திடீரென்று தனது சுருதியை குறைத்துவிட்டார் விஜய். எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. என் படத்திற்கு எதிராக யார் சதி செய்தார்கள்? எதற்காக செய்தார்கள்? என்பது கூட எனக்கு தெரியாது என்று ரிவர்ஸ் அடித்து விட்டார்.
ஆனால் இவரது அப்பாவோ எல்லாவற்றுக்கும் காரணம் இந்த அரசும், முதல்வரும்தான் என்று வெளிப்படையாக பேசிக் கொண்டிருந்தார். இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். ஏனென்றால் கூட்டணியை வைத்துதான் தேர்தல் முடிவுகள் இருக்கும். ஒருவேளை விஜயகாந்துடன் ஜெயலலிதா கூட்டு சேராவிட்டால் தேர்தல் முடிவுகள் திமுகவுக்குதான் சாதகமாக இருக்கும்.
எனவே கூட்டணி முடிவாகிற வரைக்கும் அமைதி காப்பது நல்லது என்று விஜய்க்கு சில முக்கியமானவர்கள் அட்வைஸ் செய்தார்களாம். அதனால்தான் உப்பு சப்பில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறாராம் விஜய்.