Thursday, January 26, 2012

விஜய்யை புகழ்ந்த சத்யராஜ்


இளையதளபதி விஜய் கன்னத்தை கிள்ளிப் பார்க்க ஆசைப்படுவதாக சத்யராஜ் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் நடித்திருக்கும் நண்பன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நண்பன் திரைப்படத்திற்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
இந்நிகழ்ச்சியில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது நடிகர் சத்யராஜ் பேசியதாவது, நாட்டின் தலைசிறந்த நடிகர் அமீர்கான். திரி இடியட்ஸ் திரைப்படத்தில் அமீர்கானின் நடிப்பை விட நண்பனில் விஜய்யின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை போல விஜய் அழகான நடிகராக திகழ்கிறார். அவருடைய கன்னத்தை கிள்ளிப்பார்க்க நான் அவ்வப்போது ஆசைப்படுவேன் என்று கூறியுள்ளார்.
நண்பன் திரைப்படத்தில் நடித்தது எனக்கு அதிகமான சந்தோஷத்தை அளித்துள்ளதாகவும் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு போக்கிரி திரைப்பட விழாவில் இந்தியாவின் புருஸ்லி என்று விஜய்யை சத்யராஜ் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment