Friday, April 1, 2011

விஜய் அமீர் இணைவார்களா?

விஜய் அமீரும் எப்பொதோ இணைந்திருக்க வேண்டும் ஆனால் இணையமுடியாமல் போனது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே.மெளனம் பேசியதே படத்தை அடுத்து விஜயுடன் சேர்ந்து பணியாற்ற விரும்பினார் அமீர் அது பருத்திவீரன் படத்துக்காக ஆகும் ஆனால் விஜய் அப்படத்தில் நடிக்கவில்லை.இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டு விட்டு ராம் படத்தை எடுத்தார் அதன் பின் விஜயுடன் சேரலாம் என எண்ணிய அமீர் அது நிறைவேறாமல் போக கார்தியை வைத்து பருத்திவீரனை எடுத்தார் அது மிகப்பெரிய கிட்டானது.அதன் பின் அமீர் தனது கனவுப்படமான கண்ணபிரான் படத்தை ஜெயம் ரவியை வைத்து எடுப்பது என திட்டம் போட்டார் அதனை கிடப்பில் போட்டு விட்டு ஜெயம் ரவியை வைத்து ஆதிபகவான் படத்தை எடுத்து வருகிறார்.இந்த கண்ணபிரானை விஜயை வைத்து எடுக்கலாம் என எண்ணி விஜயிடம் சென்றார் விஜய் ஓகே சொல்ல மிகுந்த சந்தோசத்துடன் ஆதிபகவான் வேலையை மேற்கொண்டார் அமீர்.தற்போது அமீர் ஆதிபகவானில் மிகவும் வேகமாக உள்ளார்.இது முடிந்த பின் கண்ணபிரான் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆயினும் விஜய் ஏனைய படங்களில் மும்முரமாக நடிப்பதால் இப்படம் இன்னும் பிந்தும் எனக்கூறப்படுகிறது.விஜய்க்காக அமீர் காத்திருப்பாரா தெரியவில்லை.பொறுத்திருந்து தான்  பார்க்கவேண்டும்.விஜயின் சுறா வந்த நேரத்தில் விஜய் மசாலா படங்களில் மட்டுமே நடிக்கிறார் எனக்கூறியபோது அமீர் விஜயும் சிறந்த நடிகர் அவரும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பார் எனக்கூறியே கண்ணபிரானில் நடிப்பார் விஜய் என் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment