை ரைனோஸ் த்ரில் வெற்றி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் டி20 தொடரில், கர்நாடகா புல்டோசர்ஸ் அணியுடனான  இறுதிப் போட்டியில் சென்னை ரைனோஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. தொடக்க வீரர் விக்ராந்த் ஆட்டமிழக்காமல் 95 ரன் விளாசினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்ற செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் டி20 தொடரின் 2வது சீசன், கடந்த மாதம் 13ம் தேதி ஷார்ஜாவில் கோலாகலமாகத் தொடங்கியது. விஷால் தலைமையிலான சென்னை ரைனோஸ் உட்பட மொத்தம் 6 அணிகள் இந்த தொடரில் களமிறங்கின.

லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ் மற்றும் சென்னை ரைனோஸ் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அரை இறுதி ஆட்டங்களில் சென்னை ரைனோஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் தெலுங்கு வாரியர்ஸ் அணியையும், கர்நாடகா புல்டோசர்ஸ் அணி 53 ரன் வித்தியாசத்தில் மும்பை ஹீரோஸ் அணியையும் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறின.

ஐதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சென்னை ரைனோஸ் & கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகள் மோதின. டாசில் வென்ற சென்னை ரைனோஸ் கேப்டன் விஷால் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்களாக ஜீவா, விக்ராந்த் களமிறங்கினர். கார்த்திக் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஜீவா டக் அவுட் ஆகி வெளியேற சென்னை ரைனோஸ் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அடுத்து வந்த பாலாஜி 7 ரன்னில் வெளியேறினார். அரை இறுதியில் ஆல் ரவுண்டராக ஜொலித்து ஆட்ட நாயகன் விருது பெற்று அசத்திய விஷ்ணு 3 ரன் மட்டுமே எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறியது ரைனோஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அடுத்து விக்ராந்த்துடன் பிருத்வி ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் பிருத்வி பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, மறுமுனையில் விக்ராந்த் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். அபாரமாக விளையாடிய விக்ராந்த் அரை சதம் அடித்து அசத்தினார். விக்ராந்த் & பிருத்வி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்தது. பிருத்வி 20 ரன் எடுத்து அபிமன்யு பந்துவீச்சில் சுதிர் வசம் பிடிபட்டார்.

கடைசி கட்டத்தில் ரமணா கம்பெனி கொடுக்க விக்ராந்த் சதம் விளாசுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ரமணா 8 ரன்னில் ஆட்டமிழந்தார். சென்னை ரைனோஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. விக்ராந்த் 95 ரன் (69 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் விஷால் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கர்நாடகா புல்டோசர்ஸ் பந்துவீச்சில் கார்த்திக், துருவா, பிரதீப், அபிமன்யு தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 20 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா புல்டோசர்ஸ் களமிறங்கியது. பாஸ்கர், ராஜிவ் இருவரும் துரத்த்தலை தொடங்கினர். அந்த அணி & ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன் எடுத்து திணறியது. சென்னை ரைனோஸ் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் துடிப்புடன் செயல்பட்டு அசத்தினர். 

Sunday, January 29, 2012

நட்சத்திரங்கள் படையெடுப்பு

செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் டி20 தொடரில், பெங்களூர் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் & கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகள் நேற்று மோதின. டாசில் வென்ற கர்நாடகா புல்டோசர்ஸ் முதலில் பந்து வீசியது. சென்னை ரைனோஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய கர்நாடகா புல்டோசர்ஸ் 19.4 ஓவரில் 138 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. சென்னை அணி 4 ரன் வித்தியாசத்தில் வென்று அசத்தியது.

கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தில் தெலுங்கு வாரியர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டாசில் வென்ற தெலுகு வாரியர்ஸ் முதலில் பந்து வீசியது.
கேரளா ஸ்டிரைக்கர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்தது. தொடக்க வீரர் நிவின் பாலி ஆட்டமிழக்காமல் 46 ரன், கேப்டன் ராஜிவ் பிள்ளை 16, பிரஜோத் கலாபவன் 12 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய தெலுங்கு வாரியர்ஸ் 15.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்து வென்றது. ஆதர்ஷ் 52, தருண் 27 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர்.

பந்து வீசும் சிவா
கன்னட தாரா, சுமலதா.
தம்ப்ஸ் அப் காட்டுகிறார் சமீரா ரெட்டி
எதிர்பார்ப்புடன் சோனியா அகர்வால்.
பேட்டி கொடுக்கிறார் விஷால். உடன் ராதிகா.
சீரியஸ் மூடில் ஜீவா.
கேரளா வெற்றிபெறாதா என்று வேண்டிக் கொள்ளும் பாவனாவுடன் லிசி பிரியதர்ஷன்
ரசிகர்களை கலகலக்க வைத்த வெங்கடேஷ்
கேரள அணி விக்ரம் சிங்குக்கு ஆறுதல் கூறுகிறார், ரியல் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்
கிளுகிளுப்பில் லஷ்மி ராய்.
வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் தெலுங்கு வாரியர்ஸ்

Monday, January 16, 2012

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய விஜய்


புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட புதுவை பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடிகர் விஜய் புதுவை வந்துள்ளார்.
புதுவை சுப்பையா சாலையில் குபேர் திருமண மண்டபம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிற்கு நடிகர் விஜய் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, உடை, பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் தலைமை தாங்கியுள்ளார். நிகழ்ச்சியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Tuesday, January 10, 2012

விஜய்க்காக ' தளபதி ANTHEM '

தனுஷ் WHY THIS KOLAVERI பாடல் மூலம் பிரபலமாகி விட்டார். சிம்பு A LOVE ANTHEM FOR WORLD PEACE என 96 மொழிகளில் காதல் என்ற வார்த்தைகளை கோர்த்து ஒரு பாடலாக தொகுத்து வெளியிட இருக்கிறார்.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், விஜய்க்காக 'THALAPATHY ANTHEM' என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள்.

'எங்கேயும் எப்போதும்' படத்தில் வரும் பஸ் காட்சிகளில் கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். டிவிட்டர் இணையத்தில் இது குறித்து விஜய் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன்,  ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்.

Sunday, January 8, 2012

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெயரில் சிறந்த நடிகருக்கு விருது யாருக்கு?


சிறந்த தமிழ்ப் படங்கள் மற்றும் நடிகர் நடிகைகள், கலைஞர்களுக்கு ‘எடிசன் விருதுகள்’ என்ற பெயரில் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு
இந்த ஆண்டுக்கான எடிசன் விருதுகள் வழங்கும் விழா வரும் பிப்ரவரி மாதம் 12-ம் தேதி சென்னை சேத்பட்டில் உள்ள லேடி ஆணடாள் பள்ளி அரங்கில் நடக்கிறது.
2011-ம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், சிறந்த கலைஞர்கள் ஆகியோர் கவுரவிக்கப்பட உள்ளனர். தனி குழு எதுவும் விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்யவில்லை. ஆன்லைன் வாக்கெடுப்பு முறையில் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக www.edisonawards.in என்ற இணையதளத்தின் மூலம் வாக்கெடுப்பு நடந்து வருகிறது. தவிர, முன்னணி நடிகர், நடிகைகள், கலைஞர்களின் பேஸ்புக், யாஹூ மற்றும் கூகுள் குரூப்ஸ் ஐடிகள் பெறப்பட்டு, அவர்களுக்கு நியூஸ்லெட்டர்கள் அனுப்பும் வேலையும் நடந்து வருகிறது. இதுபோல பல லட்சம் நியூஸ்லெட்டர்கள் அனுப்பப்படுவதா விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் இணையதளம் பயன்படுத்தாத பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 110 மையங்களில் வாக்கு சீட்டு முறைப்படி ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 30ம் தேதி வரை வாக்களிக்கவும், கல்லூரி, ஷாப்பிங் மால், பீச் போன்ற இடங்களிலும் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த எடிசன் விருது வழங்கும் விழா 7 நாட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். மேலும் மலேசியாவில் அஸ்ட்ரோ தொலைக்காட்சியின் ஏற்பாட்டின் கீழ் மலேசிய நடன கலைஞர்கள், பாடகர்கள், சிங்கப்பூர் வசந்தம் டிவி நடன கலைஞர்கள், பாடகர்கள், காமெடி நடிகர்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
முதல் ரஜினி விருது…
இந்த விழாவின் சிறப்பு அம்சமாக, சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட உள்ளது. தமிழ் சினிமாவுக்கு உலகளாவிய மரியாதை, வர்த்தக எல்லையை விரிவுபடுத்தியது மற்றும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் நிகரற்றுத் திகழ்வது என பெருமை சேர்த்தவர் என்பதால் இந்த விருதினை சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் வழங்குவதாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
ரஜினி பெயரில் தனி விருது ஏற்படுத்தப்பட்டு வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவர் 12-ம் தேதி இந்த விருது வழங்கும் விழா நடக்கிறது. விஜய், தனுஷ், அஞ்சலி, ரிச்சா, கவிஞர் வாலி, இயக்குநர் எஸ்பி முத்துராமன் உள்ளிட்ட முன்னணிக் கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
250 வெளிநாட்டுப் பார்வையாளர்கள்
இந்நிகழ்ச்சியில் உள்ளூர் ரசிகர்கள், நடிகர்கள், பத்திரிகையாளர்கள் தவிர, வெளிநாட்டு அமைச்சர்கள், வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் மட்டுமே 250 பேர் பங்கேற்கவிருப்பதாக நிகழ்ச்சியின் அமைப்பாளர் ‘மைதமிழ்மூவிஸ்’ ஜெ செல்வகுமார் தெரிவித்தார்.

Friday, December 30, 2011

2011 - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள்

எல்லா படங்களுமே உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்டே உருவாக்கப்படுகின்றன.  ஆனால், வெளியாகும் எல்லா படங்களுமே வெற்றி பெறுவதில்லை. 

2011 -ல் திரைப்படம் வெளியாவதற்கு முன் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, வெளிவந்த பின் மக்களிடையே எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறத் தவறிய படங்கள் சில : 

யுத்தம் செய் : வக்கிர தாகத்தைத் தணிக்க இளம் பெண்களை வேட்டையாடும் பெரும்புள்ளிகளுக்கு எதிராக உக்கிர 'யுத்தம் செய்’யும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தினரின் கதை! நீள நீளமான ஷாட்கள், கால்களில் கவனம் குவியும் கேமரா, தரையைப் பார்த்தே பேசும் ஹீரோக்கள், 15 பேராக இருந்தாலும் ரேஷன் அரிசி, பொங்கல் பரிசு போல வரிசையில் ஒவ்வொருவராக வந்து அடிவாங்கும் அடியாட்கள்... என 'மிஷ்கின் கிளிஷே’க்கள் இதிலும் அதிகம். பலவீனமான வியூகம் காரணமாக யுத்தச் சத்தம் மட்டுமே கேட்டது.

நடுநிசி நாய்கள் : சிம்பு - கெளதம் கூட்டணியில் வெளிவந்து தமிழக இளைஞர்கள் கொண்டாடிய 'விண்னைத்தாண்டி வருவாயா' படத்திற்கு பிறகு கெளதம் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இடையே வந்த படம். பின்னணி இசையே இல்லாமல் வெளிவந்தது மட்டும் தான் இந்த படத்தின் ஹைலைட். பெண்களிடம் மிகுந்த எதிர்ப்பை சம்பாதித்ததால்  தோல்வியுற்ற படம்.

சீடன் : திருடா திருடி படத்திற்கு பிறகு சுப்பிரமணிய சிவா - தனுஷ் இணைந்த படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் இக்காலத்தில் தனுஷை சாமியாக வைத்து கதைக்களம் இருந்ததால் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.

மாப்பிள்ளை : ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தின் ரீமேக் என்ற எதிர்ப்பார்ப்புடன் வந்த படம். தனுஷ் நடிப்பில் சுராஜ் இயக்கிய படம் என்றாலும் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை. ஒரு பெருங்கூட்டத்தை நாயகன் அசால்ட்டாக அடிப்பது என்பது போன்ற விஷயங்கள் அதிகமாக  இருந்ததால், படம் பார்க்கும் கூட்டத்தை கவரவில்லை.

எங்கேயும் காதல் : ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் வெளியானதில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஜெயம் ரவி நடிக்க பிரபுதேவா இயக்கி இருந்தார்.  தொய்வான திரைக்கதை அமைப்பு என்பதால் வரவேற்பு இல்லை. 

வேங்கை : 'சிங்கம்' பெற்ற வரவேற்பை அடுத்து ஹரி இயக்கத்தில் தனுஷ் நடித்த படம். படத்தின் அடுத்த அடுத்த காட்சி என்ன, வசனம் என்ன, பாடல் எப்போது வரும் என படம் பார்த்தவர்கள் யூகிக்க கூடிய அளவுக்கு காட்சிகள் இருந்ததால்.. இந்த முறை ஹரி.. ரொம்ப் ஸாரி !

ரெளத்திரம் : 'கோ' என்ற வரவேற்பு பெற்ற படத்தினை அடுத்து ஜீவா நடிப்பில் வெளியான படம்.  வில்லன் பில்டப் ஓவராக வைத்து இறுதியில் வில்லன் யார் என்பதை காட்டும் போது மக்களிடையே சிரிப்பை வரவழைத்த படம். திரைக்கதையில் கவனமின்மையால் மக்களிடையே கவனிக்கப்படாமல் போனது. 

வந்தான் வென்றான் : ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை ஆகிய படங்களை தொடர்ந்து கண்ணன் இயக்கத்தில் ஜீவா நடித்த படம். படம் பார்த்தவர்களைக் கவரும் அம்சங்கள் குறைவாக இருந்ததால், வசூலும் குறைவாகவே இருந்தது.

வெடி : தெலுங்கில் ஹிட் அடித்த 'சௌர்யம்’ படத்தை சௌகர்யமாகக் தமிழில் கடத்திய படம்.  விஷாலின் கேரக்டரில் எந்தப் புதுமையும் இல்லை. 'அவன் இவன்' விஷாலைப் பார்த்துவிட்டு ஆசையாக வெடி பார்க்கப் போன மக்களுக்கு ஏமாற்றம். 

வித்தகன் : டான் அவதாரம் எடுத்து சமூக விரோதிகளை வேட்டையாடும் போலீஸ் 'வித்தகன்’!. போதைப் பொருள் கடத்தல்காரர்களை அரசாங்கம் விடுவிப்பது எப்படி மிலிந்த் சோமனுக்குத் தெரியாமல்போகிறது? அவர்கள் எப்படி பார்த்திபனின் கஸ்டடிக்கு வருகிறார்கள்? அந்தக் கடத்தல்காரர்களின் பாஸ் யார்? என்று எக்கச்சக்க கேள்விகளால்... விளையாட்டுத் துப்பாக்கி ஆகிவிட்டது வித்தகனின் கன்!

ஒஸ்தி :'நான் கண்ணாடி மாதிரிலே’ என நல்லவனுக்கு நல்லவனும் கெட்டவனுக்குக் கெட்டவனுமான அதிரடி அடிதடி 'ஒஸ்தி’ போலீஸ் கதை! இந்த வருட கோட்டாவுக்குத் தமிழ் சினிமாவின் 'போலீஸ் ஸ்டோரி’!. படத்தில் எல்லாரும் பக்கம் பக்கமாகப் பேசித் தீர்க்கிறார்கள். வெளியே வந்த பிறகுதான் தெரிகிறது... உலகம் இவ்வளவு அமைதியானதா என்று? 

ராஜபாட்டை :சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த கமர்ஷியல் படம். சரியான கூட்டணி.. ஆனால் தேர்ந்தெடுத்த கமர்ஷியல் கதை தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.  விக்ரமிற்கும் சரி, சுசீந்திரனுக்கும் சரி இது நிஜமான 'ராஜபாட்டை' இல்லை.

Saturday, December 24, 2011

ஷூட்டிங் பிசியால் அன்னாவை பார்க்க முடியல : விஜய்

ஊழல் எதிரான லோக்பால் மாசோதாவை தாக்கல் செய்யக் கோரி டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உண்ணாவிரதம் இருந்தார். அப்போது அவருக்கு ஆதரவாக டெல்லி நேரில் சென்று அன்னாவிற்கு தன் ஆதரவை தெரிவித்தார் இளைய தளபதி விஜய். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த அன்னா ஹசாரேவை விஜய் சநத்திக்கவில்லை. அர்ஜூன் மட்டுமே அன்னாவை நேரில் சந்தித்தார். இந்நிலையில் 'துப்பாக்கி' பட ஷூட்டிங்கில் தான் பிசியாக இருந்ததால், என்னால் அன்னாவை பார்க்க முடியவில்லை என்று விஜய் கூறியுள்ளார். அன்றைய தினம் தான் மும்பையில் இருந்ததாகவும், அதனால் தன் அப்பா சந்திரசேகரை அனுப்பி வைத்து தன் ஆதரவை தெரிவித்ததாக விஜய் கூறினார். 

விஜய் நடிக்கவிருந்த பகலவன் சீமான் பேட்டி

அதிமுக ஆட்சிக்கு வர, தனது அதிரடி அணல் பறக்கும் பிரச்சாரம் வாயிலாக முக்கிய காரணமாக இருந்தார் சீமான்.
அதேபோல தனது படங்களை முடக்க நினைத்த திமுக மற்றும் சன் டிவிக்கு எதிராக கொதித்தெழுந்த விஜயும், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனும் தங்களது விஜய் மக்கள் இயக்கத்தை அதிமுக அதரவு இயக்கமாக மாற்றினார்கள். 
இதனால் விஜய்-சீமான் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டது. தேர்தலுக்கு முன்பே விஜய்க்கு பகலவன் கதையைச் சொன்னார் சீமான். விஜய்க்கும் பகலவன் கதை பிடித்துப் போய்விட, அப்போது காவலன் படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட விஜய் “ சீமானிடம் பகலவன் என்ற கதையைக் கேட்டேன். மிகவும் பிடித்திருகிறது. எப்போது படம் தொடங்கும் என்று இப்போது சொல்ல முடியாது” என்றார்.

இன்னோரு பக்கம் பிரபல தயாரிப்பாளரான தாணு “ பகலவன் படத்தை தயாரிப்பதில் பெருமையடைகிறேன். எனது திரையுலகம் வாழ்கையின் லட்சியப் படமாக பகலவன் இருப்பான்”  என்று தான் கலந்து கொண்ட திரைவிழாக்கள் பலவற்றிலும் பேசினார். அதேபோல இந்தப் படத்தின் மொத்த பாடல்களையும் எழுதவிருந்த கவிஞர் அறிவுமதியும் “ தமிழ்த்திரையின் முக்கியமான படைப்பாக பகலவன் இருப்பான்” என்றார். ஆனால் அதிமுக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சீமான் இயக்கத்தில் பகலவன் படம் தொடங்கும் என்றுதான் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் பகலவனைத் தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. நாகை மீனவர் படுகொலைப் போராட்டம், ராஜிவ் கொலைவழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற மூவரின் விடுதலைக்காக தமிழம் முழுவதும் பொதுக்கூட்டம், அதன்பிறகு கூடன்குளம் அனு உலைக்கு எதிராக போராட்டம் என, சீமான் ஜனநாயக வழியில் நாம் தமிழர் இயக்கம் மூலம் தொடர்ந்து போராடி வருகிறார். அவரது தலைமையிலான இயக்கமும் வளர்ச்சியை எட்டியிருகிறது. 

இந்நிலையில் சீமானின் தமிழ்தேசியத்தை வலியுறுத்தும் விதமாக உருவாகியிருக்கும் பகலவன் படத்தில் நடித்தால் தனக்கு வெற்றிபடமாக அமையும் அதேநேரம், நாம் தமிழர் இயக்கத்துக்கு பெரிய பிரச்சார சாதனமாக ,அந்த இயக்கத்தின் கொள்கைகளை விளம்பரம் செய்தமாதிரி ஆகிவிடும் என்று எஸ்.ஏ.சியும், விஜயும் முடிவெடுத்து, இந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்களாம்.

பகலவனில் விஜய் நடிக்க மறுத்துவிட்டார்  என்ற தகவல் நம்மை எட்டியதுமே, இதை உறுதிபடுத்திக்கொள்ள சீமானை தொடர்பு கொண்டு கேட்டப்போது. “ ஆமாம்! விஜய் பகலவனில் நடிக்க வில்லை. ஏன் என்ற காரணத்தை நான் இப்போது வெளிபடுத்த முடியாது. தற்போது தமிழ்மக்கள் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிறார்கள். அதற்குப் போராடவே நேரம் போதவில்லை. அதனால் சினிமா இயக்க இப்போதைக்கு நேரமில்லை. எனவே பகலவனை படமாக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. 

அப்படியே படமாக்கினாலும் அதில் வேறு நடிகர்கள் நடிப்பார்கள். பகலவனக்கு முன்பு கோபம் படத்தை இயக்கும் திட்டம் இருக்கிறது” என்று தெள்ளத்தெளிவாக சொன்னார் நம்மிடம். ஆனால் விஜய் பகலவனில் நடிக்க மறுத்த காரணத்தை எக்காரணத்தைக் கொண்டும் அவர் வெளிபடுத்த தயாராக இல்லை. அதேபோல தம்பி படத்தின் பாகம் இரண்டை எடுக்க இருப்பதாக வந்த தகவலைக் கேட்டும் சிரித்தார் நம்மிடம்.

Wednesday, December 14, 2011

தமிழில் பிடித்த நடிகர்கள் அபிசேக் பேட்டி


சீயான் விக்ரம், இளைய தளபதி விஜய், சூர்யா மற்றும் சிம்புவை எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என அபிஷேக் பச்சான் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவின் பங்கு முக்கியமானது. அதும் சமீப காலத்தில் வெளியான தமிழ் திரைப்படங்கள் தெளிவான திரைக்கதையில் வெளியாகிறது என்று கூறிய அபிஷேக், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் மற்றும் சிம்புவின் படங்களை விரும்பி பார்த்த வருவதாகவும் அபிஷேக் கூறினார்.
இவர்களின் நடிப்பும், ஆக்ஷனும் தன்னை வெகுவாக கவர்ந்து உள்ளதாக அபிஷேக் கூறினார். மேலும் நேரடி தமிழ் படங்களில் நடிக்க ஆசை இருப்பதாகவும், சரியான கதை அமைந்தால் நடிப்பேன் என்று அபிஷக் கூறியுள்ளார்.

Monday, December 12, 2011

விஜய் சீமான் பட நிலை என்ன?

விஜய்யிக்காக காத்திருந்த சீமான் தற்போது பொறுமையை இழந்துவிட்டதாக தெரிகிறது. இளைய தளபதி விஜய்யை வைத்து 'பகவலன்' திரைப்படத்தை இயக்க முடிவு செய்த சீமான் விஜய்யின் கால்ஷீட்டிற்காக காத்திருந்தார். ஆனால்  இளைய தளபதி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன், மற்றும் விஜய் இயக்கும் படங்களில் பிசியாக இருக்கிறார். தற்போது 'பகவலன்' படத்தில் நாயகனாக விஷால் அல்லது கார்த்தியை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளாராம் சீமான். ஆனால் இது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.