Monday, May 30, 2011

ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த தீடீர் விருந்து


சென்னை வடபழனியில் உள்ள சங்கீதா கல்யாண மண்டபத்தில் நேற்று மாலை 7 மணி ஆளவில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை திடீரென சந்தித்தார்.
தமிழகமெங்குமிருந்து ஊராட்சி, ஓன்றிய, நகர, மாவட்ட இளைஞரணியைச் சேர்ந்த தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் இயக்க நிறுவனர் ஏஸ்.ஐ.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய் “ தவறு செய்த குடும்ப ஆட்சி ஆகற்றப்பட்டு புரட்சித் தலைவி ஆம்மா ஆவர்களின் நல்லாட்சி ஆமையவேண்டும் என்பதற்காக, நமது இயக்கம்.ஆ.தி.மு.க.தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டேன்.
நீங்கள் பல்வேறு ஆரசியல் கட்சிகளில் இருந்தாலும், அந்த உணர்வுகளையெல்லாம் தூக்கி ஏறிந்துவிட்டு, என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஆம்மாவின் வெற்றிக்கு முழு மூச்சோடு உழைத்த ஊங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மா ஆவர்களின் பொற்கால ஆட்சி ஆமைய, நாமும் ஒரு அணியாக இருந்த காரணத்தை எண்ணி மகிழ்ச்சி ஆடைகிறேன். மேலும் வெற்றி பெற்ற பல வேட்பாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு உங்களது கடுமையான உழைப்பைப் பாராட்டியபோது எனக்குப் பெருமையாக இருந்தது.
மாற்றம் என்பது மானிடத் தத்துவம் என்று கவியரசு கண்ணதாசன் சொன்னது போல, நமது நற்பணி மன்றங்கள் காலப்போக்கில் நற்பணி இயக்கமாக மாறியது.

இலங்கைத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்தது முதல், ஏழை மாணவ மாணவிகளுக்குகம்ப்யூட்டர் மையங்கள் ஏற்படுத்தியது வரை, பல சமூக நலப்பணிகள் செய்து நமது இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது.
இனி மேலும் சமூக நலப்பணியைத் தொடர்ந்து செய்து, மாண்புமிகு முதல்வர் புரட்சித்தலைவி அம்மா ஆவர்களின் கரத்தை வலுப்படுத்தி, அவர்களின் ஆசியோடு உங்களின் எதிர்காலத்தையும் ஓளிமயமாக்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விவேகானந்தர் சொன்னது போல வேகத்தோடும் விவேகத்தோடும் பணியாற்றுங்கள்.

நாளைய உலகம் உங்கள் கையில்” இவ்வாறு விஜய் பேசினார். ஏஸ்.ஐ.சந்திரசேகரன் பேசும்போது இந்த நிழ்ச்சியில், நமது இயக்கத்த்தின் நற்பணி மன்றத் தலைவராக இருந்த சி.ஜெயசீலன் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளை அறித்தார்.
அ.இ.ஆ.தி.மு.க.கூட்டணி ஆமோக வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வரான சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஆனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்தார் விஜய். 

0 comments:

Post a Comment