Saturday, May 21, 2011

உயரும் விஜய்யின் செல்வாக்கு


vijay-velayutham-21-05-11
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான காரணங்களில் விஜய்யும் ஒருவர் என்ற வகையில், விஜய்யின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்திருப்பதாக ஒரு ரிப்போர்ட் தெரிவிக்கின்றது. இது ஒரு வகையில் வேலாயுதம் படத்தின் வெற்றிக்கு உதவும் என்று படத்தின் தயாரிப்பாளர் நினைப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் வேலாயுதம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை இன்னும் பிரம்மாண்டமாக் எடுக்கலாம் என்று விஜய் தரப்பில் கேட்டபோது, தயாரிப்பாளர் உடனே ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது..



தேர்தல் முடிவுகளுக்கு முன், விஜய்யின் வேலாயுதம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு ஜெயலலிதாவை அழைக்கலாம் என்று விஜய் தரப்பில், படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் சொல்லப்பட்டபோது அவர் மறுத்து விட்டார். தேவையில்லாமல் படத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று கூறிவிட்டார்.

அவர் அப்படி சொன்னதற்கு காரணம், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற பயம்தான் காரணம் என்று சொல்லப்பட்டது. அதை உண்மையாக்கும் வகையில் தற்போது தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ஆடியோ விழாவுக்கு முதல்வரை அழைக்க சம்மதம் சொல்லிவிட்டார், ஆனால் முதல்வர்தான் வருவாரா என்று தெரியவில்லை. ஏனென்றால் முன்னால் முதல்வர் அடிக்கடி சினிமா விழாக்களில் கலந்து கொள்வதை விமர்சித்தவர் என்பதால், வருவாரா? மாட்டாரா? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறது வேலாயுதம் டீம்.

0 comments:

Post a Comment