Thursday, April 14, 2011

அதிகமானோர் வாக்களித்தமையானது ஒரு மாற்றம், எழுச்சி - விஜய்


இளைய தளபதி விஜய் தன் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரனுடன் மதியம் 3.30 மணிக்கு சென்னை
அடையாறிலுள்ள கார்ப்பரேஷன் பள்ளிக்கு வந்து ஓட்டுப் போட்டபின்னர் பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,ஒவ்வொரு தேர்தலிலும் 45 சதவீதம் பேர் வாக்களிப்பதில்லை. இது எனக்கு வருத்தமாக இருக்கும். ஆனால் இன்று வாக்களிக்க வருமுன் டிவியில் இதுவரை எழுபது சதவீதமானோர் வாக்களித்தனர் என அறிந்தேன். 

இது ஒரு மாற்றம், எழுச்சி, இதற்கு தேர்தல் கமிஷனை பாராட்டியே தீரவேண்டும். இந்த தேர்தலில் பணியாற்றிய என் மக்கள் இயக்கத்தினர் , ரசிகர்களுக்கு நன்றி கூறுகின்றேன், என தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.



மேலும் படங்கள் 






1 comments:

Post a Comment