Monday, April 25, 2011

கலக்கும் விஜய்


விஜய் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் காவலன்.இப்படம் பல பிரச்சனைகளை சந்தித்து வெளியிட்டார் விஜய்.அதற்கு விஜய்க்கு பலனும் கிடைத்தது.அடுத்து விஜய் நடிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் வேலாயுதம்.இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார்.இப்படத்திற்குரிய எதிர்பார்ப்பு மிக அதிகமாக காணப்படுகிறது.இப்பட இசையை ரசிகர்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.இப்படத்தின் உரிமையை வாங்க பலரும் முன்வருகின்ற போதும் இப்படத்தை யாருக்கும் கொடுக்காமல் வெளியிடப்போகிறார் ரவிச்சந்திரன்.இப்படத்தில் விஜய் பால்காரனாக வருகிறார்.ஜெனிலியா தொலைக்காட்சி நிருபராகவும் ஹன்சிகா மோத்வானி கிராமத்து முறைப்பெண்ணாகவும் நடிக்கின்றனர்.விஜய் கன்சிகா மற்றும்ஜெனிலியாவின் கெமிஸ்ரி இப்போது வெளியாகிய படங்களை பார்க்கும் போதே அருமையாக உள்ளது. வித்தியாசமான லொகேசன்களில் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் கதை கிராமம் நகரம் என மாறி மாறி நகர்கிறது.ஒரு சாதாரண மனிதன் எப்படி சத்தி வாய்ந்தவனாக மாறுகிறான் என்பதை இப்படத்தில் காணலாம்.அடுத்து விஜய் நடிப்பில் நண்பன் படம் வெளிவர உள்ளது.கியூட்டான விஜயை இப்படத்தில் ரசிகர்கள் காணலாம்.இப்படத்தை வாங்க சன்பிக்சர்ஸ் ஜெமினி பிலிமிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறது.எனினும் ஜெமினி பிலிம் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை.எந்திரனை தந்த ஜெமினி பிலிம் சில சமயம் அதற்கு பதிலாக நண்பனை கொடுக்கலாம் எனத்தெரிகிறது.பொறுத்திருந்து பார்ப்போம்.அடுத்து பகலவன்  அதன் பின் பொன்னியின் செல்வன் .பொன்னியின் செல்வன் படம் மணிரத்தினம் படம் இப்படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.இவ்வாறு விஜயின் படங்களுக்கு எதிர்பார்ப்பு இருப்பதைப்போல் விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் வேலாயுதம் படத்திற்கு இப்போதே போட்டி போடத்தொடங்கியுள்ளனர்.

0 comments:

Post a Comment