Tuesday, May 17, 2011

நடிகர்கள் தம்மை மாற்றிக்கொண்டார்கள் - மிஷ்கின் பரபர பேட்டி


வழமையான மசாலா படங்களிலிருந்து நடிப்பதை விடுத்து கதையம்சம் கொண்ட சிறந்த மற்றும் தரமான படங்களை இன்றைய தமிழ்நாட்டின் நடிகர்கள் நடிக்கத்தொடங்கிவிட்டார்கள்.அத்தகைய படங்களை ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளத்தொடங்கிவிட்டார்கள் என்றார் இயக்குனர் மிஷ்கின்.விஜய் சிம்பு தனுஸ் போன்றோர் இதில் முக்கியமானவர்கள்.வழமையான அதிரடி படங்களை விடுத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கத்தொடங்கிவிட்டனர்.சிம்புவுக்கு என் கதைகள் மீது மிகவும் பிடித்து விட்டது.நாங்கள் இருவரும் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினோம்.ஆனால் இன்னும் முடிவுபண்ணப்படவில்லை என்றார்.நான் இரண்டு கதைகளை வைத்துள்ளேன்.அதில் ஒரு கதைக்கு நான் யார் யார் நடிப்பதென்று தீர்மானித்து விட்டேன்.தற்பொழுது ஒரு ஆரோக்கியமான காலமாக தழில் சினிமாவில் இருக்கிறது இயக்குனர்களின் கதைகளுக்கு ஏற்ற நடிகர்களாக மாற அனைவரும் தயாராக உள்ளனர்.விஜய் அமீரின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.விஜய் மிகவும் அவதானமாகவும் நிதானமாகவும் நல்ல சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கத்திட்டமிட்டுள்ளார்.மற்றும் அத்தகைய இயக்குனர்களுக்கு முன்னுரிமை கொடுக்கத்தொடங்கிவிட்டார் என்றார்.மணிரத்தினத்தின் கனவுப்படமான பொன்னியின்செல்வன் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகின ஆனால் அதன் உண்மை நிலவரம் தெரியவில்லை என்றார் வெற்றி இயக்குனர் மிஷ்கின்.

0 comments:

Post a Comment