Tuesday, April 26, 2011

யூனில் பகலவன் ஆரம்பம்


விஜய் தற்போது ஜெயம் ராஜாவின் வேலாயுதம் மற்றும் நண்பனில் நடித்து வருகிறார்.இரு படங்களிலும் மாறி மாறி நடித்து வருகிறார் விஜய்.இவரது வேலாயுதம் படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது .மே மாதம் நடுப்பகுதியில் இப்படத்தின் பாடல் வெளியீடு இடம்பெற உள்ளது.தற்போது நண்பன் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.நண்பன் படம் சென்னையை அண்டிய இடங்களில் இடம்பெறுகிறது.இப்படத்தின் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இறுதியில் முடிய உள்ளது.மே மாதம் தொடக்கத்தில் வேலாயுதம் படத்தில் நடிக்க சென்று விடுவார் விஜய் .யூன் 22 படம் வெளிவர உள்ளது.இதனை கவனித்த சீமான் தனது படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளார்.தேர்தல் முடிந்து என்ன முடிவு என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சீமான் விஜயின் அடுத்த படம் குறித்து விஜயிடம் மீண்டும் கதைத்துள்ளார்.வேலாயுதம் முடிந்தவுடன் படத்தை தொடங்கலாம் எனக்கூறியுள்ளார் விஜய்.ஏற்கனவே விஜய் சீமானின் பகலவன் படத்தில் நடிக்கப்போவதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.பின் சீமானும் அதனை உறுதிப்படுத்தினார் எனினும் எப்பொழுது தொடங்கும் என்பதை மட்டும் கூறவில்லை.ஆனால் இது மே மாதம் இறுதியில் அல்லது யூன் மாதம் தொடங்கவுள்ளது.கலைபுலி தாணு தயாரிக்கிறார்.ஏற்கனவே விஜயுடன் இணைந்து பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.கந்தசாமி எனும் பிரமாண்டபடத்தை எடுத்தவர் பகலவனிலும் அப்பிரமாண்டத்தை காட்ட உள்ளார்.விஜய் நண்பன் படத்தில் நடிக்க சென்றதால் பகலவன் படம் தள்ளி போனது.இனியும் எந்த மாற்றமும் நடைபெறக்கூடாது என்ற முடிவில் உள்ளார் விஜய் சீமான் மற்றும் தாணு. படத்தின் கதாநாயகியை மட்டும் சஸ்பென்சாக வைத்துள்ளனர்.எனினும் ஹன்சிகா என கோடம்பக்ககுருவி கிசுகிசுக்கிறது.

0 comments:

Post a Comment