Wednesday, January 18, 2012

துப்பாக்கியில் இருக்கும் தோட்டா விஜய்


ரசிகர்களுக்கு துப்பாக்கி திரைப்படம் பெரிய விருந்தாக அமையும் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் என்று முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வருகிறார்.

நண்பன் திரைப்படத்தை முடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தில் அவர் நடித்து வருகிறார்.
துப்பாக்கி படத்தில் நடித்த அனுபவம் குறித்து விஜய் கூறியதாவது, துப்பாக்கி படம் என்னை இன்னொரு விஜய்யாக ரசிகர்களுக்கு காட்டும்.
இந்தப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும், துப்பாக்கி தான் படத்தின் கதை என்றால் துப்பாக்கியில் இருக்கும் தோட்டா நான்.
துப்பாக்கியில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும் நண்பன் படம் குறித்து அவர் கூறுகையில், நண்பன் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே நண்பன் படம் பெரிய வெற்றியடையும் என்று எனக்குத் தெரியும்.
சங்கர் இயக்கிய முதல்வன் திரைப்படத்திலேயே நான் நடிக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது.
சங்கர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசை இப்போது நண்பன் திரைப்படம் மூலம் நிறைவேறியுள்ளது என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment