இதுவே வேறு சந்தர்ப்பமாக இருந்தால் உண்டு இல்லை என்று ஆக்கியிருப்பார் விஜய். ஆனால் இப்போது சூழ்நிலை சரியில்லை. அடக்கி வாசிக்கலாம் என்று கூறியிருக்கிறாராம் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர். இவர்களது கோபம் வேறு நபர்களிடம் இல்லை.
அடுத்ததாக விஜய் நடித்துக் கொண்டிருக்கும் வேலாயுதம் பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் மீதுதான். கடைசி நேரத்தில் கழுத்தறுத்துவிட்டாரே என்று குமுறிக் கொண்டிருக்கிறார்களாம் இருவரும். காவலன் படத்தின் என்எஸ்சி ஏரியாவை விலைக்கு வாங்கியிருந்த ஆஸ்கர் ரவிச்சந்திரன், கட்ட வேண்டிய மீதி தொகையை குறையாமல் கட்டி விடுவார் என்றுதான் முதலில் நினைத்திருந்தார்களாம்.
அதற்கு காரணம், இவரது அடுத்த படத்தில் நாம்தானே ஹீரோ என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் கடைசி நேரத்தில் 80 லட்சத்தை கட்டாமல் விட்டு விட்டாராம் ரவி. இதனால் ஏற்பட்ட பிரச்சனையை தீர்ப்பதற்குள் இன்னும் டென்ஷன் ஆனதாம் விஜய்க்கு. வேலாயுதம் முடிகிற நேரத்தில் விஜய் கோபம் வெளிப்படும் என்கிறார்கள்.