Tuesday, February 22, 2011

விஜய் தலைமையில் கண்டன கூட்டம்

நாகை : தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை கண்டித்து இன்று நாகையில் நடிகர் விஜய் தலைமையில் கண்டன கூட்டம் நடப்பதாக இருந்தது.இதற்காக ரசிகர்கள் நாகையில் திரண்டனர். கூட்டத்தில் பங்கேற்க விஜய் வந்தார். ஆனால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பாதுகாப்பு பணியில் போதிய போலீசார் இல்லை. இதனால் அங்கு ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கோபமடைந்த விஜய் கூட்டத்தில் ஏதும் பேசாமல் ரத்து செய்துவிட்டு, ரசிகர்களை நோக்கி கையசைத்து விட்டு உடனடியாக கோபத்துடன் அங்கிருந்து திரும்பினார். இதன் பின்னர் ரசிகர் மன்ற நிர்வாகிகள் விஜயை சமாதானம் செய்து கூட்டம் நடக்கும் இடத்திற்கு அழைத்து வந்தனர். கூட்டத்தில் சுமார் 10 நிமிடங்கள் மட்டும் பேசினார். அவர் பேசுகையில், தமிழக மீனவர்களை கொலை செய்த இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர், மீனவர்கள தாக்கப்படும் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என தெரியவில்லை. மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து பிரதமர் மற்றும் முதல்வருக்கு தந்தி அனுப்ப வேண்டும் என கூறினார். இலங்கையில் மரணமடைந்த பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள், கடற்படை தாக்குதலில் பலியான மீனவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து கொண்டார்.

0 comments:

Post a Comment