Friday, January 28, 2011

2 ஹீரோ கதைகளை நான் வேண்டுமென்று தவிர்த்ததில்லை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news


காவலன் படம் வெளியாகி வெற்றியும் பெற்றுள்ள நிலையில், தனது எதிர்கால சினிமா பற்றிய தனது பார்வையை மாற்றியுள்ளதாக விஜய் கருத்து தெரிவித்துள்ளார். சமூகத்துக்கு நல்ல கருத்துக்களைச் சொல்லும் படங்களில் இனி அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாக விஜய் தெரிவித்துள்ளார். அரசியல் பிரவேசம் குறித்து தற்போது தனக்கு எந்த எண்ணம் இல்லை என்று கூறிய அவர், அதற்குகான நேரம் அமைய வேண்டும் என்று கூறினார். மேலும், அரசியலில் ஈடுபடும் முடிவை நான் எடுத்தால் அதை வெளிப்படையாக அறிவிப்பேன். அரசியல் பிரமுகர்களைச் சந்தித்து பேசுவதெல்லாம் மரியாதை நிமித்தம்தான் என்று விஜய் கூறினார்.

சமீபத்தில் '3 இடியட்ஸ்' படத்தை விஜய் 3 ஹீரோக்களின் கதை என்பதால் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இரண்டு அல்லது மூன்று ஹீரோ கதைகளை நான் வேண்டுமென்று தவிர்த்ததில்லை. நல்ல கதைகள் அமைந்தால் வேறு ஹீரோக்களுடனும் நடிக்க தயார் எனக் கூறினார். மேலும், தான் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை, 3 இடியட்ஸுக்காக கெட் அப் மாற்ற வேண்டியுள்ளதால் தன்னால் '3 இடியட்ஸ்' படத்தில் நடிக்க முடியாமல் போனதாக விஜய் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment