Saturday, January 28, 2012

நண்பன் படத்துக்கு பிறகு சம்பள உயர்வு


நண்பன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இலியானா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
தென்னிந்திய படங்களில் நடிப்பதோடு பாலிவுட் படத்திலும் இலியானா நடித்து வருகிறார்.


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் விஜய் உடன் இலியானா இணைந்து நடித்துள்ளார்.
இந்நிலையில் நண்பனின் வெற்றியைத் தொடர்ந்து இலியானா தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.
நண்பன் படத்தில் நடிக்கும் போதே அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை என்று இலியானா பரபரப்பாக பேசப்பட்டார். கடந்த இரண்டு வருடங்களாக கோடிக்கு குறைவாக இலியானா சம்பளம் வாங்குவதில்லை என்று பட புள்ளிகள் கூறுகிறார்கள்.

0 comments:

Post a Comment