பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Showing posts with label நண்பன். Show all posts
Showing posts with label நண்பன். Show all posts

Wednesday, January 2, 2013

2012 Top 10 Tamil Movies


1st Place – Thuppakki
2nd Place – Nanban
3rd Place – Oru Kal Oru Kannadi
4th Place – Naan Ee
5th Place – Vazhakku Enn 18/9
6th Place – Naduvula Konjam Pakkatha Kaanom
7th Place – Kadhalil Sothapuvathu Eppadi
8th Place – Kumki
9th Place – Pizza
10th Place – Neethane En Ponvasantham

2012ம் ஆண்டின் Top 10 Celebrities



தமிழ் திரையுலகில் 2012ம் ஆண்டு முதல் பத்து இடங்களை பிடித்த முன்னணி நடிகர், நடிகைகளின் வரிசையை சினி உலகம் தெரிவு செய்துள்ளது.
ரசிகர்களாக இருந்தாலும் வசூலாக இருந்தாலும் தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை இளைய தளபதி விஜய்க்கே அதிகமான வரவேற்பு இருக்கிறது.

அதே போல் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், சூர்யா, சியான் விக்ரம், சிம்பு ஆகியோர் அடுத்த நிலையில் உள்ளனர்.

இந்த வருடம் அஜித் குமார் பில்லா 2, சூர்யா மாற்றான், விக்ரம் தாண்டவம், சிம்பு போடா போடி ஆகிய படங்களில் நடித்திருந்தனர்.

இதே போல் கதாநாயகிகளின் வரிசையில் காஜல் அகர்வால், ஹன்சிகா, சமந்தா, அமலா பால், அஞ்சலி ஆகியோர் சினி உலகம் தெரிவு செய்துள்ள டாப் 10 நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர்.

காஜல் மாற்றான், துப்பாக்கி, ஹன்சிகா ஒரு கல் ஒரு கண்ணாடி, அமலா பால் முப்பொழுதும் உன் கற்பனைகள், காதலில் சொதப்புவது எப்படி, சமந்தா நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம், அஞ்சலி கலகலப்பு மசாலா கபே படங்களில் நடித்தனர்.

Thursday, December 27, 2012

2012ஆம் ஆண்டில் சாதனை படைத்த மதன் கார்க்கி

2012ஆம் ஆண்டில் அதிகளவில் ஹிட் பாடல்களை கொடுத்திருப்பது மதன் கார்க்கி தான்.
கவிஞர் வைரமுத்துவின் மகனாக இருந்தாலும், அவரின் சிபாரிசு ஏதும் இல்லாமல் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

2012ஆம் ஆண்டில் 14 படங்களில் மொத்தம் 35 பாடல்களை எழுதியுள்ளார். இவற்றில் 15 பாடல்கள் சூப்பர் ஹிட்டானவை.
இவற்றின் பட்டியல்,
அஸ்க் லஸ்கா - நண்பன்.
அழைப்பாயா - காதலில் சொதப்புவது எப்படி.
பார்வதி பார்வதி - காதலில் சொதப்புவது எப்படி.
வீசும் வெளிச்சத்திலே - நான் ஈ.
கொஞ்சம் கொஞ்சம் - நான் ஈ.
ஈடா ஈடா - நான் ஈ.
வாய் மூடி - முகமூடி.
மாயாவி - முகமூடி.
கால் முளைத்த பூவே - மாற்றான்.
ரெக்கை முளைத்தேன் - சுந்தர பாண்டியன்.
கூகுள் கூகுள் - துப்பாக்கி.
அண்டார்டிகா - துப்பாக்கி.
ஏலே கீச்சான் - கடல்.
அடியே - கடல்.
அன்பின் வாசலிலே - கடல்.

Tuesday, February 28, 2012

அடுத்த படம் ! : ஷங்கர்


ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'நண்பன்'. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பையும் பெற்றது.

ஷங்கரின் இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. தமிழில் கமல், தெலுங்கில் பிரபாஸ், மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷங்கர் என்றும், இப்படத்தில் கெஸ்ட் ரோலில் ஜாக்கி சான் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

இப்படத்தினை இதுவரை இந்திய திரையுலகமே கண்டிராத மெகா பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்திருக்கார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் என்று கோடம்பாக்க தகவல்கள் கூறின.

ஆனால் இந்த தகவல்கள் அனைத்தையும் மறுத்து இருக்கிறார் ஷங்கர். இதுகுறித்து ஷங்கர் தனது இணையத்தில் " நண்பன் படத்தை மிகப்பெரிய வெற்றி பெற வைத்ததற்கு நன்றி.  அதற்கு உறுதுணையாக இருந்த எல்லா ஊடகங்களுக்கும் நன்றி.

இப்போது எனது அடுத்த படத்தின் கதையை தயார் செய்து வருகிறேன்.
இப்படத்திற்காக இதுவரை நான் யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை. "
 என்று தெரிவித்து இருக்கிறார்.

Friday, February 24, 2012

Nanban second only to Endhiran


The strong run that Nanban is having in certain circuits even a month after its release has got the distributors raving about the wonders it has performed at the box office. Nanban has shown nothing less than phenomenal performance in the Madurai and Coimbatore belts. The distributors for these areas, Ramesh and Sivakumar, respectively have stated that almost all centres are witnessing repeat audiences and that is sustaining the collections in a big way. The gross collection of Nanban from 4 circuits of Coimbatore is around Rs. 5.5 crores. This is next only to Superstar’s Endhiran that had done a business of Rs. 8.0 crores during its initial month in the same 4 circuits. Yes, a difference of 2.5 crores in a months run in a district between two movies is quite huge. But, one must also take into account the fact that the tickets for Endhiran during the initial week had sold out for Rs. 500 and above while Nanban tickets were in the normal range of Rs 70-100 in both Madurai and Coimbatore. What does this mean? Well, it’s a complex issue of various factors. That a star can command houseful audiences even with tickets selling for Rs.500 is an indication of the crowd pulling power that he has. At the same time, if Nanban has gone on to make nearly 70% of Endhiran’s collection within the same running period, it means that it commanded a lot of repeat audiences, which the distributors say is true. Of course, we should also understand that the lower ticket rates is also a factor in attracting repeat audiences; which is something that Endhiran could not have done with ticket rates hitting the ceiling.

All said and done, the final numbers state one fact; in many circuits the business that Nanban has generated is second only to Endhiran; and it is definitely the highest ever numbers generated by a Vijay starrer; not to forget Jiiva. And, in the midst of Endhiran, Nanban, Rajni and Vijay, we should not forget the one man common to all this- shankar. He has truly emerged as the biggest revenue generating director of the industry.

Sunday, February 12, 2012

விஜயின் விடுமுறை கொண்டாட்டம்


பெப்சி, தயா‌ரிப்பாளர்கள் சங்க கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது நடிகர்களுக்கு பல வகையில் வசதியாகிவிட்டது. சிலர் ஓய்வு எடுக்கிறார்கள், சிலர் டூர் கிளம்பியிருக்கிறார்கள். விடுமுறையை ஆக்கப்பூர்வமாக செலவழிப்பது நடிகர் விஜய்.
நடிப்பதற்கு அடுத்து விஜய்க்கு சந்தோஷமான விஷயம் ரசிகர்களை சந்திப்பது. ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் விஜய் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு விஜயம் செய்வார். ரசிகர்களை சந்திப்பார், ஏழைகளுக்கு உதவிகள் செய்வார்.
இந்தமுறை நண்பன் வெளியாகியிருக்கிறது. விஜய் கே‌ரிய‌ரில் முக்கியமான படம். அதனால் உற்சாகமாக தனது பயணத்தை தொடர்கிறார். பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து நண்பன் பாட்டு பாடி அவர்களை மகிழ்வித்தவர் மதுரை தங்க ‌ரிகல் திரையரங்குக்கும் சென்றார். ரசிகர்களை சந்தித்தார். மனவளர்ச்சி குறைந்தவர்களுக்கு உதவிகளும் வழங்கினார்.
விருதுநகர் அப்ஸரா திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் பேசியவர், சத்யராஜுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவு நண்பன் மூலம் நிறைவேறியது என்றார். நண்பன் படமும், விஜய்யின் விஜயமும் அவரது இமேஜை மேலும் உயர்த்தியிருக்கிறது.

யுகே-யில் நண்பன்


யுகே பாக்ஸ் ஆஃபிஸில் நண்பன் ம‌ரியாதைக்கு‌ரிய இடத்தைப் பிடித்திருக்கிறது. விஜய், நண்பன் காம்பினேஷன் என்பதால் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். விஜய் படங்களில் இதுதான் யுகே-யில் அதிகம் வசூல் செய்தப் படம் எனவும் சுறப்படுகிறது.
நண்பன் நான்காவது வார இறுதியில் இரண்டு திரையிடல்களில் 1,698 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுகே வசூல் 2,14,735 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் சுமார் 1.66 கோடி.
இது சூர்யாவின் சிங்கம், 7 ஆம் அறிவு படங்களைவிட அதிகம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

Friday, February 10, 2012

விஜய்யின் நண்பன் சுற்றுப்பயணம்

கொலிவுட்டில் நண்பன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நாயகன் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள மதுரைக்கு இளையதளபதி விஜய் வந்தார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாயகன் விஜய் பதில் அளித்தார்.
கேள்வி: பல்வேறு படங்களில் நடித்துள்ளீர்கள். நண்பன் படம் நடித்து முடித்த பின்பு மதுரைக்கு வந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
பதில்: பல தடவை மதுரைக்கு வந்துள்ளேன். நண்பன் ரிலீசுக்கு பின்பு சந்திக்கும் ரசிகர்களை நண்பர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். திரைப்படத்தின் வெற்றியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
குடும்பத்தில் தாய்-தந்தை, மனைவி, மாமன், மச்சான் என எல்லோரும் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் சில விடயங்களை சொல்ல முடியாது.
ஆனால் நண்பர்களிடம் எல்லா விடயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். யாரும் இல்லாமல் இருந்து விடலாம், நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. நண்பன் திரைப்படத்தில் ஒரு டயலாக்கை சொல்வேன். பிடித்த தொழிலை தேர்ந்தெடுத்து அதில் திறமையாக விடா முயற்சியுடன் ஈடுபட்டால், வெற்றி கிடைக்கும்.
இந்த டயலாக்கை நீங்களும் பின்பற்றி உங்கள் தொழிலில் நம்பர்-1 ஆக வரவேண்டும் என்பதே எனது விருப்பம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனது பெற்றோர் என்னை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டனர். ஆனால் பல போராட்டங்களுக்கு பிறகு நான் சினிமா துறைக்கு வந்தேன்.மதுரையில் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு அலாதியானது, மறக்க முடியாதது.
கேள்வி: நண்பன் படத்தில் புது டீம் அமைத்து பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?
பதில்: நன்றாகவே இருந்தது. சக நடிகர்களான ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஏற்கனவே எனக்கு நெருங்கிய நண்பர்கள். இதனால் நண்பன் படத்தில் நடிப்பதில் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை.
கேள்வி: இந்தியில் அமீர்கான் நடித்த கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளீர்கள். அமீர்கான் நடித்த காட்சிகளை பார்த்தீர்களா?

பதில்: படத்தை ஒரு தடவை பார்த்தேன். படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பு அமீர்கான் நடித்த காட்சிகளை பார்த்தேன். பின்னர் என்னுடைய பாணியில் நண்பன் படத்தில் நடித்துள்ளேன்.

கேள்வி: 50க்கும் மேற்பட்ட கதாநாயகிகளுடன் நடித்துள்ளீர்கள். அதில் உங்களுக்கு பிடித்த கதாநாயகி யார்? பதில்: சிம்ரன்.
பின்னர் நண்பன் திரைப்படத்தின் ஒரு பாடலை விஜய் பாடினார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய விசில் சத்தம் தியேட்டரை அதிர வைத்தது.
அதன்பிறகு தியேட்டர் மாடிக்கு சென்ற விஜய், அங்கிருந்து ரசிகர்களை பார்த்து கைசையத்தார். விஜய்யின் வருகையையொட்டி தியேட்டரில் பொலிஸ் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

மனநலம் குன்றிய மாணவர்களுடன் நாயகன் விஜய்

கதைக்களம் தரமாக அமைந்தால் இரண்டு நாயகர்களுடன் இணைந்து நடிப்பதாக நாயகன் விஜய் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் நாயகன் விஜய் பயணித்துவருகிறார்.
தமிழ்நாட்டில் நண்பன் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை விஜய் தந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் மதுரையில் நண்பன் திரையிடப்பட்டுள்ள தங்கரீகல் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் நண்பன் வெற்றியை நாயகன் விஜய் கொண்டாடினார்.
இதையடுத்து மதுரையில் மனநலம் குன்றிய மாணவர்கள் மத்தியிலும் நாயகன் விஜய் உரையாடி, அவர்களுக்கும் இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.
அப்போது நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்,
நண்பன் திரைப்படத்தை போல இரண்டு, மூன்று கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிப்பீர்களா?
விஜய்: ஒரு திரைப்படத்திற்கு கதை தான் நாயகன். நாங்கள் இரண்டாம் பட்சம் தான். எனவே கதை திருப்திகரமாக இருந்தால் நடிப்பேன்.
நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?
விஜய்: பிரண்ட்ஸ் திரைப்படம் போல ஒரு கதை அமைந்தால் இணைந்து நடிப்பேன்.
தற்போது நீங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படம்?
விஜய்: துப்பாக்கி என்று பதிலளித்தார்

Friday, February 3, 2012

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய்


கோவையில் நண்பன் பட வெற்றிக்கு ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவிப்பதற்காக நடிகர் விஜய் நேற்று (2.2.2012) கோவை வந்தார்.
நண்பன் படம் வசூல் சாதனை படைத்து கொண்டிருப்பதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆதரவற்ற முதியோர் இல்லத்தை சேர்ந்த 110 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.

அங்கு படிக்கும் மாணவர்கள் சுந்தரம், ரகு ஆகியோருக்கு 2 மடிக்கணினி வழங்கினார். இதை தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஆதரவற்ற முதியோர் இல்லத்தை சிறப்பாக நடத்தி வரும் யுனைடெட் நிர்வாகி ராதாகிருஷ்ணனின் சேவையை பாராட்டி விருது வழங்கினார்.
அப்போது விஜய் நிருபர்களிடம் கூறியதாவது, எனது ரசிகர்கள் அனைவரும் எனக்கு நண்பர்களாக உள்ளனர். நண்பன் பட வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள்.
நண்பன் படத்தை பார்த்து திரையுலக பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். என்னுடன் நடித்த ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் எனக்கு எப்போதும் நல்ல நண்பர்களாக உள்ளனர்.
சத்யராஜுடன் நடிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அந்த சமயத்தில் தான் நண்பன் படத்தில் சத்யராஜுடன் நடிக்க அழைப்பு வந்தது. அவர் புதுவிதமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து ரசிகர்கள் முன் தோன்றி நன்றி தெரிவிக்க, கோவையில் உள்ள அர்ச்சனா திரையரங்கிற்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் கோவை சென்ட்ரல், கனகதாரா திரையரங்கிற்கு சென்று ரசிகர் முன் தோன்றி நண்பன் பட வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Wednesday, February 1, 2012

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்


4. கொள்ளைக்காரன்
விதார்த் நடித்திருக்கும் இப்படம் பரவாயில்லை என்ற விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது. இப்படம் சென்ற வார இறுதியில் 87,800 ரூபா‌ய்களை வசூலித்துள்ளது. இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் இதன் மொத்த சென்னை வசூல் 28 லட்சங்கள்.
3. மௌனகுரு
சென்ற வார இறுதியில் 1.6 லட்சங்களை வசூலித்த இப்படம் ஆறு வாரங்கள் முடிவில் 1.47 கோடியை சென்னையில் வசூலித்துள்ளது.
2. வேட்டை
லிங்குசாமியின் இந்த லா‌ஜிக் இல்லா படம் பாக்ஸ் ஆஃபிஸில் பெ‌ரிய மே‌ஜிக் எதையும் நிகழ்த்தவில்லை. சுமாரான வசூல்தான். சென்ற வார இறுதியில் 25.9 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 2.6 கோடியை தனதாக்கியுள்ளது.
1. நண்பன்
மீண்டும் அதே முதல் இடத்தில் நண்பன். மற்ற இடங்களில் எப்படியோ… சென்னையில் படம் பட்டையை கிளப்புகிறது. இதன் சென்ற வார வசூல் 51 லட்சங்கள். இதுவரை இப்படம் 6.22 கோடிகளை வசூலித்துள்ளது.

முதல்ல சூர்யா, இப்ப விஜய்


நடிகை காஜல் அகர்வால் ஒரே குஷியாக உள்ளாராம். அதற்கு காரணம் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்.
நடிகை காஜல் அகர்வால் ஆண்கள் பத்திரிக்கைக்கு அரை நிர்வாணப் போஸ் கொடுத்தார் என்று பிரச்சனை வந்தபோதிலும் அவர் காட்டில் ஜில்லென்று என்று மழைக் கொட்டிக் கொண்டு தான் இருக்கிறது. தெலுங்கில் முன்னணி நாயகர்களின் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இது தவிர தமிழில் சூர்யாவுடன் மாற்றான் படத்தில் ஒப்பந்தமாகி ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.
ஏற்கனவே தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யாவுடன் நடித்த பெருமிதத்தில் இருந்த காஜல் அடுத்து நம்ம இளைய தளபதி விஜயுடன் துப்பாக்கி படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். அப்புறம் அவர் குஷியாக இருக்க மாட்டாரா என்ன. மாற்றான் ஷூட்டிங் முடிந்த கையோடு விஜயுடன் நடிக்க சென்றுவிட்டார் காஜல்.
ஏய், பார்த்தியா முதலில் சூர்யாவுடன் நடித்தேன். அந்த ஷூட்டிங் முடிந்த கையோடு தற்போது கோலிவுட்டின் இன்னொரு முன்னணி ஹீரோவான விஜய்யுடன் நடிக்கிறேன். இதெல்லாம் நான் செய்த பாக்கியம் தான் என்று தனது தோழிகளிடம் சொல்லி, சொல்லி பூரிக்கிறாராம்.
பத்திரிக்கை பிரச்சனைக்குப் பிறகு காஜலின் மார்க்கெட் சரியும் என்று நினைத்தவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. அது இப்போதைக்கு சரியாது என்றுதான் தெரிகிறது.

Tuesday, January 31, 2012

இருநூறு கோடியை தொட்ட விஜயின் நண்பன்


நல்ல விமர்சனத்துடனும் நல்ல வரவேற்புடனும் வெற்றி நடை போடும் விஜயின் நண்பன் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
முதல் நாள் வசூல் 15 கோடி 
இரண்டாம் நாள் வசூல் 14.5கோடி 
மூன்றாம் நாள் வசூல் 14 கோடி 
நான்காம் நாள் வசூல் 12.6 கோடி 
ஐந்தாம் நாள் வசூல் 11.2 கோடி 
ஆறாம் நாள் வசூல் 10.4 கோடி 
ஏழாம் நாள் வசூல் 8.3 கோடி  
எட்டாம் நாள் வசூல் 7.4 கோடி 
ஒன்பதாம் நாள் வசூல் 6.4 கோடி 
பத்தாம் நாள் வசூல் 5.8 கோடி 
பதினோராம் நாள் வசூல் 4.8 கோடி 
பன்னிரண்டாம் நாள் வசூல்  4.5 கோடி 
பதின்மூன்றாம் நாள் வசூல்  4.3 கோடி 
பதினான்காம்  நாள் வசூல் 3.5 கோடி 
பதினைந்தாம் நாள் வசூல்  3 கோடி 
பதினாறாம் நாள் வசூல் 2.9 கோடி 
பதினேழாம் நாள் வசூல் 2.3கோடி 
பதினெட்டாம் நாள் வசூல் 2 கோடி 
பத்தொன்பதாம் நாள் நாள் வசூல் 1.8 கோடி 
மொத்தம் 134 கோடி 

தெலுங்கு வசூல்

முதல் நாள் வசூல் 14.2  கோடி 
இரண்டாம் நாள் வசூல் 13 கோடி 
மூன்றாம் நாள் வசூல் 12.6 கோடி 
நான்காம் நாள் வசூல்11.4  கோடி 
ஐந்தாம் நாள் வசூல் 10 கோடி 
மொத்தம் 61 கோடி 

நண்பனை சந்தோசப்படுத்தும் விஜய்


நண்பன் படம் வெளியான வேளை விஜய் சென்னையில் இல்லை தனது அடுத்த படமான துப்பாக்கி பட படப்பிடிப்பில் மும்பையில் இருந்தார். தற்பொழுது விஜய் தான் நடிக்கும் படங்களுக்கு சிறிது காலம் பிரேக் போட்டு விட்டு தற்பொழுது நண்பன் பட விளம்பரங்களில் ஈடுபட்டுள்ளார். தமிழ் நாடு முழுவதும் இப்படம் வெளியான தியேட்டர் சிலவற்றிற்கு செல்ல உள்ளார். 
இன்று விஜய் கோயம்புத்தூரில் உள்ள அர்சனா மற்றும் கே.ஜி தியேட்டருக்கு விஜயம் செய்துள்ளார். நாளை திருப்பூரில் உள்ள உஷா தியேட்டருக்கு விஜயம் செய்ய உள்ளார். திருப்பூர் ரசிகர்கள் இந்த தியேட்டருக்கு சென்றால் விஜயை சந்திக்கும் வாய்பை பெறலாம். அடுத்து விஜய் செல்ல உள்ள தியேட்டர் விபரங்களை உடனுக்குடன் தருவோம் இணைந்திருங்கள். 

இனிமேல் மொழிமாற்றம் கிடையாது: ஷங்கர்


இனிமேல் மொழிமாற்றுப் படங்களை இயக்கமாட்டேன் என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படம் வெளியாகி, வெற்றியடைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இத்திரைப்படம் ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் மொழிமாற்றமாகும். இனிமேல் மொழிமாற்றுத் திரைப்படங்களை இயக்கமாட்டேன் என்று இயக்குனர் ஷங்கர் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பி்ல் சங்கர் கூறியதாவது, ஹிந்தியில் தயாரான 3 இடியட்ஸ் திரைப்படத்தை தமிழில் நண்பன் பெயரில் மொழிமாற்றம் செய்தது பெரிய சவாலாக இருந்தது.
உண்மைப்படத்தின் தன்மைகள் கெடாதவாறு படத்தை எடுக்கவேண்டும் என்று விஜய்யிடம் கேட்டேன். விஜய் தனது வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமாக நடித்துக் கொடுத்தார்.
3 இடியட்ஸ் திரைப்படத்தை விட நண்பன் திரைப்பட பாடல்கள் நன்றாக இருந்ததாக பாராட்டினார்கள்.
மொழிமாற்றுத் திரைப்படத்தை இயக்கியது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இனிமேல் மொழிமாற்று திரைப்படங்களை இயக்கமாட்டேன்.
நான் தயாரித்து பல படங்கள் நன்றாக ஓடவில்லை. இதனால் நிறைய பணத்தை இழந்துவிட்டேன்.தற்போது அடுத்து தயாரிப்பதற்காக ஓர் நல்ல கதையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து எந்த நடிகரை வைத்து படம் இயக்குவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை.
நிறைய கதைகள் மனதில் உள்ளது, அடுத்த படம் எனது சொந்தக சிந்தனைக் கதையாகவே இருக்கும்.மார்ச் மாதத்தில் எனது அடுத்த திரைப்படம் பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Sunday, January 29, 2012

நண்பன் சிறப்பு பார்வை


 தினமலர் - விமர்சனம்
த்ரி இடியட்ஸ் எனும் பெயரில் இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற இந்தி திரைப்படம் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிக்க நண்பன் ஆகியிருக்கிறது!

பெற்றவர்களின் ஆசையை பிள்ளைகள் மீது திணிக்காமல் படிப்பு விஷயத்தில் பிள்ளைகளின் விருப்பப்படி விட்டால், அவர்கள் விரும்பிய துறையில் அவரவர் முன்னுக்கு வரமுடியும் எனும் கருத்தை கதையாக்கி, அதை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும் கமர்ஷியலாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை அமர்க்களமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

விஜய், பஞ்சவன்பாரி வேந்தனாக பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிறார். இவராகத்தான் இருக்கமுடியும் "கொசக்சி பச புகழாகவும் என்பதை ஸ்ரீவத்சன் எனும் சைலன்சர் சத்யன் அடிக்கடி சொல்வதிலிருந்து ஆரம்பத்திலேயே யூகிக்க முடிவது விஜய்யின் பாத்திரத்தை என்னவோ விஜய் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நடித்து அதை சரிசெய்திருக்கிறார். பஞ்சவன் பாரிவேந்தன் கொசக்சி பசபுகழ் என எண்ணற்ற முகங்கள் விஜய்க்கு இப்படத்தில் இருந்தாலும் இலியானாவுடன் காதல் வயப்பட்டு டூயட் பாடும் விஜய்யின் இயல்பான முகமே இளமையாகவும் இனிமையாகவும் இருக்கிறது. விஜய் பாத்திரத்தை பொறுத்தவரை ஆயிரம் நிறை, குறைகள் சொன்னாலும் ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காமல் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காமெடியிலேயே கலக்கி இருப்பது வரவேற்கத்தக்கது!

சேவற்கொடி செந்தில் - ஜீவாவுக்கும், வெங்கட் ராமகிருஷ்ணன் எனும் ஸ்ரீகாந்த்துக்கும் ஆல் இஸ் வெல் என நெஞ்சில் கைவைத்துக் கொண்டு கவலைகளை மறந்திருக்க சொல்லும் விஜய்யின் சொல்-செயல்தான் வேதவாக்கு என்றாலும் ஆங்காங்கே அதிலும் நடிப்பிலும் மிளிர்ந்து நிற்கிறார் ஜீவா. பலே...பலே!

கதாநாயதி இலியானா ரியா எனும் பாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் மட்டுமே அவருக்கு பில்-டப்புகள் பிரமாதப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் இருக்காண்ணா, இல்லியண்ணா இடுப்பானா இலியானா... பாடலில் இலியானா பிரமாதம்ண்ணா! அதேமாதிரி இக்கட்டான சூழ்நிலையில் அக்கா அனுயாவிற்கு பிரசவம் பார்க்கும் இன்ஜினியர் விஜய்க்கு இளம் டாக்டரான இலியானா வெப்காமிரா வீடியோவில் பிரசவ மருத்துவ குறிப்புகள் கொடுக்கும் இடங்களில் பிரமாதமாக நடித்தும் இருக்கிறார். பேஷ், பேஷ் கீப் இட் அப்!

இலியானாவின் அப்பாவாகவும் பொறியியல் கல்லூரியின் பிரின்ஸ்பாலாகவும் வில்லனாகவும் விருமாண்டி சந்தனம் கேரக்டரில் வரும் மூத்த நடிகரின் கெட்-அப்பும் செட்-அப்பும் ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு வேண்டுமானால் ஓகே. நண்பன் மாதிரி ஒரு தமிழ்படத்திற்கு பெரிய பலவீனமாகும் அவரும் அவரது பாத்திரமும் என்றால் மிகையல்ல!
ஸ்ரீவத்சன் எனும் சைலன்சராக சத்யன் கிறுக்குதனமாக செய்யும் காரியங்கள் சில இடங்களில் கடிக்கவும் பல இடங்களில் சிரிக்கவும் செய்கிறது. ஒரிஜினல் பஞ்சவன்பாரிவேந்தன் எஸ்.ஜே.சூர்யா, பன்னீர்செல்வமாக-வசந்த் விஜய், ரியாவின் மாப்பிள்ளை ராகேஷாக வரும் டி.எம். கார்த்திக், கல்வி அமைச்சர் ஷண்முகசுந்தரம், விஜய்யின் வளர்ப்பு தந்தை அஜய் ரத்னம், விஜய்யின் தந்தை ராமு, மில்லிமீட்டர் ரின்சன், ஜீவாவின் தந்தை கும்பகோணம் அம்பி, ரியாவின் அக்கா ஸ்வேதாவாக வரும் அனுயா, ஸ்ரீயின் அம்மா உமா பத்மநாபன், ஜீவாவின் அம்மா நிர்மலாவாகவரும் சந்திரா உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டு நண்பனுக்கு நயம் சேர்த்திருக்கின்றனர் என்றால் மிகையல்ல!

நம் காதோரம் இன்னமும் இழையோடும் ஹாரிஸ் ஜெயராஜின் இனிய இசையும், மனோஜ் பரமஹம்சாவின் காண்போர் கண்ணுக்குள்ளேயே எப்போதும் நிற்கும்படியான ஒளிப்பதிவும் நண்பனின் பெரும்பலம்!

ஆயிரம்மிருந்தும் வசதிகள் இருந்தும் பிரமாண்டத்திற்கு பெயர்போன ஷங்கர், இயற்கை உபாதைகள் வருவது, போவதையெல்லாம் பிரமாண்டபடுத்தியிருப்பது சைலன்ஸ் காமெடி என்றாலோ, இப்படத்தில் வரும் சைலன்ஸரி (சத்யன்)ன் காமெடி மட்டுமென்றாலோ ஓகே! ஜீவா, ஸ்ரீகாந்தை எல்லாம் பிரின்ஸிபால் வீட்டு வாசலில் ஒன்பாத்ரூம் போகவிடுவதையும், ஆ, ஊ என்றால் ஜட்டியோடு டான்ஸ் ஆட விடுவதையும் காலில் விழ செய்வதையும் எற்றுக் கொள்ளவே முடியவில்லை. என்னதான் இளைஞர் பட்டாளம் காலேஜ் கேம்பஸ், ராகிங், ரவுசு, ரீமேக்கதை இத்யாதி, இத்யாதி என்றாலும் "உவ்வே என குமட்டல் வருவதை இயக்குநர் ஷங்கர் நினைத்திருந்தால் நிச்சயம் தவிர்த்திருக்கலாம்!

ஆக மொத்தத்தில் எல்லாவற்றையும் ரசிக்க தெரிந்தவர்களுக்கு "நண்பன் - நன்"ஃபன்




-------------------------------------------------------------



குமுதம் சினி விமர்சனம்


விஜய்யின் அடிதடி இல்லை, ஷங்கரின் சூப்பர் ஹீரோ சாகசம் இல்லை. இருவருமே "3 இடியட்ஸை மட்டும் மனதில் வைத்து நண்பனுக்காக கைகோர்த்திருக்கிறார்கள்.

மதிப்பெண்களுக்கும் வயதுக்கே உரிய சேட்டைகளுக்கும் இடையே மாணவர்கள் ரன் எடுக்க ஓடும் இன்ஜினீயரிங் கல்லூரிதான் கதைக்களம். இயந்திர வாழ்க்கை வாழும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் "ஆல் இஸ் வெல் என்று தட்டிக்கொடுக்க ஒருவன் வருகிறான். அவனால் இரண்டு நண்பர்களுக்கு நிகழும் இயல்பான அற்புதங்கள்தான் கதை.

சைலண்ட்டான சாதனை மாணவன் பாரிவேந்தனாக விஜய் ரசிக்க வைக்கிறார். ஆசிரியர்களிடம் சின்னச் சின்ன புத்திசாலித்தனங்களை வைத்தே விஜய் பண்ணும் கலாட்டாக்கள் வெகு சுவாரஸ்யம். தெனாவெட்டுப் பேராசிரியர் விருமாண்டி வெளுத்து வாங்கியிருக்கிறார். விஜய்யின் வெறித்தனமான நண்பர்களாக ஜீவாவும் ஸ்ரீகாந்தும்! ஈகோ பார்க்காமல் சக ஹீரோ ஒருவருக்கு சலாம் போட்டு நடித்துள்ள இருவருக்கும் அழுத்தமான ஒரு சபாஷ்!

பெல்லி இடுப்பும் பளீர் சிரிப்புமாக வரும் இலியானா கொள்ளை அழகு.

விஜய்யோடு மோதிக்கொண்டே இருக்கும் சத்யனின் ரவுசு வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. தமிழ் தெரியாத சத்யனின் சொற்பொழிவில் வார்த்தைகளை மாற்றிப்போட்டு விஜய் குழப்புவது தமிழ் ரசிகனுக்கு அறிஞர் அண்ணா காலத்து ஐடியா. ஜீவாவின் கறுப்பு நிற அக்காவை மையமாகக் கொண்ட தமாஷில் "அங்கவை சங்கவை மேட்டர்தான் நினைவுக்கு வருகிறது. தவிர்த்திருக்கலாம்.

வெளிநாட்டில் டூயட், கிராபிக்ஸ் டெக்னிக்குகள் உள்ளிட்ட தனது ஏரியாவை நக்கலடித்துக்கொண்டே பயன்படுத்தவும் செய்திருப்பது இயக்குநர் ஷங்கரின் சாமர்த்தியம்தான்.

"அஸ்க்கு லஸ்க்கா ஈமோ பாடலில் இசையமைப்பாளர் ஹாரீஸ் வசீகரிக்கிறார். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு ரம்மியம்.

தூக்கலான பிரச்சாரம், நாடகத்தனம் என்று அங்கங்கே உறுத்தினாலும் "நண்பன் கடைசியில் நெருக்கமான தோழனாகி விடுகிறான்.

நண்பன் - ஆல் இஸ் வெல்!

குமுதம் ரேட்டிங் - ஓகே.



------------------------------------------------------------




கல்கி விமர்சனம்


ஷங்கரின் க்ளிஷே க்ளிசரின் கலக்காத ஷங்கர் படம் - நண்பன். த்ரி இடியட்ஸின் ரீமேக். எனினும் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்திப் போகிற இயக்கத்தில், நிதானம் தவறாத ட்ராவிட் பேட்டிங்கின் ஆர்ப்பாட்டமில்லா அழகு. கல்வியின் பயனே திறமையை ஒளிரச் செய்வதுதான்; மங்கச் செய்வதல்ல என்ற உயிரிழையில் படம் முழுக்க ஆங்காங்கே ஹாஸ்யம் பொதிந்த சுவாரஸ்ய முடிச்சுகள்.

பத்துப் பேரை ஒரே அடியில் வீழ்த்தி, எட்டுப் பக்கங்களில் வசனம் பேசி, ஆறு பாடல்களில் துள்ளிக்குதித்து, நான்கு சண்டைக் காட்சிகளில் ரத்தம் கொதித்து, காதலி - தங்கை அல்லது அம்மா என இரண்டு பெண்களின் பாச மழையில் திணறி... ஃபார்முலாவுக்குள் வட்டமடித்த விஜய், நடிக்கக் கிடைத்த வாய்ப்பை நண்பன் படத்தில் சிக்கெனப் பற்றிக் கொண்டிருக்கிறார். நக்கல், நையாண்டி, குசும்பு, கும்மாளம்... என விஜய்யின் நடிப்பில் பரவச பல்ப்; உற்சாகத் தாண்டவம். நண்பர்கள் முதல் காதலியின் அக்கா வரை அனைவரிடமும் விஜய் அறை வாங்குவதை அவரது ரசிகர்கள் ரசிக்கா விட்டாலும், நடிகனாகத் தனக்குத்தானே தட்டிக்கொடுத்து நெஞ்சை நிமிர்த்த நிறைய வாய்ப்பை நண்பன் தந்திருக்கிறது. கேமராவைப் பார்க்காமல் நடிக்கச் சிரமப்படுவது மட்டும் திருஷ்டிப் பொட்டு.

இயல்பு மாறாத நடிப்பில் எடுத்த எடுப்பிலேயே, சேவாக் பேட் போல சிக்ஸர் அடிப்பது ஜீவாவுக்கு ஒன்றும் புதிதில்லை. நண்பனிலும் அந்த டச் செம நச். நெற்றியில் திருநீறு, நெஞ்சுக்குள் பயம், இளமைக் குறும்பு, எதிர்கால கனவு... எல்லாமும் மாறி மாறிப் பளிச்சிடுகிற பாத்திரத்தை நடிப்பால் துலக்கித் துலக்கிப் பளிச்சிட வைக்கிறார்.

கேரக்டரின் உக்கிரம் தாங்கமுடியாமல் தவிப்பது ஸ்ரீகாந்துக்கு மைனஸ்தான். இன்ஜினீயரிங் வேண்டாம்; ஃபோட்டோ கிராபி போதும் என அவர் அப்பாவிடம் கலங்குவது சென்டிமெண்டுக்கு ஓகே. சத்யன் சிரிப்புக்கு உத்தரவாதம். நடிப்பின் பக்கமும் வந்து போகிறார்.

இலியானா - கவர்ச்சி காரமிளகாய். தம் இடுப்பைப் போல தக்குனூண்டு கேரக்டர். அதில் விஜய்யைக் கூடுமானவரை காதலிக்கிறார். அப்புறம் அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுகிறார்... இது போதுமென ஷங்கர் சொல்லி இருப்பார் போல... அதனால் க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய்யைக் கட்டிப்பிடித்துக் கரம் சேர்கிறார். போதும் போதுமென இதிலேயே ரசிகன் கிறங்கிப் போய் ஜென்மசாபல்யம் அடைகிறான்.

அஸ்கு லஸ்கு பாடல் யூத்களின் நேஷனல் ஆன்தம். பாடல்களில் ஹாரீஸ் ஜெயரான் காதுகளை வருடினாலும் பின்னணியில் மனம் கொள்ளைப் போகிறது. மனோஜ் பரமஹம்சாவின் கேமராவில் யார் சிக்கினாலும் அழகாகத் தெரிவார்கள் போல. உயிரற்ற காலேஜ் கட்டடங்கள்கூட உயிர்ப்பாகப் பதிவாகி இருக்கின்றன. ஆண்டனியின் கத்திரியில் ஆளுமை... ஆளுமை... கார்க்கியின் வசனம் படத்தின் சென்டர் பில்லர்.

உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி விஜய்யைப் பற்றி ஒருத்தருக்குக் கூடவா தெரியாது? அதுவும் உற்ற தோழர்களுக்கும் தெரியாமல் இருப்பது உலகமகா பூச்சுற்றல். ஆல் ஈஸ் வெல் சொல்லு எல்லாம் சரியாகும் என்று சொல்லும் படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன்... மூவரும் ஆனந்தப்படும் போதெல்லாம் அண்ட்ராயரைக் கழற்றுவது ஆல் ஈஸ் வெல்லா இயக்குனர் ஷங்கர் ஸார்? என்றாலும் சுதந்திரமான கல்வி, மனோதிடம், நம்பிக்கை இரண்டையும் வளர்த்தெடுக்கும் என்ற கசப்பான அறிவுரையை இனிப்புத் தடவி மாத்திரையாகத் தந்திருக்கிறார் ஷங்கர்.

நண்பன் - ஆல் ஈஸ் நாட் பேட்!

Saturday, January 28, 2012

மீண்டும் புதுப்பொலிவுடன் நண்பன்


பொங்கல் பண்டிகைக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் நண்பன். தயாரிப்பாளர் சங்கத்துக்கு இப்படத்தில் உள்ள சில வசனங்களை மாற்றும்படி அதிகளவான கடிதங்கள் சென்றதால் எஸ்.எ.சந்திரசேகர் படத்தின் இயக்குனர் சங்கரை அழைத்து மாற்றங்களை செய்யும் படி கூறியுள்ளார். உடனே இப்படத்தில் உள்ள ஆண்டி பண்டாரம் ஆகிய சொற்கள் வெட்டப்பட்டுள்ளன. 
ஆண்டி பண்டாரம் ஆகிய சொற்கள் சமூகத்தில் உள்ளவர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாலே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது எனக்கூறப்படுகிறது. பாரி , பூரி  ககூசே  சாரி ஆகிய வசனங்களும் சென்சார் செய்யப்பட்டுள்ளன. 
இப்பம் தரமான மற்றும் மாபெரும் வெற்றி பெற்றதால் அதிகளாவான விருதுகளை எடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

நண்பன் படத்துக்கு பிறகு சம்பள உயர்வு


நண்பன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இலியானா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
தென்னிந்திய படங்களில் நடிப்பதோடு பாலிவுட் படத்திலும் இலியானா நடித்து வருகிறார்.


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் விஜய் உடன் இலியானா இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் நண்பனின் வெற்றியைத் தொடர்ந்து இலியானா தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
நண்பன் படத்தில் நடிக்கும் போதே அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை என்று இலியானா பரபரப்பாக பேசப்பட்டார். கடந்த இரண்டு வருடங்களாக கோடிக்கு குறைவாக இலியானா சம்பளம் வாங்குவதில்லை என்று பட புள்ளிகள் கூறுகிறார்கள்.

Friday, January 27, 2012

2012-ம் ஆண்டின் முதல் ஹிட்!


எஸ்.எம்.எஸ், காலர்ட்யூன், ஃபேஸ்புக் என்று நண்பர்களுக்கிடையே பிரபலமாகி வரும் வார்த்தை 'என் ஃபிரண்ட போல யாரு மச்சான்' என்பதுதான். இந்த் ஆண்டின் மெகா ஹிட் படமான 'நண்பன்' படத்தில் விவேகா எழுதிய இந்த பாடல்தான் இந்த ஆண்டின் முதல் ஹிட் பாடலாகும். 'நீ வருவாயா என' படத்தில் 'பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..' என்ற பாடலை எழுதி தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான விவேகா, தொடர்ந்து பல வெற்றி பாடல்களை எழுதி வருகிறார். கடந்த ஆண்டு அதிகமான ஹிட் பாடல்களை எழுதியவர் என்ற பெருமையை தட்டிச் சென்ற இந்த இளம் பாடலாசிரியர், இந்த ஆண்டும் அந்த பெருமையை தட்டிச் செல்ல, 'மாற்றான்', 'சிங்கம்-2', 'சகுனி', 'அரவான்', 'கரிகாலன்', 'வல்லினம்' உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதிவருகிறார்.
'நண்பன்' படத்தில் தான் எழுதிய 'என் ஃபிரண்ட போல யாரு மச்சான்' பாடல் பெற்றிருக்கும் வெற்றியால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கும் விவேகா, இந்த வெற்றி அனுபவத்தை பற்றி கூறும் போது, "நண்பன் பெரிய படம். ஷங்கர் சார் மாபெரும் இயக்குநர். அவர் பெயரை சொன்னாலே அகில இந்திய வியாபாரம் ஆகிவிடும் அந்த அளவுக்கு வணிக மதிப்புள்ள இயக்குநர். அதே போல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒவ்வொரு பாடலையும் வெற்றிப் பாடலாகக் கொடுத்து உச்சத்தில் இருப்பவர். விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ் போன்ற நட்சத்திர பலம். இப்படி இயல்பாகவே படத்தின் பிரமாண்டம் பெரிதாகிவிட்டது. படத்தில் நான் எழுதிய பாடலுக்கு இந்த பெருமையை பிரமாண்ட வெளிச்சம் பல மடங்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. இது தான் உண்மை. அதற்காக இந்த பாடலை எழுத வாய்ப்பளித்த இயக்குநர் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார். தற்போது தனது பாடல்களின் தொகுப்பை பத்திரிகை ஒன்றில் கட்டுரையாக எழுதும் விவேகா, விரைவில் ஐந்து புத்தகங்களை வெளியிட இருக்கிறார். 

Thursday, January 26, 2012

ஜாலீஸ் ஜெயராஜ்

நண்பன் படத்தின்  பாடல்களும் பின்னணி இசையும் இந்தி திரி இடியட்ஸை விட நன்றாக இருந்தது என்று இந்தி பட டீம் பாராட்டியதாக விஜய் வெளியிட்ட செய்தியால் ஹாரிஸ் செம ஜாலி மூடுக்கு வந்துவிட்டார். இந்திப்பட டைரக்டர் ஹிராணி அவ்வாறு சொன்னதாக
விஜய் சொல்லித்தான் நான் செய்தியை பத்திரிகைகளில் படித்தேன். என்னைப்  பொறுத்தவரை 'நண்பன்' படத்தில் விஜய் பேசும் டயலாக்கான வெற்றியை நோக்கி ஓடாதே. பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து கடுமையாக உழை வெற்றி தன்னால வரும். இதுதான் என் கருத்தும்.மத்தவங்க பாராட்டனுமேன்னு ஒரு பாட்டை உருவாக்க முடியாது.ஒரு டியூனை நாமளே ரசிச்சி, ருசிச்சி கம்போஸ் பண்ணி பாடலா கொண்டு வந்தா தன்னால பாட்டு ஹிட் ஆகும். சமீபகாலமா 
யாரைப்பார்த்தாலும் மீண்டும் கவுதம் மேனனுடன் இணையப்போறீங்களான்னு கேக்குறாங்க. நான் அதைப்பத்தி யோசிக்கிறதில்லை. துப்பாக்கி, மாற்றான், இரண்டாம் உலகம்னு என்னோட இசை உலகம் பிஸியாப் போயிட்டிருக்கு என்று சூசகமாய் பதில் சொல்கிறார் ஹாரிஸ்.