Friday, January 27, 2012

2012-ம் ஆண்டின் முதல் ஹிட்!


எஸ்.எம்.எஸ், காலர்ட்யூன், ஃபேஸ்புக் என்று நண்பர்களுக்கிடையே பிரபலமாகி வரும் வார்த்தை 'என் ஃபிரண்ட போல யாரு மச்சான்' என்பதுதான். இந்த் ஆண்டின் மெகா ஹிட் படமான 'நண்பன்' படத்தில் விவேகா எழுதிய இந்த பாடல்தான் இந்த ஆண்டின் முதல் ஹிட் பாடலாகும். 'நீ வருவாயா என' படத்தில் 'பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா..' என்ற பாடலை எழுதி தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான விவேகா, தொடர்ந்து பல வெற்றி பாடல்களை எழுதி வருகிறார். கடந்த ஆண்டு அதிகமான ஹிட் பாடல்களை எழுதியவர் என்ற பெருமையை தட்டிச் சென்ற இந்த இளம் பாடலாசிரியர், இந்த ஆண்டும் அந்த பெருமையை தட்டிச் செல்ல, 'மாற்றான்', 'சிங்கம்-2', 'சகுனி', 'அரவான்', 'கரிகாலன்', 'வல்லினம்' உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதிவருகிறார்.
'நண்பன்' படத்தில் தான் எழுதிய 'என் ஃபிரண்ட போல யாரு மச்சான்' பாடல் பெற்றிருக்கும் வெற்றியால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கும் விவேகா, இந்த வெற்றி அனுபவத்தை பற்றி கூறும் போது, "நண்பன் பெரிய படம். ஷங்கர் சார் மாபெரும் இயக்குநர். அவர் பெயரை சொன்னாலே அகில இந்திய வியாபாரம் ஆகிவிடும் அந்த அளவுக்கு வணிக மதிப்புள்ள இயக்குநர். அதே போல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒவ்வொரு பாடலையும் வெற்றிப் பாடலாகக் கொடுத்து உச்சத்தில் இருப்பவர். விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ் போன்ற நட்சத்திர பலம். இப்படி இயல்பாகவே படத்தின் பிரமாண்டம் பெரிதாகிவிட்டது. படத்தில் நான் எழுதிய பாடலுக்கு இந்த பெருமையை பிரமாண்ட வெளிச்சம் பல மடங்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. இது தான் உண்மை. அதற்காக இந்த பாடலை எழுத வாய்ப்பளித்த இயக்குநர் ஷங்கர், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார். தற்போது தனது பாடல்களின் தொகுப்பை பத்திரிகை ஒன்றில் கட்டுரையாக எழுதும் விவேகா, விரைவில் ஐந்து புத்தகங்களை வெளியிட இருக்கிறார். 

0 comments:

Post a Comment