பரபரப்பான படப்பிடிப்பில்

பரபரப்பான படப்பிடிப்பில்

யூலையில் இனிதே ஆரம்பம்

யூலையில் இனிதே ஆரம்பம்

2012 இன் பிரமாண்ட வெற்றி

Tuesday, February 28, 2012

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய்



விஜய் முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்த படம் 'போக்கிரி'. 
படத்தில் இறுதிகட்ட காட்சியில் தான் அவர் போலீஸ் அதிகாரி என தெரியவரும். 
முழுப்படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்தது இல்லை.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'துப்பாக்கி' படம் முழுவதுமே என்கவுண்டர்
ஸ்பெஷலிஸ்ட் பாத்திரத்தில் நடித்து வருகிறாராம் விஜய். முதற்கட்டமாக மும்பையில்
40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

'துப்பாக்கி' படத்தின் முக்கால்வாசி கதை மும்பையில் நடைபெறுவது போன்று
அமைத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்திற்காக
பெண் பார்க்கும் காட்சியை ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அக்காட்சியில்
விஜய் போலீஸ் உடை அணிந்து காஜல் அகர்வாலை பார்க்க போவது போன்று
காட்சி அமைத்து இருக்கிறார்கள்.

தற்போது நடைபெற்று வரும் பெப்ஸி பிரச்னையால் படப்பிடிப்பு தடைப்பட்டு
இருக்கிறது. இந்நேரத்தில் 'துப்பாக்கி' படத்தில் தனது வேடத்திற்கு ஏற்றவாறு
தனது உடம்பை மாற்றி வருகிறாராம்

அடுத்த படம் ! : ஷங்கர்


ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'நண்பன்'. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பையும் பெற்றது.

ஷங்கரின் இயக்கத்தில் அடுத்து வரவிருக்கும் படம் என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தன. தமிழில் கமல், தெலுங்கில் பிரபாஸ், மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷங்கர் என்றும், இப்படத்தில் கெஸ்ட் ரோலில் ஜாக்கி சான் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது.

இப்படத்தினை இதுவரை இந்திய திரையுலகமே கண்டிராத மெகா பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்திருக்கார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் என்று கோடம்பாக்க தகவல்கள் கூறின.

ஆனால் இந்த தகவல்கள் அனைத்தையும் மறுத்து இருக்கிறார் ஷங்கர். இதுகுறித்து ஷங்கர் தனது இணையத்தில் " நண்பன் படத்தை மிகப்பெரிய வெற்றி பெற வைத்ததற்கு நன்றி.  அதற்கு உறுதுணையாக இருந்த எல்லா ஊடகங்களுக்கும் நன்றி.

இப்போது எனது அடுத்த படத்தின் கதையை தயார் செய்து வருகிறேன்.
இப்படத்திற்காக இதுவரை நான் யாரையும் ஒப்பந்தம் செய்யவில்லை. "
 என்று தெரிவித்து இருக்கிறார்.

சொந்தக் குரலில் விஜய் பாடல்

விஜய் பல்வேறு படங்களில் தனது சொந்த குரலில் பாடல்களை பாடியுள்ளார். 'சச்சின்' படத்தில் இடம்பெற்ற 'வாடி வாடி' என்ற பாடல் தான்  கடைசியாக பாடினார்.

அதற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் இவர் பாடவில்லை. தற்போது நடித்து வரும் 'துப்பாக்கி' படத்திற்காக ஒரு பாடலை பாடி இருக்கிறார் விஜய்.

'துப்பாக்கி' படத்தில் இடம் பெறும் ஒரு பார்ட்டி பாடலுக்காக ஒரு டியூனை தயார் செய்தாராம் ஹாரிஸ் ஜெயராஜ். டியூனை தீர்மானம் செய்தவுடன்  ஹாரிஸ் இப்பாடலுக்கு விஜய் குரல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதி,  விஜய்யிடம் தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார்.

'பாட வேண்டுமா.. உடனே தயார்' என்று கூறினாராம் விஜய்.  ஹாரிஸ் இசையில் விஜய் பாட ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Monday, February 27, 2012

துப்பாக்கி படப்பிடிப்பு தொடங்கியது


பெப்ஸி தொழிலாளர் பிரச்சினையால் ரத்து செய்யப்பட்டிருந்த துப்பாக்கி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
கொலிவுட்டில் நண்பன் திரைப்படத்திற்கு பின்பு விஜய் துப்பாக்கி திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கியை இயக்கி வருகிறார்.
சமீபத்தில் ஏற்பட்ட தயாரிப்பாளர்-பெப்ஸி தொழிலாளர் பிரச்சினையால் துப்பாக்கி படப்பிடிப்பு தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரத்துசெய்யப்பட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியதாக, கொலிவுட்டிலிருந்து தகவல் வெளியாகியுள்ளன.
துப்பாக்கியில் இளையதளபதி விஜய், என்கவுன்டர் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

Saturday, February 25, 2012

சந்தோஷ் சிவனுடன் இணையும் விஜய்


ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் அடுத்த படத்தில் இளையதளபதி விஜய் நடிக்க உள்ளார்.
கொலிவுட்டில் நண்பன் படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தில் நாயகன் விஜய் நடித்து வருகிறார்.
துப்பாக்கியில் விஜய்யுடன் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. பெப்ஸி பிரச்சினையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் இரண்டம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தோஷ் சிவனின் வேகமான மற்றும் துல்லியமான ஒளிப்பதிவை பார்த்த விஜய், துப்பாக்கி படத்தினைத் தொடர்ந்து தனது திகதிகளை சந்தோஷ் சிவன் இயக்கும் படத்திற்கு கொடுத்து இருக்கிறார்.
ஆனால் இப்படத்தினை தயாரிக்கும் நிறுவனம் குறித்து இன்னும் முடிவாகவில்லை.

Friday, February 24, 2012

பெப்சி பிரச்சினைக்கு மத்தியில் விஜய்யின் பட ஷூட்டிங் மீண்டும் தொடங்குகிறது

விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. தமிழகம், ஆந்திரா என எங்கும் பெப்சி பிரச்சினை தலைவிரித்தாடுவதால், மும்பையிலேயே முழுப் படப்பிடிப்பையும் நடத்த முடிவு செய்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்.

பெப்சி பிரச்சினை காரணமாக துப்பாக்கி படத்தை இடையில் நிறுத்திவிட்ட முருகதாஸ், ஒரு குறும்படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.

இது விஜய்க்கு கவலையளித்தது. படப்பிடிப்பு இல்லாததால் அவரும் கூப்பிட்ட விழாக்கள், சலூன் திறப்பு என அனைத்துக்கும் போய் வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார் முருகதாஸ். கதைப்படி விஜய் மும்பையில் போலீஸ் அதிகாரி. எனவே மொத்தப் படத்தையும் மும்பையிலேயே முடித்துவிடத் திட்டமிட்டுள்ளனர்.

பெப்சி தொழிலாளர் பிரச்சினையும் அங்கு வராது என்பதால் இந்த முடிவு என்கிறார்கள். ஆனால் சில தினங்களுக்கு முன் அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு மும்பையில் நடந்தபோது பெப்சிக்காரர்கள் பிரச்சினை செய்தது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம், பெப்சி - தயாரிப்பாளர் தகராறு இன்னும் முடிவுக்கு வராததால் அனைத்து படப்பிடிப்புகளும் நின்றுபோய், கோடம்பாக்கமே ஸ்தம்பித்துள்ள நிலையில், விஜய் படத்தின் ஷூட்டிங்கை நடத்துவது முணுமுணுப்பைக் கிளப்பியுள்ளது.

Nanban second only to Endhiran


The strong run that Nanban is having in certain circuits even a month after its release has got the distributors raving about the wonders it has performed at the box office. Nanban has shown nothing less than phenomenal performance in the Madurai and Coimbatore belts. The distributors for these areas, Ramesh and Sivakumar, respectively have stated that almost all centres are witnessing repeat audiences and that is sustaining the collections in a big way. The gross collection of Nanban from 4 circuits of Coimbatore is around Rs. 5.5 crores. This is next only to Superstar’s Endhiran that had done a business of Rs. 8.0 crores during its initial month in the same 4 circuits. Yes, a difference of 2.5 crores in a months run in a district between two movies is quite huge. But, one must also take into account the fact that the tickets for Endhiran during the initial week had sold out for Rs. 500 and above while Nanban tickets were in the normal range of Rs 70-100 in both Madurai and Coimbatore. What does this mean? Well, it’s a complex issue of various factors. That a star can command houseful audiences even with tickets selling for Rs.500 is an indication of the crowd pulling power that he has. At the same time, if Nanban has gone on to make nearly 70% of Endhiran’s collection within the same running period, it means that it commanded a lot of repeat audiences, which the distributors say is true. Of course, we should also understand that the lower ticket rates is also a factor in attracting repeat audiences; which is something that Endhiran could not have done with ticket rates hitting the ceiling.

All said and done, the final numbers state one fact; in many circuits the business that Nanban has generated is second only to Endhiran; and it is definitely the highest ever numbers generated by a Vijay starrer; not to forget Jiiva. And, in the midst of Endhiran, Nanban, Rajni and Vijay, we should not forget the one man common to all this- shankar. He has truly emerged as the biggest revenue generating director of the industry.

Sunday, February 19, 2012

துப்பாக்கி படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்: விஜய்


துப்பாக்கி திரைப்படம் கை விடப்படவில்லை என்று நாயகன் விஜய் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிக்கும் துப்பாக்கியில் இளையதளபதி விஜய் நடிக்கிறார்.
துப்பாக்கி படப்பிடிப்பு மும்பையில் நடந்துவந்த நிலையில், தயாரிப்பாளர்-பெப்ஸி பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஏ.ஆர்.முருகதாசும் குறும்படம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதனால் துப்பாக்கி கைவிடப்பட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. இது விஜய்யின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் விசாரித்து வருகிறார்கள்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யிடம் ரசிகர்கள் கேட்டதற்கு, துப்பாக்கி நிறுத்தப்பட்டு விட்டது என்று வெளிவரும் தகவல்களை நம்பவேண்டாம் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர்-பெப்சி பிரச்சினை போன்றவையெல்லாம் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று கூறினார்.

விருது பெற்ற மகிழ்ச்சியில் இளையதளபதி விஜய்


எடிசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இரண்டு விருதுகளை வாங்கிய மகிழ்ச்சியில் இளையதளபதி விஜய் உள்ளார்.
சமீபத்தில் விஜய், சிறந்த நடிகருக்கான எடிஷன் விருது மற்றும் வேலாயுதம் படத்தில் சிறப்பாக நடித்ததற்கு “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” விருது என இரண்டு விருதுகளை பெற்றார்.
இதுகுறித்து இளையதளபதி விஜய் கூறியிருப்பதாவது, இந்த வருடத்தின் தொடக்கம் எனக்கு மகிழ்ச்சிகரமாக அமைந்துள்ளது.
தொடர்ந்து வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய நல்ல படங்களில் நான் நடிப்பேன் என்று நம்பிக்கை வைத்துள்ளேன்.
தற்போது எனது நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் நடிக்கிறேன்.
இது ஆக்ஸன் தீப்பொறி பறக்கும் படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் நிச்சயம் நிறைவேற்றும் என்று இளைய தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.

Wednesday, February 15, 2012

காதல் கதாநாயகர்கள்


ரஜினி-லதா
பேட்டிக்கு வந்த பெண்ணிடம் (லதா) காதல் வயப்பட்ட வரலாறு ரஜினியுடையது. தனியாக வந்த ரஜினியை வளைத்துப்போட நடிகைகள் கூடி நின்று வலை வீசியபொழுது ரஜினி பார்த்து ரசித்து, மனதை பறிகொடுத்த பெண் லதாதான். கண்ணும் கண்ணும் வைத்து, எளிமையாக கல்யாணம் நடந்தாலும் இன்று வரை வெற்றிகரமாக வலம் வரும் கலர்புல் ஜோடி இவங்கதான். இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை, 60 வயதைக் கடந்தவர் என்றாலும் இன்றைக்கும் ரஜினிதான் மாஸ். 25 வருஷத்திற்கு முன்பு பேசப்பட்ட ஜோடி ரஜினி-லதாதான்.

அஜித்-ஷாலினி
அஜித்தோடு கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின் கணக்கை எடுத்தால் அதற்கு பத்து விரல்கள் பத்தாது. உடனே மனதை ‘பறிகொடுக்கிற' சுபாவம் அவருடையது. அவருடன் இணைத்து கூறப்பட்ட நடிகைகள் பட்டியல் நீளமானது. ஆனால் அஜீத் மனம் விரும்பி கலயாணம் செய்து கொள்ள விரும்பியது ஷாலினிதான். இன்றைக்கு வரைக்கும் டார்லிங் என அழைத்து காதலை உறுதி செய்து கொண்டே இருப்பார் அஜித். அவரின் மோசமான தோல்விகளிலும் பாசத்துடன் உடன் இருந்து பேலன்ஸ் செய்தவர் ஷாலினி. நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்களின் வாழ்க்கையில் வசந்தமாய் வந்தது குட்டி தேவதை - அவரது மகள் அனோஷ்கா.

விஜய் - சங்கீதா
தமிழ் சினிமாவில் பரபரவென முன்னேறி வந்த விஜய்க்கு காதல் வாய்ப்புகளும் களை கட்டிவந்தன. ஒட்டியும் ஒட்டாமலும் பழகும் விஜய்க்கு காதல் வந்தது லண்டனில் வாழ்ந்த சங்கீதாவிடம். விடுமுறைக்காக சென்ற விஜய் கண்ணில் பட்டதும் வந்தது காதல். சத்தம் போடாமலும், வெளியே தெரியாமலும் காதலை வைத்துக்கொண்டார். இலங்கைத் தமிழரான சங்கீதா மணமொத்து விஜய்யோடு வாழ்ந்து வருகிறார்.

தன் ஆண், பெண் குழந்தையோடு நீலாங்கரையில் வசிக்கும் விஜய் சந்கீதாவை காதல் செய்த வருடங்கள் நான்கு. இன்னும் அவர்கள் இருவரிடமும் காணக்கிடைக்கும் அன்பு, பிரியம் ஆச்சரியமானது.

சூர்யா - ஜோதிகா
சூர்யா-ஜோ திருமண நடந்தது சூர்யா போராடிப்பெற்ற விஷயம். அப்பாவின் சம்மதத்திற்காக வருடக் கணக்கில் காத்திருந்தார். ஒருவருக்கொருவர் அக்கரை செலுத்தி, பின்பு காதலாக உருவெடுத்த வரலாறு சூர்யாவுடையது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்பார்கள். இருந்து மணம் முடித்த இப்போது சூர்யா வாழ்வது பூர்ணவாழ்வு. தன் ஒவ்வொரு வளர்ச்சியிலும் ஜோவின் பங்களிப்பைக் காண்கிறார் சூர்யா.

சூர்யாவின் திருப்பம் எடுத்த ‘காக்க காக்க' கூட ஜோவின் ஆலோசனையிலும், வழிகாட்டுதலிலும் வந்த வாய்ப்புத்தான். இதை அவரே நேர்பட பேட்டியில் சொல்லியிருக்கிறா. காதல் கனிந்து இவ்வளவு நாட்களாகியும், அன்று பார்த்த அதே அன்னியோன்யத்தை நான் பார்ப்பது இவர்களிடமே.

மாதத்திற்கு ஒருமுறை வெளியே குழந்தைகளோடு புறப்பட்டுப்போய் வருவது, இரண்டாவது சனிக்கிழமை வீட்டுக்குள்ளேயே குழந்தைகளோடு கொண்டாட்டம், வருஷத்திற்கு 20 நாட்களாவது பாரின் ட்ரிப் என கண்டிப்பாக பேமிலியோடு செலவழிக்கிற காதல் மனிதர் சூர்யா.

இன்றுவரைக்கும் காதல் காட்சியில் கொஞ்சம் அதிகப்படியாக நெருக்கம் காட்டி நடிக்கக் கூட சங்கப்படுவார் சூர்யா. ஜோவிற்கு சங்கடம் அளிக்கும் எதிலும் ஆர்வம் காட்டாத மனது அவருடையது. முழுமையான சமர்ப்பணம், முழுமையான தன்னிறைவு கொண்ட காதல் குடும்பம் இது.

கிரிஷ்-சங்கீதா
இன்றைக்கு வரைக்கும் கிரிஷ்ஷின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாத காதல் இவர்களுடையது. Made for each other ஜோடி. பார்க்கவே நன்றாக இருக்கும். நவீனமான ஜோடியாக இவர்களைச் சொல்லலாம். ரொம்பவும் ஜோவியல், நாட்டி, பொருத்தமான ஜோடி என்று கூட சொல்லலாம்.

ஜெயம்ரவி-ஆர்த்தி
ரொம்ப நாட்களாக காதல் ‘சீக்ரெட்' காத்தவர் ஜெயம்ரவி. கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் காதலுக்கு கிரின் சிக்னல் கிடைத்தது இவர்களுக்கு. அவ்விதமே என்றாலும் குழந்தையோடு இன்றைக்கு சந்தோஷமாக வலம் வருவது இந்த தம்பதியினரின் வழக்கம். நண்பர்களின் திருமணம் என்றால் முதல் ஆளாக வந்து நிற்பார். காதலை உணர்ந்து, பிடிவாதமாக வீட்டில் அனைவருக்கும் உணர்த்தி வெற்றிபெற்று  காதல் ஜோதியை இன்னமும் தொடர்ந்த் அணையாமல் கொண்டு செல்கிறது இந்த சூப்பர் ஜோடி!

ஸ்ரீகாந்த்-வந்தனா
இவர்கள் மாதிரி காதலித்ததும் கிடையாது. திட்டிக்கொண்டதும் கிடையாது. அநாகரீகத்தின் உச்சிக்கு சென்ற சண்டை, அமைதியாக முடிந்து, இப்போது மிக அழகான வாழ்க்கையை நடத்தி சென்று கொண்டு இருக்கிறார்கள். மனம் இருந்தால், வழியும் இருந்தால் எப்பவும் மனது ஒன்றிப்போகலாம் என்பதற்கு ஸ்ரீகாந்த்-வந்தனா ஜோடியை விட்டால் உதாரணம் சொல்ல ஆளில்லை. அன்றைய உறவுச் சிக்கல் மட்டும்தான், இப்போது எல்லோருக்கும் உதாரணமாக காட்டுகிற ஜோடி ஸ்ரீ-வந்தனா.

உதயநிதி-கிருத்திகா
கல்லூரியிலிருந்து, மணமேடை வரைக்கும் வந்த அருமையான காதல் உதயநிதியுடையது. மகனின் வேண்டுகோளில் இருந்த அன்பையும், ஈரத்தையும், காதலையும் பார்த்த ஸ்டாலின் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட, உதயநிதி வெற்றிக்கொடி கட்டினார். இன்றுவரைக்கும் காதலில் கண்ணியத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கிருத்திகாவிற்கு காதலோடு முழு சுதந்திரத்தையும் வழங்கியிருக்கிறார் உதயநிதி. சொந்தமான பத்திரிகை ஆரம்பித்தது முதல், குறும்படம் டைரக்ட் செய்தது வரை கிருத்திகா செயல்பட பார்த்துக் கொண்டு இருப்பது உதயநிதியின் இயல்பு.

விஜய்க்கு வில்லனா?

'நண்பன்' படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'துப்பாக்கி'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.

'துப்பாக்கி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜெயராம்.

ஜெயராம் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் 'பொன்னர் சங்கர்'. மலையாள திரைப்படங்களில்  பிஸியாக இருக்கும் ஜெயராம் தமிழில் நல்ல வேடங்கள் வந்தால் மட்டுமே நடித்து வந்தார்.

'துப்பாக்கி' படத்தில் ஜெயராமிற்கு விஜய்க்கு இணையான வேடம் கொடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் சங்கம் - பெப்ஸி பிரச்னை முடிந்தவுடன் நடைபெற இருக்கும் 'துப்பாக்கி' படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் ஜெயராம்.

சரோஜா, தாம் தூம் படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயராம். இப்படத்தில் அவர் வில்லனா இல்லையா என்பது சஸ்பென்ஸாம் !

விஜய்-விக்ராந்த்தின் பாட்டி மரணம்


ஷோபா சந்திரசேகரனின் அம்மாவும் விஜய்யின் பாட்டியுமான லலிதா நீலகண்டன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.
லலிதா நீலகண்டனின் பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் நடத்தி, பல படங்களைத் தயாரித்துள்ளனர். அவற்றை பெரும்பாலும் லலிதாவின் மருமகன் எஸ்ஏ சந்திரசேகரனே இயக்கினார்.
லலிதா நீலகண்டனுக்கு இரண்டு மகன்கள். பாடகரும் நடிகருமான எஸ் என் சுரேந்தர் மற்றும் சுந்தர். இரண்டு மகள்கள் ஷோபா சந்திரசேகரன் மற்றும் ஷீலா. ஷோபாவின் மகன் நடிகர் விஜய். ஷீலாவின் மகன் நடிகர் விக்ராந்த்.
பாட்டி மீது மிகுந்த பாசமாக இருந்தார் விஜய். மகள் ஷோபா- மருமகன் சந்திரசேரனுடன் வசித்து வந்த லலிதா நீலகண்டனுக்கு நேற்று நெஞ்சுவலி வந்தது. அவரை விஜயா மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் இன்று காலை அவர் மரணமடைந்தார்.
அவருக்கு நுங்கம்பாக்கம் தெரஸா சர்ச்சில் பிரார்த்தனை நடத்தப்பட்டது. மாலையில் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. லலிதா நீலகண்டனுக்கு விஜய் ரசிகர்கள், திரையுலகினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

வேலாயுதம் – விஜய் சிறந்த நடிகர்


எடிசன் பெய‌ரில் வருடம்தோறும் திரைத்துறையினருக்கு விருது வழங்கி வருகிறார்கள். இது ஐந்தாவது வருடம். இந்த வருடம் சிறந்த நடிகருக்கான விருதை பெறுகிறவர், விஜய்.
ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்த வேலாயுதம் படத்துக்காக விஜய் இந்த விருதை பெற்றுள்ளார். நண்பன் வெற்றியில் மகிழ்ந்துப் போயிருப்பவருக்கு இது கூடுதல் மகிழ்ச்சி.
வேலாயுதம் முழுமையான வெற்றியை பெறவில்லை, அது ஒரு கமர்ஷியல் சினிமா, விஜய் வழக்கம் போல பன்ச் வசனம் பேசி நடித்திருக்கிறார், மற்றபடி சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தவில்லை என்று புரணி பேசியவர்களின் பிட‌ரியில் இந்த விருது ஒரு போடு போட்டிருக்கிறது.
சந்தோஷம்தானே தளபதியின் கோடானு கோடி ரசிகர்களே?

Monday, February 13, 2012

2வது முறையாக சாம்பியன் : சென்னை ரைனோஸ் த்ரில் வெற்றி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் டி20 தொடரில், கர்நாடகா புல்டோசர்ஸ் அணியுடனான  இறுதிப் போட்டியில் சென்னை ரைனோஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. தொடக்க வீரர் விக்ராந்த் ஆட்டமிழக்காமல் 95 ரன் விளாசினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்ற செலிப்ரிட்டி கிரிக்கெட் லீக் டி20 தொடரின் 2வது சீசன், கடந்த மாதம் 13ம் தேதி ஷார்ஜாவில் கோலாகலமாகத் தொடங்கியது. விஷால் தலைமையிலான சென்னை ரைனோஸ் உட்பட மொத்தம் 6 அணிகள் இந்த தொடரில் களமிறங்கின.

லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த தெலுங்கு வாரியர்ஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ் மற்றும் சென்னை ரைனோஸ் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அரை இறுதி ஆட்டங்களில் சென்னை ரைனோஸ் அணி 15 ரன் வித்தியாசத்தில் தெலுங்கு வாரியர்ஸ் அணியையும், கர்நாடகா புல்டோசர்ஸ் அணி 53 ரன் வித்தியாசத்தில் மும்பை ஹீரோஸ் அணியையும் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறின.

ஐதராபாத், ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சென்னை ரைனோஸ் & கர்நாடகா புல்டோசர்ஸ் அணிகள் மோதின. டாசில் வென்ற சென்னை ரைனோஸ் கேப்டன் விஷால் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்களாக ஜீவா, விக்ராந்த் களமிறங்கினர். கார்த்திக் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஜீவா டக் அவுட் ஆகி வெளியேற சென்னை ரைனோஸ் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அடுத்து வந்த பாலாஜி 7 ரன்னில் வெளியேறினார். அரை இறுதியில் ஆல் ரவுண்டராக ஜொலித்து ஆட்ட நாயகன் விருது பெற்று அசத்திய விஷ்ணு 3 ரன் மட்டுமே எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறியது ரைனோஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அடுத்து விக்ராந்த்துடன் பிருத்வி ஜோடி சேர்ந்தார். ஒரு முனையில் பிருத்வி பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, மறுமுனையில் விக்ராந்த் அதிரடியாக விளையாடி ரன் குவித்தார். அபாரமாக விளையாடிய விக்ராந்த் அரை சதம் அடித்து அசத்தினார். விக்ராந்த் & பிருத்வி ஜோடி 3வது விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்தது. பிருத்வி 20 ரன் எடுத்து அபிமன்யு பந்துவீச்சில் சுதிர் வசம் பிடிபட்டார்.

கடைசி கட்டத்தில் ரமணா கம்பெனி கொடுக்க விக்ராந்த் சதம் விளாசுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ரமணா 8 ரன்னில் ஆட்டமிழந்தார். சென்னை ரைனோஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன் குவித்தது. விக்ராந்த் 95 ரன் (69 பந்து, 14 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் விஷால் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கர்நாடகா புல்டோசர்ஸ் பந்துவீச்சில் கார்த்திக், துருவா, பிரதீப், அபிமன்யு தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 20 ஓவரில் 162 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா புல்டோசர்ஸ் களமிறங்கியது. பாஸ்கர், ராஜிவ் இருவரும் துரத்த்தலை தொடங்கினர். அந்த அணி & ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன் எடுத்து திணறியது. சென்னை ரைனோஸ் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் துடிப்புடன் செயல்பட்டு அசத்தினர். 

எடிசன் விருதுகள் வழங்கும் விழா


கொலிவுட்டில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு எடிசன் விருதுகள் வழங்கும் விழா சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்தது.
இதில் சிறந்த நடிகருக்கான ரஜினி விருது, வேலாயுதம் திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய்க்கு கிடைத்தது. ராகவா லாரன்ஸ் இவ்விருதை விஜய்க்கு வழங்கினார்.
சிறந்த நடிகைக்கான விருது மயக்கம் என்ன நாயகி ரிச்சாவிற்கு வழங்கப்பட்டது. வாகை சூடவா படத்தில் நடித்த இனியாவுக்கும் விருது கிடைத்தது.
நடிகர்கள் ஜெயம் ரவி, மகத் ஆகியோரும் விருது பெற்றனர். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது பிரேம்ஜிக்கு கிடைத்தது.
கொலிவுட்டின் சிறந்த பாடலாக தனுசின் கொலை வெறி பாடல் தெரிவு செய்யப்பட்டது. தனுசின் மனைவி ஐஸ்வர்யா விருதை பெற்றார்.
இதையடுத்து சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஹாரீஸ் ஜெயராஜ்க்கும், குணசித்திர நடிகை விருது கோவை சரளாவுக்கும், துணை நடிகருக்கான விருது சரவணனுக்கும் வழங்கப்பட்டன.
சிறந்த வில்லன் நடிகர் விருதை ஆர்.கே. பெற்றார். பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மேலும் தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்த பேபி சராவுக்கும் விருது வழங்கப்பட்டது.
சிறந்த திரைக்கதைக்கான விருதை மௌனகுரு இயக்குனர் சாந்தகுமார் பெற்றார்.













Sunday, February 12, 2012

விஜயின் விடுமுறை கொண்டாட்டம்


பெப்சி, தயா‌ரிப்பாளர்கள் சங்க கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது நடிகர்களுக்கு பல வகையில் வசதியாகிவிட்டது. சிலர் ஓய்வு எடுக்கிறார்கள், சிலர் டூர் கிளம்பியிருக்கிறார்கள். விடுமுறையை ஆக்கப்பூர்வமாக செலவழிப்பது நடிகர் விஜய்.
நடிப்பதற்கு அடுத்து விஜய்க்கு சந்தோஷமான விஷயம் ரசிகர்களை சந்திப்பது. ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் விஜய் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு விஜயம் செய்வார். ரசிகர்களை சந்திப்பார், ஏழைகளுக்கு உதவிகள் செய்வார்.
இந்தமுறை நண்பன் வெளியாகியிருக்கிறது. விஜய் கே‌ரிய‌ரில் முக்கியமான படம். அதனால் உற்சாகமாக தனது பயணத்தை தொடர்கிறார். பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து நண்பன் பாட்டு பாடி அவர்களை மகிழ்வித்தவர் மதுரை தங்க ‌ரிகல் திரையரங்குக்கும் சென்றார். ரசிகர்களை சந்தித்தார். மனவளர்ச்சி குறைந்தவர்களுக்கு உதவிகளும் வழங்கினார்.
விருதுநகர் அப்ஸரா திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் பேசியவர், சத்யராஜுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவு நண்பன் மூலம் நிறைவேறியது என்றார். நண்பன் படமும், விஜய்யின் விஜயமும் அவரது இமேஜை மேலும் உயர்த்தியிருக்கிறது.

யுகே-யில் நண்பன்


யுகே பாக்ஸ் ஆஃபிஸில் நண்பன் ம‌ரியாதைக்கு‌ரிய இடத்தைப் பிடித்திருக்கிறது. விஜய், நண்பன் காம்பினேஷன் என்பதால் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். விஜய் படங்களில் இதுதான் யுகே-யில் அதிகம் வசூல் செய்தப் படம் எனவும் சுறப்படுகிறது.
நண்பன் நான்காவது வார இறுதியில் இரண்டு திரையிடல்களில் 1,698 பவுண்ட்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் யுகே வசூல் 2,14,735 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் சுமார் 1.66 கோடி.
இது சூர்யாவின் சிங்கம், 7 ஆம் அறிவு படங்களைவிட அதிகம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

Friday, February 10, 2012

விஜய்யின் நண்பன் சுற்றுப்பயணம்

கொலிவுட்டில் நண்பன் திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நாயகன் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் உள்ள மதுரைக்கு இளையதளபதி விஜய் வந்தார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு நாயகன் விஜய் பதில் அளித்தார்.
கேள்வி: பல்வேறு படங்களில் நடித்துள்ளீர்கள். நண்பன் படம் நடித்து முடித்த பின்பு மதுரைக்கு வந்த அனுபவம் எப்படி இருக்கிறது?
பதில்: பல தடவை மதுரைக்கு வந்துள்ளேன். நண்பன் ரிலீசுக்கு பின்பு சந்திக்கும் ரசிகர்களை நண்பர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். திரைப்படத்தின் வெற்றியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
குடும்பத்தில் தாய்-தந்தை, மனைவி, மாமன், மச்சான் என எல்லோரும் இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் சில விடயங்களை சொல்ல முடியாது.
ஆனால் நண்பர்களிடம் எல்லா விடயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம். யாரும் இல்லாமல் இருந்து விடலாம், நண்பர்கள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது. நண்பன் திரைப்படத்தில் ஒரு டயலாக்கை சொல்வேன். பிடித்த தொழிலை தேர்ந்தெடுத்து அதில் திறமையாக விடா முயற்சியுடன் ஈடுபட்டால், வெற்றி கிடைக்கும்.
இந்த டயலாக்கை நீங்களும் பின்பற்றி உங்கள் தொழிலில் நம்பர்-1 ஆக வரவேண்டும் என்பதே எனது விருப்பம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனது பெற்றோர் என்னை டாக்டராக்கி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டனர். ஆனால் பல போராட்டங்களுக்கு பிறகு நான் சினிமா துறைக்கு வந்தேன்.மதுரையில் ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு அலாதியானது, மறக்க முடியாதது.
கேள்வி: நண்பன் படத்தில் புது டீம் அமைத்து பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?
பதில்: நன்றாகவே இருந்தது. சக நடிகர்களான ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஏற்கனவே எனக்கு நெருங்கிய நண்பர்கள். இதனால் நண்பன் படத்தில் நடிப்பதில் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை.
கேள்வி: இந்தியில் அமீர்கான் நடித்த கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளீர்கள். அமீர்கான் நடித்த காட்சிகளை பார்த்தீர்களா?

பதில்: படத்தை ஒரு தடவை பார்த்தேன். படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பு அமீர்கான் நடித்த காட்சிகளை பார்த்தேன். பின்னர் என்னுடைய பாணியில் நண்பன் படத்தில் நடித்துள்ளேன்.

கேள்வி: 50க்கும் மேற்பட்ட கதாநாயகிகளுடன் நடித்துள்ளீர்கள். அதில் உங்களுக்கு பிடித்த கதாநாயகி யார்? பதில்: சிம்ரன்.
பின்னர் நண்பன் திரைப்படத்தின் ஒரு பாடலை விஜய் பாடினார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய விசில் சத்தம் தியேட்டரை அதிர வைத்தது.
அதன்பிறகு தியேட்டர் மாடிக்கு சென்ற விஜய், அங்கிருந்து ரசிகர்களை பார்த்து கைசையத்தார். விஜய்யின் வருகையையொட்டி தியேட்டரில் பொலிஸ் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

மனநலம் குன்றிய மாணவர்களுடன் நாயகன் விஜய்

கதைக்களம் தரமாக அமைந்தால் இரண்டு நாயகர்களுடன் இணைந்து நடிப்பதாக நாயகன் விஜய் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் நாயகன் விஜய் பயணித்துவருகிறார்.
தமிழ்நாட்டில் நண்பன் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை விஜய் தந்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் மதுரையில் நண்பன் திரையிடப்பட்டுள்ள தங்கரீகல் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் நண்பன் வெற்றியை நாயகன் விஜய் கொண்டாடினார்.
இதையடுத்து மதுரையில் மனநலம் குன்றிய மாணவர்கள் மத்தியிலும் நாயகன் விஜய் உரையாடி, அவர்களுக்கும் இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.
அப்போது நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்,
நண்பன் திரைப்படத்தை போல இரண்டு, மூன்று கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிப்பீர்களா?
விஜய்: ஒரு திரைப்படத்திற்கு கதை தான் நாயகன். நாங்கள் இரண்டாம் பட்சம் தான். எனவே கதை திருப்திகரமாக இருந்தால் நடிப்பேன்.
நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?
விஜய்: பிரண்ட்ஸ் திரைப்படம் போல ஒரு கதை அமைந்தால் இணைந்து நடிப்பேன்.
தற்போது நீங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படம்?
விஜய்: துப்பாக்கி என்று பதிலளித்தார்

Wednesday, February 8, 2012

துப்பாக்கி பிந்துமா?


துப்பாக்கி திரைப்படத்திற்கு முன்பு குறும்படம் ஒன்றினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார்.
கொலிவுட்டில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.

தயாரிப்பாளர் சங்கத்திற்கு பெப்சிக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் துப்பாக்கி படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதனால் விஜய் நண்பன் திரைப்படத்தினை விளம்பரப்படுத்த தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளுக்கும் சென்று வருகிறார்.
இந்நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு குறும்படத்தினை இயக்க முடிவு செய்துள்ளார்.
தன் வீட்டிற்கு வெளியே ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்ததை கேட்ட முருகதாஸ், காதலர்களை மையமாக வைத்து ஒரு குறும்படம் இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
அந்த குறும்படத்திற்காக பள்ளியில் படிக்கும் மாணவன்-மாணவியை முருகதாஸ் தேடி வருகிறார்.
குறும்படத்திற்கு ஏற்றவாறு நடிகர்கள் கிடைத்துவிட்டால் 10 நிமிட குறும்படத்தினை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.

Monday, February 6, 2012

துப்பாக்கி'யில் சத்யன்


விஜய் - சத்யன் இருவரும் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான படம் 'நண்பன்'. சத்யன் நடிப்பு இப்படத்தில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் விஜய் - சத்யமன் இருவரும் மீண்டும்  'துப்பாக்கி' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.

'நண்பன்' படப்பிடிப்பில் இவரது நடிப்பை பார்த்தவர்கள் 'துப்பாக்கி' படத்திற்கு இவரை முருகதாஸிடன் சிபாரிசு செய்ய, முருகதாஸ் உடனே அவரை  'துப்பாக்கி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தாராம்.

'நண்பன்' படத்தில் இவரது நடிப்பை ரசித்த ஏ.ஆர்.முருகதாஸ், சத்யனை பாராட்டியதோடு  தன் படத்தில் அவரது கதாபாத்திரத்தை அதிகப்படுத்தியிருக்கிறாராம். இப்படத்தில் விஜய்யின் நண்பனாக நடிக்கிறார் சத்யன்.

'நண்பன்' படத்தினைப் போலவே 'துப்பாக்கி' படத்திலும் தனது நடிப்பிற்கு வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சத்யன்.

Saturday, February 4, 2012

வேலாயுதம் நூறாவது நாள் வசூல் (Official)

விஜயின் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் வேலாயுதம் . திபாவளிக்கு வெளிவந்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனம் மற்றும் மக்களின் வரவேற்புடன் நூறாவது நாளை கொண்டாடியது. இப்பொழுதும் சென்னையில் இப்படம் பத்துக்கு மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் உலக வெளியீட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. இப்படத்தின் வசூல் குறித்து  ஐங்கரன்  இனையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது இப்படத்தின் பட்ஜெட் 45 கோடி. இப்படம் 120 கோடியை சம்பாதித்துள்ளது என சொல்லப்பட்டுள்ளது. விஜய் ஹன்சிகா ஜெனிலியா சந்தானம் சாயா சிண்டே பாண்டியராஜன் சரண்யா மற்றும் பலர் நடிக்க ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் அன்டனி இசையில் ப்ரியனின் படப்பிடிப்பில் இப்படம் வெளிவந்தது.