Wednesday, June 1, 2011

உறுதியானது பகலவன் - பாவனா இல்லை


விஜய் நடிப்பில் சீமான் இயக்க இருந்த படத்துக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் ‘கோபம்’ என்று தலைப்பு வைத்தார்
என்ற தகவல் 2009 ஆண்டிலேயே அமளிப்பட்டது கோடம்ப்பாக்கத்தில்.
உண்மையில் சீமான் சொன்ன கதைக்கு, பிரபாகரன் பரிந்துரைத்த தலைப்பு ‘பகலவன்’ என்கிறார் சீமானின் முதுநிலை உதவியாளர். தற்போது விஜய் வேலாயுதம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படபிடிப்பை சென்னையில் முடித்துக்கொடுத்து விட்டு,நண்பன் படத்தின் மூன்றாம் கட்ட பாடல்காட்சி படப்பிடிப்புக்காக நெதர்லாந்து செல்கிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு விஜய் அடுத்து நடிக்க இருப்பது பகலவன்தான். அதற்கான முந்தயாரிப்பு வேலைகளை தொடங்கி விட்டோம் என்கிறார்கள் சீமான் அலுவலகத்தில்.
பகலவன் படம் முடிகிறவரை, சீமான் போராட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்று விஜய்க்கும், இந்தப்படத்தை தயாரிக்க இருக்கும் தாணுவுக்கும் உறுதி மொழி கொடுத்திருக்கிறாராம் சீமான்.
இதையே தொழி ஒப்பந்தமாக்கி அதில் கையெழுத்து போடும்படியும் ஏற்பாடு செய்து வருகிறார் தாணு. இதற்கிடையில் பகலவன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாவனா நடிக்க இருப்பதாக வெளியான தகவலை சிரித்துக்கொண்டே மறுக்கிறார்கள் சீமான் அலுவலகத்தில்.
பாவனாவை வாழ்த்துக்கள் படத்தில் நாயகியாக்கி அண்ணன் சீமான் பட்டபாடு போதாதா என்று கேட்கிறார்கள். ஆனால் பாவனா சீமானிடம் மீண்டும் வாய்ப்புக் கேட்டது உண்மை. ஆனால் நாயகி விஷயத்தில் விஜய், தாணு ஆகிய இருவரது கருத்தை கேட்ட பிறகே தேர்வு செய்வார் என்கிறார்கள்.

0 comments:

Post a Comment