Wednesday, June 1, 2011

"விஜய்க்கு ஒரு பெரிய இடத்தைக்கொடுக்கும் "- ஜெயம் ராஜா


விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் கதையானது கண்டிப்பாக விஜய்க்கு ஒரு பெரிய இடத்தைக்கொடுக்கும் என்றார் ஜெயம் ராஜா.விஜயினுடைய ரசிகர்கள் விஜயை எவ்வாறு எதிர்பார்க்கிறார்களோ அது போலவே இப்படத்தை நான் உருவாக்கினேன்.விஜய்க்காக விஜய் ரசிகனாக இருந்து உருவாக்கிய படம் வேலாயுதம் எனவே கண்டிப்பாக இப்படம் விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும் இதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றார் ராஜா.
நேற்று தனது பிறந்தநாளை விஜய் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடினார்.விஜய் ஒழுங்கமைப்பில் விழா சிறப்பாக நடந்தது.எவ்வாறு வேலாயுதம் படத்தை உருவாக்க வேண்டும் என்ற நினைப்பில் படத்தை தொடங்கினாரோ அதை விட பிரமாண்டமாக படத்தை எடுத்துவிட்டாராம் ராஜா.எவ்வாறு சாதரண மனிதன் ஹீரோவாகி தனது இலக்கை அடைகிறான் என்பதே கதை அதை பிரமாண்டமாக அமைத்துள்ளாராம் ராஜா.
விஜய் படங்களில் மிகப்பிரமாண்டமாக அதிக செலவில் உருவாகும் ப்டம் இதுவாகும்.இதற்காக விஜய் மேலும் பல சாகசங்களை படத்தில் நிகழ்த்தியுள்ளாராம் விஜய்.இவ்வளவு பிரமாண்டமாக தயாரிக்க உதவிய ரவிசந்திரனுக்கு நன்றியை கூறியுள்ளார் ராஜா.

0 comments:

Post a Comment