சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய். வேலாயுதம் படத்திற்கு பிறகு மீண்டும் சென்ட்டிமென்ட்டாக சூப்பர் குட் பிலிம்ஸ் படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தாராம் அவர்.
எந்த ஈகோவும் பார்க்காமல் தானே சூப்பர் குட் படியேறி சென்று ஆர்.பி.சவுத்ரியை சந்தித்ததை பெரிய விஷயமாக பேசுகிறார்கள் இன்டஸ்ட்ரியில்.
பட்ஜெட், சம்பளம் பற்றியெல்லாம் விரிவாக பேசிய சவுத்ரி, பெரிய இயக்குனர்கள் வேண்டாம். புது இயக்குனருக்கு வாய்ப்பு கொடுப்போம் என்றாராம். அதற்கும் சரி என்று ஒப்புக் கொண்டு திரும்பியிருக்கிறார் விஜய்.
இந்த படம் அநேகமாக விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிற படமாக இருக்கும் என்கிறார்கள். விவசாயி விவசாயி என்று எம்ஜிஆர் பாடலையும் ரீமிக்ஸ் பண்ணுவார்களோ?