Tuesday, June 14, 2011

பிந்தியது பேரரசுவின் படம் அடுத்து பகலவன் ஆரம்பம்


தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களுள் ஒருவர் பேரரசு.இவரை தமிழ் சினிமாவில் விஜய் அறிமுகப்படுத்தினார். விஜயுடன் இணைந்து திருப்பாச்சி படத்தை கொடுத்தார் அப்படம் மெகா கிட்டானது அடுத்து சிவகாசி படம் பண்ணினார் அதுவும் கிட்டானது அதன் பின்பு பலமுறை விஜயுடன் இணைய முயற்சித்தும் அது நிறைவேறாமல் போனது.தற்பொழுது பரத்தை வைத்து திருத்தணி படத்தை எடுத்து வருகிறார் பேரரசு இவர் விஜயை சந்தித்து கதையை சொல்லியுள்ளார் இக்கதை அவருடைய முன்னைய படங்களிலிருந்து வேறுபட்ட கதையை கொண்ட படமாக உள்ளது.எனவே விஜய் அவருடன் இணைந்து பணியாற்ற சம்மதித்து விட்டார்.ஆனால் இப்படம் இப்பொழுது தொடங்கப்போவதில்லை என பேரரசு தரப்புக்கூறியுள்ளது ஏனெனில் விஜய்க்கு ஏனைய படங்கள் இருப்பதனால் அப்படங்களை முடித்துவிட்டு அதன் பின்பு தான் விஜய் பேரரசுவின் படத்தில் இணையவுள்ளாராம் இதனை விஜயே பேரரசுவுக்கு கூறியுள்ளாராம்.அடுத்து விஜய் சீமானின் பகலவன் படத்தில் நடிக்கவுள்ளார் சீமானுக்கு நெருக்கடியாக இருந்து வரும் விஜயலட்சுமி பிரச்சினையால் பாதிக்கப்பட்ட சீமான் அதை தீர்க்கும் முயற்சியில் உள்ளாராம் .எனவே விரைவில் விஜயுடன் இணைய உள்ளார் .இம்முறை கட்டாயமாக விஜயுடன் இணைவேன் என சீமான் கூறியுள்ளார்.அடுத்து விஜய் அமீரின் கனவுப்படமான கண்ணபிரானில் நடிக்க உள்ளார் அதன் பின்பே பேரரசுவின் படத்தில் நடிக்க உள்ளார்.பகலவன் மிக வேகமாக படப்பிடிப்பு தொடங்கி முடிக்கப்பட்டு 2012 பொங்கலுக்கு வெளியிட உள்ளனர்.

0 comments:

Post a Comment