Wednesday, June 8, 2011

கமல், விஜய் முதல்வரை சந்தித்த காரணம்

kamal-vijay-06-06-11


நேற்று முந்தினம் கமல், கௌதமி, அக்ஷரா கமல், கௌதமியின் மகள் சுப்பு லட்சுமி ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். முதல்வரை சந்தித்துவிட்டு வெளியே வந்த கமல் "நான் சிறுவனாக இருந்த காலம் முதல் அவர்கள் (முதல்வர்) எனக்கு பழக்கம், முதல்வராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கவே வந்தோம்" என்று கூறினார்.

இதையடுத்து விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரும் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தவன். இது பற்றி விஜய் "தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் நான் அம்மாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தேன், தற்போது முதல்வராக பதவியேற்ற பின் தற்போது முதல்முறையாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்" என்று கூறியிருக்கிறார்.

0 comments:

Post a Comment