பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Saturday, April 30, 2011

விஜயின் பிறந்தநாள் பரிசு

தனது வேலாயுதம் பட வெளியீட்டையும் பிறந்த நாள் விழாவையும் ஏழைகள் பயனடையும் வகையில் கொண்டாட முடிவு செய்துள்ளார் நடிகர் விஜய்.


எம் ராஜா இயக்கத்தில் விஜய் தற்போது வேலாயுதம், படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வரும் ஜூன் 22-ம் தேதி, விஜய் பிறந்த நாளில் வெளியாகிறது. இதில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடித்துள்ளனர்.

வேலாயுதம் படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். விஜய் பிறந்த நாளில் படம் வெளியாவதால், விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் இதனை பெரும் விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

ஆனால் வீண் செலவுகள் செய்யாமல், மக்களுக்குப் பயனுள்ள வகையில் இந்த விழா அமைய வேண்டும் என விஜய் கூறிவிட்டதால், அன்று ஏழைகளுக்கு வேட்டி-சேலைகள் மற்றும் இலவச உணவு வழங்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். விஜய்யே இந்த உதவிகளை நேரில் வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.

இவை தவிர, கல்வி மற்றும் மருத்துவ உதவிகளையும் அந்த நாளில் அறிவிக்க உள்ளார்களாம்.

ஜெயம் ராஜாவின் பேட்டி


விஜய் நடிப்பில் வெளிவர உள்ள வேலாயுதம் படம் பற்றி ஜெயம் ராஜா கூறும்போது  வேலாயுதம் 90% படப்பிடிப்பு மற்றும் ஏனைய நடவடிக்கை முடிவடைந்துள்ளது என்ற  இச்செய்தியை கூறியுள்ளார்.ஜெயம் ராஜா மேலும் கூறும் போது ஒரு சாதாரண மனிதன் எவ்வாறு ஒரு சமுதாயத்துக்கு பாடுபடும் மனிதனாக மாறுகின்றான் என்பதே இப்படத்தின் கதை.இதற்கு ஏற்றாற் போல் திரைக்கதை நகர்கிறது.விஜய் படத்தில் இருக்கும் அனைத்து விடயங்களும் இருக்கும் அதை விட சில விடயங்கள் கூடுதலாக இருக்கும் அதனை நீங்கள் திரையில் பார்க்கும் போது உணர்வீர்கள் என்றார்.படத்தில் காமெடி சென்டிமென்ட் சண்டை என அனைத்தும் உள்ளது.இரண்டு வொலிவூட் நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர் என்றார்.அவர்களை படத்தில் நீங்கள் காணலாம்.உலக சினிமா தரத்திற்கு ஏற்றார் போல் பல பல புதிய விடயங்களை சேர்த்துள்ளோம் என்றார்.இதிரைக்கதையை நான் விஜயை மனதில் வைத்து உருவாக்கினேன்.இதனால் படம் இன்னும் சிறப்பாக வந்துள்ளது.இப்படத்தில் வேலை செய்யும் போதே விஜயும் நானும் சேர்ந்து இன்னும் ஒரு படம் பண்ணலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது என்றார்.

Friday, April 29, 2011

விஜய்க்காக காத்திருக்கும் வேலாயுதம் படக்குழுவினர்


காவலன் வெற்றியை அடுத்து விஜய் நடிப்பில் வெளிவர உள்ள படம் வேலாயுதம்.இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் சில படப்பிடிப்புகளே உள்ளன.படத்தின் போஸ் புரடெக்சன் வேலைகளும் இடம்பெறுகின்றது.அத்துடன் மே மாதம் 14 ம் திகதி இசை வெளியீட்டு விழா நடைபெறுவதற்குரிய நடவடிக்கையும் துரிதமாக நடைபெறுகிறது.படத்தின் ரீ ரெக்கோடிங் நடவடிக்கயும் வருகிற கிழமை தொடங்கவுள்ளது.பிண்ணனி இசையையும் கலக்க உள்ளார் விஜய் அன்டனி.மே மாதம் படத்தின் விளம்பரங்களும் பத்திரைககளில் வெளிவர உள்ளன.திரைக்கு யூன் 22 வெளிவர உள்ளது.தற்பொழுது விஜய் நண்பன் படப்பிடிப்பிற்காக அந்தமானில் உள்ளார்.இப்படப்பிடிப்பு முடிவடைந்து திரும்பிய பின்னர் வேலாயுதம் பட ரீம் வெளிநாட்டுக்கு செல்ல உள்ளது.இதில் விஜய் ஜெனிலியா பங்குபெறும் பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளது.பட வேலைகள் தாமதாகும் சமயத்தில் வேட்டைக்காரன் காவலன் படங்களுக்கு நிகழந்த மாதிரி  அப்பாடல் காட்சி இந்தியாவின் அழகு மிகுந்த இடங்களில் படமாக்கலாம்.எது நடந்தாலும் வேலாயுதம் விஜயின் பிறந்த நாளன்று திரையில் கலக்க உள்ளான்.

Thursday, April 28, 2011

விஜய், அஜீத், சூர்யாவிடம் ஆதரவு கேட்பேன் -விக்ரம்


ரசிகர்களை திரட்டி மரக்கன்று நடும் திட்டம்: விஜய், அஜீத், சூர்யாவிடம் ஆதரவு கேட்பேன் -விக்ரம்
நடிகர் விக்ரம் ஐ.நா.சபையின் மனித குடியேற்ற பிரிவின் இளைஞர் பிரிவு தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றார்.
அவர் விக்ரம் பவுண்டேஷன் மற்றும் சஞ்சீவினி அறக்கட்டளை சார்பில் பல்வேறு சமூகசேவை பணிகள் செய்து வருவதாகவும், மேலும் இவற்றின் மூலம் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டு இருப்பதாகவும் விக்ரம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:-
மரக்கன்றுகள் நடுவதற்காக பச்சைப்புரட்சி என்ற அமைப்பை துவங்கி உள்ளேன். குடிசைப் பகுதி மக்களுக்கு கல்வி அறிவூட்டும் பணிகளும் மேற்கொள்ளப்படும். நில உரிமையாளர்கள் தாமாக முன்வந்து தரும் காலி நிலங்கள், மற்றும் சாலை விரிவாக்கத்தில் சிக்காத பகுதிகளில் மரக்கன்று நடுவோம்.
இந்த திட்டத்தில் என் ரசிகர்களோடு வேறு நடிகர்களின் ரசிகர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதற்காக விஜய், அஜீத், சூர்யா போன்றோரிடம் இதுகுறித்து பேசுவேன். அவர்களையும் எனது பணியில் இணைத்துக் கொண்டு செயல்படுவேன். பிற மாநிலங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.

அந்தமான் அழகில் வளரும் நண்பன்


சங்கரின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் நண்பன்.இதில் விஜய்க்கு ஜோடியாக இலியானா நடிக்கிறார்.விஜய் ஜீவா சிறீகாந் இலியானா இப்பொழுது அந்தமானில்  நண்பன் படப்பிடிப்பில் உள்ளனர்.இப்படத்தின் முக்கியமான காட்சிகளை இன்று அந்தமானில் படமாக்கினார் சங்கர்.இதில் விஜய் இலியானா சிறீகாந் ஜீவா ஆகியோர் பங்குபற்றினர்.படத்தின் இறுதிக்காட்சி படமாக்கப்பட்டது.கண் கவர் இயற்கை அழகு கொண்ட அந்தமானின் கரையோர பிரதேசங்களில் இப்படப்பிடிப்பு இடம்பெற்றது.இதனை மனோஜ் பரம கம்ஸா அழகாக படமாக்கினார்.நாளைய தினமும் படப்பிடிப்பு அந்தமானில் இடம்பெற உள்ளது.விஜய் இலியானா பங்கு பெறும் ஒரு பாடலின் சில காட்சிகளும் படமாக்க உள்ளது.நண்பன் குழு அந்தமானில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு லண்டனுக்கு விஜய் இலியானா பங்குபெறும் பாடலை படமாக்க செல்லவுள்ளனர் எனக்கூறப்படுகிறது.இப்பாடலுக்குரிய இடங்க்ளை ஏற்கனவே சங்கர் தெரிவு செய்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.இப்பாடலுக்காக் லண்டன் செல்வது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.நாளைய படப்பிடிப்பின் பின்னே தெரியவரும்.சங்கர் எதிர்பார்த்த மாதிரி அந்தமானில் சூட் பண்ண வேண்டியவை நாளை முடிந்தால் நாளை மறு நாள் லண்டன் செல்லும் நண்பன் குழு.

போஸ்டர் ஒட்டிய விஜய் சேலம் ரசிகர் மன்றத்தினருக்கு அபராதம்

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தொகுதிகளின் ஓட்டுப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலின்போது சுவர் விளம்பரம், கட்-அவுட்டுக்கள், பேனர்கள் வைத்தவர்கள் மீது வழக்கு தொடர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

இதன்படி சேலம் மாநகர போலீசார் தி.மு.க. , அ.தி.மு.க., மற்றும் பல்வேறு கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இப்போது இவர்கள் கோர்ட்டுகளுக்கு சென்று அபராதம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற துணைதலைவரும், கொண்டலாம்பட்டி வட்ட பாக செயலாளருமான பால்மார்க்கெட் சந்திரன், அ.தி.மு.கவிற்கு ஓட்டு கேட்டு கட்அவுட் வைத்து இருந்தார். இதற்காக அவர் சேலம் கோர்ட்டில் ரூ.1500 அபராதம் கட்டினார்.

இவரைப்போல் சேலம் கிச்சிப்பாளையம் இளைஞர் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த மாவட்ட இணை செயலாளர் கிச்சிப்பாளையம் பெரியசாமியும், சேலம் அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற் சங்கத்தை சேர்ந்த நல்லாட்சி என்பவரும் ரூ.1500-ம் அபராதம் கட்டினர்.

சேலத்தில் தேர்தலின்போது விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த சிலரும்போஸ்டர் ஒட்டி இருந்தனர். இதனால் குகை பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த லோகேஸ்வரன், சங்கர் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர்.

இதனால் இவர்களும் சேலம் கோர்ட்டில் தலா ரூ.1500 அபராதம் கட்டினர். இவர்களைப்போல் நேற்று மட்டும் ஏராளமானோர் கோர்ட்டில் அபராதம் கட்டினர்.

வேலாயுதம் இசை வெளியீடு



விஜய் ஹன்சிகா ஜெனிலியா நடிப்பில் தயாராகி வரும் படம் வேலாயுதம் .இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இப்படத்தின் போஸ்புரடெக்சன் வேலைகள் மும்முரமாக இடம்பெறுகின்றன.அத்துடன் பாடல் வெளியீட்டு நடவடிக்கையும் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மே மாதம் 14 ம் திகதி நேரு உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற உள்ளது.நேரு விளையாட்டரங்கினரிடம் வேலாயுதம் தயாரிப்பு தரப்பு  அனுமதி கேட்டுள்ளனராம் என நேரு விளையாட்டரங்கில் இருந்து செய்தி வெளியாகி உள்ளது.ஆனால் ஆஸ்கார் ரவிச்சந்திரன் இது பற்றி இன்னும் கூறவில்லை.எனினும் மே மாதம் 14 ம் திகதி பாடல் வெளியீடு என்பது உறுதியாகிவிட்டது.இவ்விழாவிற்கு வரும் பிரபலங்களின் விபரத்தை மிக மிக இரகசியமாக வைத்துள்ளார் ரவி.சங்கர் அஜித் சீமான் கிந்தி நடிகர்களில் ஒருவர் பங்குபெறக்கூடும் எனவும் கூறப்படுகிறது.டோனியையும் விழாவிற்கு அழைக்கும் முயற்சியில் உள்ளார் ரவி.

இப்படத்தின் பாடல்களை விஜய் அன்டனி உருவாக்கியுள்ளார்.ஆரம்பப்பாடல் மிகப்பிரமாண்டமாக தமிழ் நாட்டு திருவிழா நிகழ்ச்சியுடன் இடம்பெற்றுள்ளது.மானாட்டம் மயிலாட்டம் என பல நிகழ்வுகள் இப்பாடலில் இடம்பெற்கிறது.முருக கடவுளை மையமாக கொண்டு பாடல் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த பாடல் ஒன்று பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டுள்ளது.இது படத்தின் குத்துப்பாட்டிற்கு சான்றாக அமைக்கிறது.இதில் விஜயும் ஹன்சிகாவும் இணைந்து கலக்கியுள்ளனர்.வேட்டைக்காரன் பட கரிகாலன் பாடலை விட சிறப்பாக அமையவுள்ளது இப்பாடல் என கூறுகிறது படத்தரப்பு.
அடுத்த பாடல் விஜய் கன்சிகா பங்கு பெறும் பாடல் .இதற்கு என தனியான அரங்கு அமைத்து படமாக்கியுள்ளனர்.பல்வேறுபட்ட நடனக்கலைஞர்களுடன் சேர்ந்து ஆடியுள்ளனர் விஜய் மற்றும் ஹன்சிகா.
விஜய் ஜெனிலியா பங்குபெறும் பாடலை ஐரோப்பிய நாடுகளில் படமாக்க உள்ளனர்.இதன் படப்பிடிப்பு மே மாதம் முதலாவது வாரத்தில் இடம்பெற உள்ளது.
விஜய் ஹன்சிகா சரண்யா பங்குபெறும் பாடல் ஒன்றும் உள்ளது.படத்தின் டைட்டில் பாடலை வித்தியாசமாக இடம்பெறுகிறது.வேலா வேலா வேலாயுதம் என்ற இந்தபாடல் படம் முழுவதும் தீம் மியூசிக்கா வர உள்ளது.குறிப்பாக மாஸ் அணிந்து விஜய் வரும் போது தியேட்டரே இப்பாடலை கேட்டு ரசிக்கும் எனவும் கூறப்படுகிறது.

Wednesday, April 27, 2011

விஜய் ஹன்சிகாவின் கெமிஸ்ரி


ஹன்சிகா தமிழில் மூன்றும் படம் நடித்துவிட்டார்.தமிழில் நல்லவரவேற்பு கிடைத்துள்ளபடியால் இவ் வாய்ப்பு தனக்கு தொடர்ந்து அமைய வேண்டும் என திருப்பதியில் வழிபாடு மேற்கொண்டுள்ளார்.இவரது அடுத்த படம் எங்கேயும் காதல்  இது மே மாதம் வெளிவருகிறது .அதன் பின் விஜயின் நடிப்பில் வேலாயுதம் படத்தில் நடித்துள்ளார்.வேலாயுதம் படத்தில் விஜயின் முறைப்பெண்ணாக வருகிறார்.விஜயும் இவரும் படத்தில் செய்யும் குறும்புகள் பார்த்து ரசிகர்கள் கண்டிப்பா ரசிப்பார்கள் என்றார்.அண்ணாமலை படத்திற்கு பிறகு கலக்கும் பாற்காரனாக வருகிறார் விஜய் .அண்ணாமலை படம் ரஜனிக்கு எப்படியோ அதைப்போல் விஜய்க்கும் வேலாயுதம் அமையும் என்கிறது படக்குழு.அண்ணாமலை படத்தில் குஸ்புவின் நடிப்பு எப்படி இருந்தை போல் இப்படத்தில் ஹன்சிகாவின் நடிப்பும் அமைந்துள்ளது என்கிறார் ஜெயம் ராஜா.அனைவரும் ஹன்சிகாவை சின்னக்குஸ்பு எனப்படத்தளத்தில் அழைக்கிறார்களாம்.விஜயின் பிறந்தநாளன்று திரைக்கு வருகிறது வேலாயுதம்.வேலாயுதம் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.இப்படத்தின் பிளஸ்ஸில் விஜய் ஹன்சிகாவின் கெமிஸ்ரியும் ஒன்றாம்.விஜயும் ஹன்சிகாவும் நல்ல நண்பர்களாகியுள்ளனராம்.பகலவனிலும் விஜயுடன் ஜோடி சேர உள்ளார் ஹன்சிகா. 

Tuesday, April 26, 2011

அந்தமானுக்கு நகரும் நண்பன்


விஜய் நடிப்பில் வளர்ந்து வரும் படம் நண்பன்.ஒரு படத்தை எடுப்பதென்றால் பல வருடங்கள் செலவழித்து படத்தை எடுப்பவர் சங்கர் .ஆனால் இப்படத்தில் நிலைமை தலைகீழ்.விஜய் நடிப்பில் வளர்ந்து வரும் நண்பன் படம் மிக வேகமாக வளர்கிறது.மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் இடம்பெறுகிறது.தற்பொழுது நண்பன் படக்குழுவினர் அந்தமான் செல்லவுள்ளனர்.அந்தமானில் 6 அல்லது 7 நாட்கள் படப்பிடிப்பு இடம்பெற உள்ளது.படத்தின் முக்கியமான காட்சிகள் அந்தமான் தீவின் கண் கவர் பிரதேசங்களில் படமாக்கப்பட உள்ளது.இப்படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் ஜெனிலியாவுடன் சேர்ந்து டூயட் பாட உள்ளார் வேலாயுதம் படத்திற்காக.காவலன் அடைந்த வெற்றியும் நூறாவது நாளை தாண்டி ஓடும் சந்தோசத்திலும் விஜய் மாறி மாறி படப்பிடிப்பில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இவ்வருடம் மூன்று முறை வித்தியாசமான களத்தில் கலக்க உள்ளார்.

14 வில்லன்களுடன் மோதும் விஜய்

விஜய், ஹன்சிகா மற்றும் ஜெனிலியா நடித்து வரும்  படம் 'வேலாயுதம்'. விஜய் ஆண்டனி இசையமைக்க ஜெயம் ராஜா இயக்கி வருகிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.

சரண்யா மோகன், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சத்யன், பாண்டியராஜன், சாயாஜி ஷிண்டே என பலர் நடித்திருக்கிறார்கள். இது போதாதென்று   மும்பையில் இருந்து 14 வில்லன்க
ளை இப்படத்திற்காக களம் இறக்கியிருக்கிறார்கள்.

இது குறித்து ஆஸ்கார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் " 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளது. விஜய் ஒரு பால்காரனாக நடித்து இருக்கிறார். சரண்யா மோகன் விஜய்க்கு தங்கையாக நடித்து இருக்கிறார். ஜெனிலியா பத்திரிகையாளராகவும், ஹன்சிகா விஜய்க்கு காதலியாகவும் நடித்து இருக்கிறார்கள். 5 பாடல்கள் மற்றும் 6 சண்டை காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. சண்டைக் காட்சிகளை அனல் அரசு வடிவமைத்து இருக்கிறார்" என்று கூறியுள்ளனர்.வேலாயுதம் விஜய்யின் பிறந்த நாளான ஜுன் 22ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

யூனில் பகலவன் ஆரம்பம்


விஜய் தற்போது ஜெயம் ராஜாவின் வேலாயுதம் மற்றும் நண்பனில் நடித்து வருகிறார்.இரு படங்களிலும் மாறி மாறி நடித்து வருகிறார் விஜய்.இவரது வேலாயுதம் படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது .மே மாதம் நடுப்பகுதியில் இப்படத்தின் பாடல் வெளியீடு இடம்பெற உள்ளது.தற்போது நண்பன் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.நண்பன் படம் சென்னையை அண்டிய இடங்களில் இடம்பெறுகிறது.இப்படத்தின் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இறுதியில் முடிய உள்ளது.மே மாதம் தொடக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடிக்க சென்று விடுவார் விஜய் .யூன் 22 படம் வெளிவர உள்ளது.இதனை கவனித்த சீமான் தனது படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளார்.தேர்தல் முடிந்து என்ன முடிவு என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சீமான் விஜயின் அடுத்த படம் குறித்து விஜயிடம் மீண்டும் கதைத்துள்ளார்.வேலாயுதம் முடிந்தவுடன் படத்தை தொடங்கலாம் எனக்கூறியுள்ளார் விஜய்.ஏற்கனவே விஜய் சீமானின் பகலவன் படத்தில் நடிக்கப்போவதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.பின் சீமானும் அதனை உறுதிப்படுத்தினார் எனினும் எப்பொழுது தொடங்கும் என்பதை மட்டும் கூறவில்லை.ஆனால் இது மே மாதம் இறுதியில் அல்லது யூன் மாதம் தொடங்கவுள்ளது.கலைபுலி தாணு தயாரிக்கிறார்.ஏற்கனவே விஜயுடன் இணைந்து பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.கந்தசாமி எனும் பிரமாண்டபடத்தை எடுத்தவர் பகலவனிலும் அப்பிரமாண்டத்தை காட்ட உள்ளார்.விஜய் நண்பன் படத்தில் நடிக்க சென்றதால் பகலவன் படம் தள்ளி போனது.இனியும் எந்த மாற்றமும் நடைபெறக்கூடாது என்ற முடிவில் உள்ளார் விஜய் சீமான் மற்றும் தாணு. படத்தின் கதாநாயகியை மட்டும் சஸ்பென்சாக வைத்துள்ளனர்.எனினும் ஹன்சிகா என கோடம்பக்ககுருவி கிசுகிசுக்கிறது.

Monday, April 25, 2011

விஜய்க்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜய்க்குச் சொந்தமான வீடு மீது சிலர் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, விஜய் ரசிகர்கள் இன்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விஜய் முன்பு வசித்து வந்த வீட்டில் இப்பொழுது ஆன்டனி வசித்து வருகிறார்.நடிகர் விஜய்க்கு சொந்தமான வீட்டின் மீது சில தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் சிலர் கல்வீசினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். யாரோ சிலர் குடிபோதையில் செய்த செயல் இது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
முதல் கட்டமாக, இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டிக்கக் கோரியும், கோவை மாவட்ட விஜய் இளைஞர் நற்பணி இயக்கம் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. செஞ்சிலுவை சங்கம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார். ரசிகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விஜய் வீடு மீது கல்வீசி தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

கலக்கும் விஜய்


விஜய் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் காவலன்.இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்து வெளியிட்டார் விஜய்.அதற்கு விஜய்க்கு பலனும் கிடைத்தது.அடுத்து விஜய் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் வேலாயுதம்.இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார்.இப்படத்திற்குரிய எதிர்பார்ப்பு மிக அதிகமாக காணப்படுகிறது.இப்பட இசையை ரசிகர்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.இப்படத்தின் உரிமையை வாங்க பலரும் முன்வருகின்ற போதும் இப்படத்தை யாருக்கும் கொடுக்காமல் வெளியிடப்போகிறார் ரவிச்சந்திரன்.இப்படத்தில் விஜய் பால்காரனாக வருகிறார்.ஜெனிலியா தொலைக்காட்சி நிருபராகவும் ஹன்சிகா மோத்வானி கிராமத்து முறைப்பெண்ணாகவும் நடிக்கின்றனர்.விஜய் கன்சிகா மற்றும்ஜெனிலியாவின் கெமிஸ்ரி இப்போது வெளியாகிய படங்களை பார்க்கும் போதே அருமையாக உள்ளது. வித்தியாசமான லொகேசன்களில் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் கதை கிராமம் நகரம் என மாறி மாறி நகர்கிறது.ஒரு சாதாரண மனிதன் எப்படி சத்தி வாய்ந்தவனாக மாறுகிறான் என்பதை இப்படத்தில் காணலாம்.அடுத்து விஜய் நடிப்பில் நண்பன் படம் வெளிவர உள்ளது.கியூட்டான விஜயை இப்படத்தில் ரசிகர்கள் காணலாம்.இப்படத்தை வாங்க சன்பிக்சர்ஸ் ஜெமினி பிலிமிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது.எனினும் ஜெமினி பிலிம் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை.எந்திரனை தந்த ஜெமினி பிலிம் சில சமயம் அதற்கு பதிலாக நண்பனை கொடுக்கலாம் எனத்தெரிகிறது.பொறுத்திருந்து பார்ப்போம்.அடுத்து பகலவன்  அதன் பின் பொன்னியின் செல்வன் .பொன்னியின் செல்வன் படம் மணிரத்தினம் படம் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.இவ்வாறு விஜயின் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருப்பதைப்போல் விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் வேலாயுதம் படத்திற்கு இப்போதே போட்டி போடத்தொடங்கியுள்ளனர்.

Sunday, April 24, 2011

காவலன் நூறாம் நாள் கொண்டாட்டம்


விஜயின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் கிட்டாகி இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் விஜயின் காவலன் திரைப்படம் இன்று நூறாவது நாளைக்கொண்டாடியது.விஜயின் இப்படம் விஜய் ரசிகர்களல் மட்டும் அல்ல சினிமா ரசிகர்களாலும் விரும்பி ரசிக்கப்பட்ட படமாகும்.இப்படத்தின் நூறாவது நாளை கொண்டாட விஜய் ரசிகர்கள் சத்தியம் தியேட்டருக்கும் முன்னால் ஒன்று கூடி கேக் வெட்டிக்கொண்டாடினர்.
அவை தொடர்பான ஸ்டிகளை இங்கே காணலாம்





வேலாயுதம் விளம்பரம் மே மாதம் ஆரம்பம்


விஜயின் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் வேலாயுதம் .விஜய் ஜெனிலியா கன்சிகா கூட்டணியில் இப்படம் ஜூன் மாதம் 22 ம் திகதி விஜயின் பிறந்த நாளன்று வெளிவர உள்ளது.இப்படத்தின் தயாரிப்பாளர் பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம் ரவிச்சந்திரன் ஆவார்.இப்படத்தின் தொடக்கவிழாவையே விஜய் ரசிகர் முண்ணிலையில் சிறப்பாக கொண்டாடினார்.படத்தின் தொடக்கவிழா அன்று ஒரு ரெயிலர் வெளியிடப்பட்டது.இப்படத்தின் ரெயிலர் பிரமிப்பை ஏற்படுத்தியது.இப்படத்தின் ஆடியோ வெளியீடன்று இன்னும் ஒரு ரெயிலர் வெளியிட உள்ளார் ரவி.அதற்குரிய ஏற்பாடுகள் இப்போது நடைபெறுகின்றன.இப்படத்தின் போஸ்ட்புரடெக்சன் வேலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சிறப்பாக நகர்கிறது வேலாயுத வேலைகள்.இப்படத்தின் விளம்பரத்தை மே மாதம் தொடங்கவுள்ளார் ரவி.இப்படத்தின் ஆடியோ மே மாதம் 14 ம் திகதி வெளியிடப்படும் எனக்கூறப்படுகிறது எனினும் இது உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்பவர்களிடம் சென்று பேசி வருகின்றனர்.எனினும் சிலர் ஓகே சொல்லிவிட்டனர் எனினும் அச்செய்தியையும் இரகசியமாக வைத்துள்ளனர் படக்குழுவினர்.ரஜனி கமலிடம் கேட்கப்பட்டு வருகிறது.இப்படத்தின் ஆடியோவை சொனி மியூசிக் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.இப்படத்தின் சட்டலைட் உரிமயை சன் ரீவி மற்றும் விஜய் ரீவீ வாங்க போட்டி போடுகின்றன.இப்படத்தை தமிழகம் முழுவதும் ஆஸ்கார் பிலிமே வெளியிடுகிறது.வேலாயுதம் பட விளம்பர ஸ்டில்களை உங்கள் அபிமான நாளிதழ்களில் மே மாதம் காணத்தயாராகுங்கள்.

வேலாயுதம் பட சூட்டிங்க் ஸ்பொட் தகவல்கள் - திரைக்குப்பின்னால்



வேலாயுதம் படத்தில் இன்னும் பல பரிமாணங்கள் வெளிப்படும் என்கின்றார்கள் வேலாயுதம் படக்குழுவினர்.இதுவரை விஜய் நடித்த படங்களில் இல்லாத கொமர்சியல் கிங்காக விஜயை உணரவைக்கும் படமாக இப்படம் அமையும் என்கின்றார் படத்ததயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.படத்தில் வரும் ஓட்டப்பந்தயத்தில் விஜய் அதிரடியாக ஓடி நடித்ததை பட யூனிட் முழுக்க பிரமிப்பாக பேசிக்கொண்டிருக்கிறது.இது அனைவரும் அறியாத செய்தியாகும்.
மற்றும் விஜய் நடிப்பில் வளர்ந்து வரும் வேலாயுதம் படத்தை இயக்கும் போது,சில இடங்களில் 'கட்' சொல்ல மறந்துள்ளேன் என்று வேலாயுதம் பட இயக்குனர் எம்.ராஜா கூறியுள்ளாராம்.அதாவது பாசமலர் படம் ஓடுவது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டது.அதனை படமாக்கும் போது ராஜா கட் சொல்ல மறந்து விட்டாராம்.
கல்யாண காட்சிகாக அமைக்கப்பட்ட அரங்கு  ஆரம்பப்பாடலுக்காக அமைக்கப்பட்ட அரங்கு இவற்றை பார்த்து ஊர்மக்களே அதிசயித்து உண்மையான கல்யாண வீடோ உண்மையான திருவிழாவோ என நினைத்து விசாரித்தனராம் இதனை சொல்லிச்சிரித்தார் ஜெயம் ராஜா.
இப்படம் நாம் ஏற்கனவே கூறிய மாதிரி ஜூன் 22 விஜயின் பிறந்த நாளன்று திரைக்கு வர உள்ளது.மே மாதம் 14 ம் திகதி பிரமாண்ட இசை விழா நடைபெற உள்ளது.படத்தின் விளம்பர ஏற்பாடுகள் மே மாதம் தொடங்கவுள்ளது.நாம் ஏற்கனவே கூறிய படி பிரமாண்ட இசை வெளியீட்டை ஏற்பாடு செய்கிறார் ரவிச்சந்திரன்.இசை வெளியீட்டுக்கு அழைக்கப்படும் பிரபலங்களின் விபரம் மற்றும்  இசை வெளியீடு தொடர்பான தகவலை விரைவில் அறியத்தருவோம்.

சதம் அடித்த காவலன்

விஜய் நடிப்பில் பல எதிர்ப்புகளை தாண்டி பொங்கலுக்கு வெளிவந்த திரைப்படம் காவலன்.இது விஜயின் 51 வது படமாகும்.இதில் விஜய் அஸின் வடிவேலு நிழல்கள் ரவி ரோஜா மித்ரா ராஜ்கிரன்  என பல நட்சத்திரப்பட்டாளமே நடித்தனர்.இத்திரைப்படம் வெளியாகிய போதும் அதிகளவான தியேட்டர்கள் கிடைக்கவில்லை.விஜயின் முந்தைய படமான சுறா அடைந்த தோல்வியால் தியேட்டர் உரிமையாளர்கள் காட்டிய எதிர்ப்பும் ஏனைய படங்களின் வருகையும் தியேட்டர் பற்றாக்குறைக்கு காரணமாயின.எனினும் படம் வெளியான பின்பு படத்தின் கதை ரசிகர்களுக்கு பிடிக்கவே பின்பு பல தியேட்டர்கள் இதில் இணைந்து கொண்டன.இப்படம் ஜெனவரி 15 ம் திகதி தமிழர்களின் பொங்கல் பண்டிகை ஸ்பெசலாக வந்து இன்று ஏப்ரல் 24 ம் திகதி காவலன் நூறாவது நாள் வெற்றிவிழாவை கொண்டாடுகிறது.காவலன் நூறாவது நாளை எட்டிய போதும் காவலன் ஆறு தியேட்டர்களில் இன்றும் ஓடுகிறது என்பது ஒரு சந்தோசமான செய்தியாகும்.நூறாவது நாளை கொண்டாடும் காவலன் திரைப்படத்திற்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.நூறாவது நாள் கொண்டாட்டத்திற்காக அதிகளவான விஜய் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து சத்தியம் சினிமாவில் சிறப்பாக கொண்டாட உள்ளனர்.இப்பட வெற்றி விழா விரைவில் கொண்டாடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

Saturday, April 23, 2011

விஜயின் வேலாயுதம் பட ஸ்பெஷல் ஹைலைட்ஸ்


காவலன் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஜெயம் ராஜா இயக்குகிறார். விஜய் ஜெனிலியா ஹன்சிகா மோத்வானி சந்தானம் எம்.எஸ் பாஸ்கர் சரண்யா மோகன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் படம் இது. இப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:

* மக்களில் ஒருவனாக இருக்கும் ஓர் இளைஞன், மனித நேயப் பண்பால் மக்களுக்கே தலைவன் என்கிற நிலைக்கு உயருவது தான் படத்தின் கதை. சுருக்கமாக சொன்னால் அகரம் ஒன்று சிகரமாய் மாறும் கதை.

*. படம் ஒரு முக்கோண காதல் கதையாக அமைந்துள்ளது. இந்த காதலுடன் அண்ணன் தங்கை பாசத்தையும் மிக அழககாக, புதுவிதமாக சொல்லும் படமாக இயக்கி இருக்கிறார் ராஜா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாசமலர் படத்திற்கு பிறகு இப்படியொரு அண்ணன், தங்கை பாசத்தை எந்தபடத்திலும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறுகின்றனர்.

* கிராமமும், நகரமுமாக மாறி, மாறி பயணக்கிறது வேலாயுதம் படத்தின் கதை. கிராமத்துக் கிளர்ச்சியையும், நகரத்து கவர்ச்சியையும் தரிசிக்க வைக்க காட்சி அமைப்புகள் படத்தில் உள்ளன.

* படத்தில் கிராமத்து பால்காரன் வேலுவாக வரும் விஜய் கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் ஜொலிக்கிறார். அவன் விற்பது பால். ஆனால் அன்பால், நட்பால், பிறரையெல்லாம் தன்பால் ஈர்க்கிறான். அவர் காற்றுமாதிரி இருப்பவன் அந்த ஊருக்கு. காற்றில்லாமல் உயிர் வாழ முடியாது அதுபோலத்தான் ‌இந்த வேலு(விஜய்) அந்த ஊருக்கு. காதலனாக, பாசமுள்ள அண்ணனாக, ஆவேச இளைஞனாக விஜய்க்கு ஜீசல்பந்தி நடத்து வாய்ப்பு இப்படத்தில் கிடைத்துள்ளது.

* படத்தில் இரண்டு நாயகிகள் ஒருவர் பத்திரிகையாளராக வரும் ஜெனிலியா, மற்றொருவர் ஹன்சிகா மோத்வானி.ஹன்சிகா விஜயின் முறைப்பெண்ணாக வருகிறார். இவர்களுடன் சந்தானம் ‌காமெடியில் தன் பங்கிற்கு அசத்த இருக்கிறார்.

* படத்தில் பாலிவுட்டை சேர்ந்த இரண்டு பிரபல வில்லன்கள் உட்பட 15 வில்லன்கள் நடித்திருக்கின்றனர்.

* படத்தில் ஒன்றரை கோடி ரூபாயில் ஒரு திருமண காட்சியை அமைத்துள்ளனர். இந்த திருமணத்திற்காக ஊரே பந்தல்போட்டு, கோலம் போட்டு, சீரியல் லைட்கடடி, தோரணம் அமைத்து ஊர்திருவிழா போல் அலங்காரம் செய்து ஆராவரம் செய்திருப்பது பிரமாண்டமான முயற்சி. ஊர் கூடி தேர் இழுப்பது போல, ஒரு ஊரே முன்னின்று நடத்தி வைத்துள்ள அந்த திருமணக்காட்சி, இதுவரை தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு படத்திலும் அமைந்ததில்லை.

* வேலாயுதம் படத்திற்காக அந்த ஊரில் ஒரு கிணறு வெட்டி, அதை அன்பளிப்பாக அந்த ஊருக்கே அளித்திருக்கின்றனர்.

* நடிகர்திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த பாசமலர் படத்தினை புதுபிரிண்ட் போட் அந்த ஊரில் உள்ள டூரிங் டாக்கீஸில் போட்டு காட்டி மக்கள் பார்ப்பது போன்ற காட்சி படமான போது அனைவரும் படத்தில் மூழ்கிக் கிடக்க டைரக்டர் கட் சொல்ல மறந்து விட்டாராம்.

* படத்தில் விஜய்க்கு ஓபனிங் சாங்கை சுமார் ரூ.2 கோடி செலவில் திருமூர்த்திமலையில் படமாகியுள்ளனர். ஏற்கனவே "சிவகாசி", "போக்கிரி" படங்களில் விஜய்க்கு ஓபனிங் சாங்கிற்கு நடனம் அமைத்த அசோக்ராஜ், இப்பாட்டுக்கு நடனம் அமைத்து இருக்கிறார். கிராமத்து தப்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற ஏராளமான ஆட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் 200கிராமத்து நடன கலைஞர்கள் நயம்காட்ட 150 வெளிநாட்டு நடனக்காரர்கள் ஆடி வெளிநாட்டுக்கலை நயம் காட்டியுள்ளனர். படத்தில் விஜய் எப்படி ஒரு பிரம்மாண்டமோ அதுபோல இந்தபாடலும் பலமடங்கு பிரம்மாண்டமாக இருக்குமாம்.

* இப்படத்தின் சூட்டிங்கில் விஜய் நடிக்க தொடங்கியது முதல் முடியும் வரை ஒருநாள்கூட லேட்டாக வந்ததில்லையாம். அவரால் ஐந்து நிமிடம் கூட சூட்டிங் தாமதமானதில்லையாம். படத்தில் ஒவ்வொரு காட்சியையும், உணர்வுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்து கொடுத்திருப்பதாக கூறும் இயக்குநர், விஜய்க்கு இந்தபடம் உச்சகட்ட ‌காமெடி படமாகவும் அமையும் என்று கூறுகிறார்.

* படத்தின் தூணாக ஒளிப்பதிவாளர் ப்ரியன் அமைந்திருக்கிறார். ஒவ்‌வொரு காட்சியையும் மிக அழகாக படமாக்கி இருக்கிறாராம். இவர் ஏற்கனவே சாமி, திமிரு, போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

* வேட்டைக்காரன் படத்தை மிஞ்சும் வகையில் இப்படத்தின் இசை வ‌ரவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. படத்தில் விஜய்‌யை பாடவைக்கலாம் என்று முயற்சித்து இருக்கிறார். ஆனால் கடைசியில் விஜய் ஆண்டனியை பாடும்படி செய்துவிட்டார் விஜய்.

* படத்தில் மொத்தம் 5பாடல்கள், 6சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கின்றனர். 

வேலாயுதம் ஸ்டில்கள்

வேலாயுதம் படத்தின் ஸ்டில்கள் இன்று இணையத்தளங்களில் வெளியாகின அப்புகைப்படங்கள் 
 


















விஜயின் வில்லு தெலுங்கு ரீமேக் மே 6


விஜய் நயந்தாரா நடிப்பில் தமிழில் 2009 இல் வெளிவந்த படம் வில்லு.இதனை பிரபு தேவா இயக்கினார்.தேவி சிறிபிரசாத் இசையில் இப்படம் வெளிவந்தது.பிரகாஸ்ராஜ் முமைக்கான் குஷ்பு முக்கியமான ரோலில் நடித்திருந்தார்கள்.இப்படம் மே மாதம் 6 ம் திகதி தெலுங்கில் டப்பிங் செய்து வெளியாக உள்ளது.
சந்திர போஸ் சாகிற்றி ஆகியோர் இப்படத்திற்குரிய பாடல் வரிகளை எழுதினர்.கோடி ராமகிருஷ்ணன் சாகர் ஆகியோர் இந்த வெள்ளிக்கிழமை கூடி இச் செய்தியை மீடியாக்களுக்குத் தெரிவித்தனர். G ஊஷாரனி  அன்ட் எம் ஆர் ஜெபி பிலிம் வில்லு படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி ஆந்திரப்பிரதேசத்தில் வெளியிடுகின்றனர்.
தேவி சிறீ பிரசாத்தின் இசை என்றபடியால் பாடல்கள் வெளியானவுடன் தெலுங்கில் வெற்றி பெற்றுவிட்டன.இப்படத்தின் பாடல்கள் தெலுங்கில் நல்ல மாக்கெற்றையும் பெற்றன.இந்தப்படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் இப்படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என தெலுங்கு தயாரிப்பாளர்கள்  மீடியாவுக்காக நடந்த விழாவில் கூறினார்.

Friday, April 22, 2011

விஜயின் பதில் என்ன?


காவலன் திரைப்படம் பல் எதிர்ப்புகளின் மத்தியில் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகியது.இப்படத்துடன் வெளிவந்த ஏனைய படங்களுக்கு கிடைத்த தியேட்டர்கள் மாதிரி இப்படத்திற்கு அதிக தியேட்டர் கிடைக்கவில்லை.எனினும் இப்படத்தின் கதை இப்படத்தை மேலும் வெற்றியடைய வைத்தது.நல்ல விமர்சனங்களும் படத்திற்கு பெரிய பலமாய் அமைந்தது.இப்படம் இம்மாதம் 24 ம் திகதி நூறாவது நாளை தொட உள்ளது.விஜய் ரசிகர்கள் அதனை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.இறுதியாக விஜயின் போக்கிரி படத்திற்கு 175 வது நாள் கொண்டாட்டமும் குருவி படத்திற்கு 150 வது நாள் கொண்டாட்டமும் விழாவாக செய்யப்பட்டது.ஆனால் தற்பொழுது நிலைமை வேறு ஒரு படம் நூறு நாளை தொடுவதென்பது அபூர்வம்.அப்படி நூறு நாள் ஓடினாலும் ஒரு தியேட்டரில் ஒரு காட்சியாக மட்டுமே அப்படம் ஓடும்.ஆனால் காவலன் இப்பொழுதும் ஐந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.இவ்வாறு சிறப்பான வெற்றி பெற்ற திரைப்படத்திற்கு கண்டிப்பாக வெற்றி விழா கொண்டாட வேண்டும் என விஜய் ரசிகர் மன்றங்கள் விஜய்க்கு கூறி வருகின்றன.ஆனால் விஜய் எந்த விதமான பதிலும் கூறவில்லை.ஆனால் ரசிகர்களும் விநியோகஸ்தர்களும் வெற்றி விழா கண்டிப்பாக கொண்டாட வேண்டும் எனக்கூறுகின்றனர்.விஜயின் அப்பாவும் அதையே விரும்புகிறார்.எனவே விஜயிடம் முடிவை கேட்டு விழா எடுக்க முடிவுசெய்கிறது காவலன் தரப்பு.விஜயின் பதிலுக்கா காத்திருக்கின்றனர்.இக்காலதில் படத்தின் பூஜையையும் பாடல் வெளியீட்டையும் பிரமாண்டமாக கொண்டாடுபவர்கள் படத்தின் வெற்றிவிழாவையும் பிரமாண்டமாக கொண்டாடினால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

Thursday, April 21, 2011

சுடச்சுட நண்பன்


விஜயின் அடுத்த படம் நண்பன்.இப்படம் சங்கரின் இயக்கத்தில் உருவாகி வருகிறது.இப்படத்தின் இரண்டு கட்டப்படப்பிடிப்புகள் முடிவடைந்து மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில்  இடம்பெறுகிறது.பத்து நாட்கள் இங்கு படப்பிடிப்பை நடத்த சங்கர் திட்டமிட்டுள்ளார்.இம்மாதம் இறுதிவரை இப்படத்தின் படப்பிடிப்பு இங்கு நடைபெற உள்ளது.இன்று மூன்றாவது நாள் படப்பிடிப்பு இங்கு இடம்பெற்றது.விஜய் இலியானா சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்று படமாக்கப்பட்டன.பல துணை நடிகர்கள் இக்காட்சியில் இடம்பெற கல்லூரிக்குள் இடம்பெறும் காட்சி படமாக்கப்பட்டது.விஜய் இலியானாவுடன் இக்காட்சியில் ஒரு சிறுவன் ஒருவனும் நடித்திருந்தான்.இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும் முதலாம் நாள் படப்பிடிப்பில் விஜய் ஜீவா சிறீகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.இது பற்றி ஜீவா தனது டுவிட்டர் தளத்தில் நண்பன் பட மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு சிறப்பாக இடம்பெறுகிறது எனக்கூறியுள்ளார்.விஜயுடன் இணைந்து இன்னும் ஒரு படத்தில் நடிப்பீர்களா எனக்கேட்க கண்டிப்பா நடிப்பேன் எனக்கூறியுள்ளார்.விரைவில் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு ஸ்டிகளை இத்தளத்தில் எதிர்பாருங்கள்.

Wednesday, April 20, 2011

விஜய் அஜித்தின் புதிய முடிவு


தமிழ் சினிமாவின் தலைமுறைகளான எம் ஜி ஆர் சிவாஜி , ரஜனி கமல் அடுத்து தற்பொழுது காணப்படுவர் விஜய் அஜித் ஜோடியாகும்.விஜய் அஜித் இப்பொழுது அடிக்கடி சந்தித்து தமது நட்பினை ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தி வருகின்றனர்.விஜயும் அஜித்தும் ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும் பல விடயங்களையும் கலந்து ஆலோசித்து செய்யவும் முடிவெடுத்துள்ளனர்.இவர்கள் இருவரும் சேர்ந்து தர்பொழுது புது முடிவை எடுத்துள்ளனர்.அதாவது விஜய் அஜித் நடிக்கும் படங்களை ஒரே நேரத்தில் வெளியிடுவதில்லை எனவும் படங்களை வேறு வேறு திகதிகளில் வெளியிடுவது எனவும் ஒருவரின் படம் வெளியிடும் நேரத்தில் அவரின் படம் பற்றிக்கருத்துக்களை வெளியிட வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளனர்.இது இவர்களின் அடுத்த படங்களிலிருந்து தொடங்கவுள்ளது.விஜய் அஜித்தை அடுத்து ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் நடிக்க சொல்லிக்கூறியிருந்தார் இதுவும் விரைவில் நடைபெற உள்ளது .மங்காத்தாவிற்கு பிறகு பில்லாவுக்கு பதிலாக ராஜாவின் படத்தில் நடிக்க கூடும் எனக்கூறிவருகின்றது ராஜா தரப்பு.விஜயின் வேலாயுதம் இசைவெளியீட்டு விழாவுக்கு அஜித் பங்கு பெற்றக்கூடும் எனவும் அஜித்தரப்பிலிருந்து கூறப்படுகிறது. இருவரும் சேர்ந்தார்கள் அடுத்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.விரைவில் இணைந்து படம் பண்ணுங்கப்பா.

Tuesday, April 19, 2011

பிரமாண்ட இசை வெளியீட்டு விழா வேலை ஆரம்பம்


விஜயின் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் வேலாயுதம்.இப்படத்தை தயாரிப்பவர் பிரமாண்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம் ரவிச்சந்திரன்.தசாவதாரம் இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்தியதை போல் இப்பட ஆடியோ வெளியீட்டையும் நடத்த உள்ளார்.இப்படத்தின் தொடக்க விழாவையே மிகப்பிரமாண்டமாக நடத்தியவர் இசை வெளியீட்டை அதை விட பிரமாண்டமாக நடத்த உள்ளார்.அது தொடர்பான நடவடிக்கைகள் ஆரம்பமாகி விட்டன.முக்கிய தமிழ் முண்ணனி பிரபலங்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் எண்ணம் காணப்படுகிறது ரவிச்சந்திரனிடம்.மற்றும் ஹிந்திப்பிரபலங்களில் யாரையாவது ஒருவரை அழைக்கும் எண்ணமும் உள்ளது.அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ரவி.இவ்விழாவிற்கான ஒழுங்கமைப்பு முயற்சிகள் மிக வேகத்தில் இடம்பெறுகிறது.அத்துடன் படத்தின் இறுதிக்கட்ட வேலையும் சிறப்பாக நடைபெறுகிறது.விஜய் அன்டனியின் இசையில் காதுகளை குளிர்விக்க உள்ளான் வேலாயுதம் .படத்துவக்க விழாவிலே தீம் மியூசிக்கை போட்டு அசத்திய விஜய் அன்டனி பாடல் வெளியீட்டு விழா அன்று அதனை நிரூபிக்க உள்ளார்.தகரம் கிடைத்தாலே தங்கமாக்கும் ரவி தங்கமே கிடைத்தால் விடுவாரா?.சொனிமியூசிக் பெரிய விலைக்கு கடும் போட்டியின் மத்தியில் பாடல் உரிமையை வாங்கியுள்ளது.படத்தின் சட்டலைட் உரிமை யாருக்கு எனத்தெரியவில்லை.அது தொடர்பான செய்திகளை விரைவில் அறியத்தருவோம்.

Monday, April 18, 2011

விஜயுடன் டீல் ராஜாவுடன் நோ டீல்


விஜயின் நடிப்பில் மிக விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் வேலாயுதம் .இப்படத்துக்குரிய இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் என இருந்து இறுதி நேரத்தில் இசையமைப்பாளராய் விஜய் அன்டனியை போடும்படி விஜய் கூறி விஜய் அன்டனியை இசையமைப்பாளராய் தெரிவுசெய்தனர்.ஜெயம் ராஜாவும் விஜய் அன்டனியை தெரிவுசெய்ததில் மகிழ்ச்சியடைந்தார்.ஏனெனில் அன்டனியும் ராஜாவும் இணைவது முதன் முறையாகும்.விஜய் படம் என்றால் பாடல்கள் முக்கியம் பெறும்.அந்த வகையில் இப்படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமைய வேண்டும் என ஜெயம் ராஜா ஆசைப்பட்டு விஜய் அன்டனி போட்டுக்கொடுக்கும் இசையில் நல்லதை தெரிவு செய்து கொடுத்தார்.இவ்வாறு மூன்று பாடல்களை பதிவு செய்த பின் விஜய் அன்டனி பின்பு தான் போட்ட மூன்று பாடல் இசையை ராஜாவுக்கு கேட்காமல் விஜய்க்கு காட்டி ஓகே வாங்கிவிட்டாராம்.விஜய் படத்தில் பாடல் எழுதுவதற்கு பா.விஜய் நா.முத்துக்குமார் கபிலன் யுகபாரதி என பிரபல்யமான எழுத்தாளர் பட்டாளமே எழுதும் ஆனால் இப்படத்தின் இரு பாடல்களை புது முக எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர் எனவும் இது ஆன்டனியின் செயற்பாட்டில் உருவானது எனவும் கூறப்படுகிறது ஆனால் இது பற்றி ஆன்டனி ஒன்றும் கூறவில்லை.விஜய் வீட்டையே விலைக்கு வாங்கிய ஆன்டனி இப்போ விஜயின் அடுத்த படத்துக்கும் இசையமைக்கும் முயற்சியில் இப்படித்தொழிற்படுவதாக கிசுகிசுக்கிறது வேலாயுதம் குழு.பாடல் வெளியீட்டில் தெரியும் விஜய் அன்டனியின் முயற்சி.

சாய்ராம் பொறியியல் கல்லூரியில் களம் காணும் நண்பன் படக்குழு


விஜய் நடிப்பில் வெளிவர உள்ள நண்பன் படத்தின் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு சாய்ராம்  பொறியில் கல்லூரியில் இடம்பெற்றது.நண்பன் படக்குழு அந்தமான் ஸ்பெயின் நாடுகளுக்கே மூன்றாம் கட்டப்படப்பிடிப்புக்கு செல்ல் இருந்தன .ஆனால் திடீரென இடத்தை மாற்றி படத்தை ஆரம்பித்தார் சங்கர்.காலேஸ் சம்பந்தமான சில காட்சிகள் இங்கு படமாக்கப்படுகின்றன.ஏற்கனவே காலேஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் தெக்ரானில் படமாக்கப்பட்டன.மீதியுள்ள சில காட்சிகளே இங்கு படமாக்கப்படுகின்றன.விஜய் சிறீகாந்ட் ஜீவா ஆகியோர் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பில் கலந்து கொண்டரனர்.மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு சிறப்பாக தொடங்கியுள்ளது என ஜீவா தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.இப்படப்பிடிப்பு மிக வேகமாக முடித்துக்கொண்டு அந்தமான் பகுதிக்கு செல்ல உள்ளார் சங்கர் படத்தின் சில காட்சிகள் அங்கு படமாக்கப்பட உள்ளன.அதனைத் தொடர்ந்து விஜய் இலியானா பங்கு பெறும் டூயட் பாடலை படமாக்க ஸ்பெயின் செல்லவுள்ளார்.ஏற்கனவே பாடலுக்குரிய லொகேஸனை தெரிவு செய்துள்ள சங்கர் அங்கு சிறப்பாக படமாக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார்.இன்னும் ஒரு பாடலுக்கு சிறப்பான முறையில் சென்னையில் செட் போடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Sunday, April 17, 2011

வேலாயுதம் பட பாடல் உரிமையை வாங்கியது சொனி மியூசிக்


விஜயின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் வேலாயுதம் .இப்படத்தை ஜெயம் ராஜா இயக்க ஆஸ்கார் பிலிம் ரவிச்சந்திரன் மிகப்பிரமாண்ட முறையில் தயாரிக்கிறார்.இப்படத்திற்கு விஜய் அன்டனி இசையமைக்கிறார்.இப்படத்தின் பாடல் உரிமையை வீனஸ் நிறுவனமும் திங்க் மியூசிக் நிறுவனமும் சொனிமியூசிக் நிறுவனமும் வாங்குவதற்கு போட்டி போட்டு நின்றன.ஆனால் அதிக விலை கொடுத்து இப்பாடல் உரிமையை சொனி நிறுவனம் வாங்கியுள்ளது.விஜய் நடிப்பில் வெளிவந்த வேட்டைக்காரன் மற்றும் சுறா பட பாடல் உரிமையை திங் மியூசிக் நிற்வனமும் காவலன் உரிமையை வீணஸ் நிறுவனமும் வாங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.இப்பட உரிமையை சொனிமியூசிக் வாங்கியுள்ளது.மே மாதம் இப்படத்தின் பாடல்கள் வெளிவர உள்ளன.மங்காத்தா ஏழாம் அறிவு ஆகிய படங்களின் பாடல் உரிமையையும் இந்நிறுவனம் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.