Friday, May 27, 2011

எஸ்ஏ சந்திரசேகரனுக்கு இடைக்காலத்தடை


சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக எஸ்.ஏ. சந்திரசேகரன் தொடர இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்-இயக்குநர் பாபு கணேஷ் தொடர்ந்த வழக்கில் சென்னை சிட்டி கோர்ட் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தயாரிப்பாளர் சங்க விதிகளுக்கு எதிராக எஸ்.ஏ. சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று பாபு கணேஷ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
பொதுக்குழு கூடி தேர்தல் நடத்தும் வரை எஸ்.ஏ.சி. நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பாபுகணேஷ் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சிவில கோர்ட், எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி தொடர தடைவிதித்து, அது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment