Wednesday, January 19, 2011

காவலன் போஸ்டர்கள் கிழிப்பு பொலிஸ் கமிசனரீடம் விஜய் ரசிகர்கள் புகார்

கலைஞர் கதைவசனத்தில் உருவான இளைஞன் பட பேனருக்கு அனுமதி அளித்து விட்டு, விஜய் நடித்த காவலன் படத்தின் பேனர்களுக்கு போலீசார் தடை போட்டதால் சென்னையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வருமா? வராதா? என்ற நீண்ட இழுபறிக்குப் பிறகு ஒருவழியாக பொங்கலன்று காவலன் படம் திரைக்கு வந்தது. திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் காவலன் படத்தின் டிஜிட்டல் பேனர் தியேட்டர் வாசல்களில் வைக்கப்பட்டுள்ளன. சென்னை உதயம் தியேட்டர் எதிரில் சுமார் 70 அடி நீளத்திற்கு விஜய் படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனரை விஜய் ரசிகர்கள் வைக்க முயன்றபோது ‌போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். ஏற்கனவே பல்வேறு தடைகளைத் தாண்டி திரைக்கு வந்திருக்கும் காவலன் படத்தின் பேனருக்கு போலீசார் தடை போட்டதால் விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் தியேட்டர் வாசலில் ரசிகர்கள் போலீசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
பின்னர், விஜய் ரசிகர்கள் சாலிகிராமத்தில் இருந்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஊர்லவமாக சென்று புகார் மனு கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி நூற்றுக்கும் அதிகமான ரசிகர்கள் ஊர்வலமாக கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் அனைவரையும் கமிஷனர் அலுவலகத்துக்குள் அனுமதிக்க முடியாது என கூறினர். பின்னர் 2 ‌பேரை மட்டும் அனுமதித்தனர். இதையடுத்து அவர்கள் கமிஷனரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், நாங்கள் நடிகர் விஜயின் தீவிர ரசிகர்கள். அவரின் ஒவ்வொரு படம் வெளியாகும் போது தியேட்டர்கள் முன்பு அவரை வாழ்த்தி பேனர்கள் வைப்பது வழக்கமான ஒன்று. வேட்டைக்காரன், சுறா படங்கள் வெளியான போதும் இந்த நடைமுறையையே நாங்கள் பின்பற்றினோம். 3 நாட்கள் பேனர்கள் இருக்கலாம் என்பது தமிழக அரசின் விதிமுறை. ஆனால் நாங்கள் பேனர்களை வைக்கும்போதே போலீசார் தடுத்து விட்டனர். எங்களை பேனர்களை வைக்க விடாமல் செய்து விட்டனர். ஆனால் அருகிலேயே கலைஞரின் இளைஞன் பட பேனரை மட்டும் அவர்கள் அகற்றவில்லை. போலீசார் இதுபோன்ற நடவடிக்கை ரசிகர்களாகி எங்களை மனம் நோக வைத்துள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

0 comments:

Post a Comment