Wednesday, February 23, 2011

இந்தி-தெலுங்கு படங்களை நம்பும் கோலிவுட்

நேரடி தமிழ் படம் எடுத்து ஹிட்டாக்குவதைவிட தெலுங்கு, இந்தியில் வெற்றிபெற்ற படங்களை தமிழில் முன்னணி ஹீரோக்களை வைத்து எடுக்கும் 'டிரண்ட்' உருவாகியுள்ளது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், த்ரீ இடியட்சை தமிழில் ரீமேக் பண்ணுகிறார். மூன்று ஹீரோக்களை வைத்து 'நண்பன்' படத்தை எடுத்து வருகிறார்.
டைரக்டர் ராஜா,தெலுங்கில் நாகார்ஜுன் நடிப்பில் ஹிட்டான படத்தை தமிழில் விஜய் கலக்கும் 'வேலாயுதம்' படமாக எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இன்னும் சில தெலுங்கு, மலையாள படங்களின் உரிமையை வாங்கி தமிழில் எடுக்க படப்புள்ளிகள் திட்டமிட்டுள்ளது பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட்டிலிருந்து சிங்கம்,விண்ணை தாண்டி வருவாயா, மைனா, உத்தமபுத்திரன் ஆகிய படங்கள் இந்திக்கு செல்கின்றன. பாலிவுட்டிலிருந்து பேஷன்,தபங்,பாண்ட் பாஜா பாராட் ஆகிய இந்தி படங்கள் கோலிவுட்டுக்கு வர உள்ளன என்கிறது பட வட்டாரம்.
சல்மான் கான் நடிப்பில் இந்தியில் ஹிட்டான 'தபங்' படம் மாஸ் எண்டர் டேயினர். ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் அதில் உள்ளன. ஹீரோக்கள் விரும்பும் மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் என்கிறார் சிம்பு.
இந்தி 'தபங்' பட உரிமையை வாங்கி, தமிழில் படம் பண்ணும் தயாரிப்பாளர்கள் படத்துக்கு பொருத்தமான 'மாஸ் ஹீரோவை கோலிவுட்டில் அலசி வருகிறார்கள்.
பாலிவுட் 'பேஷன்' படத்தை தமிழில் எடுக்கிறார்கள். இதில் முன்னணி நாயகிகள் நடிக்க உள்ளதாக கூறுகிறார்கள். பான்ட் பாஜா பாராட் படத்தில் ஹீரோ ஒருவரின் வாரிசு நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம்.
அதில் இந்தியில் அனுஷ்கா சர்மா பண்ணிய ரோலில், நாயகியாக தமன்னாவை நடிக்க வைக்கப்போகிறாராம்.

0 comments:

Post a Comment