Tuesday, February 15, 2011

சினிமா தியேட்டரில் ரசிகர் முன்னிலையில் தோன்றிய விஜய்

நேற்று காலையே விஜய் பொள்ளாச்சி ரசிகர்களை துரைஸ் சினிமாவில் சந்திக்கவுள்ளார் எனக்கூறியிருந்தோம்.அது நேற்று நடைபெற்றது.அங்கு ரசிகர்கள் சந்தோசமாக காணப்பட்டனர்.
நடிகர் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பு கிணத்துக்கடவு அருகேயுள்ள கோவில் பாளையம் பகுதியில் நடந்து வருகிறது.இதில் விஜய் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.நேற்று படப்பிடிப்பு முடிந்ததும் பொள்ளாச்சியில் விஜயினது காவலன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது துரைஸ் தியேட்டருக்கு சென்றார்.திடீரென்று ரசிகன் முன் தோன்றினார் . பட்டு வேட்டி பட்டு சட்டையில் விஜயை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர் அவரை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர் . ரசிகர்கள் விஜயுடன் கைகுழுக்க முண்டியடித்தனர்.சில ரசிகர்கள் விசில் அடித்து துள்ளிக்குதித்தனர்.அவர்களிடம் காவலன் படம் பற்றி விஜய் கேட்டார்.படத்தில் குத்து பாட்டு இல்லையே என சிலர் கூறினர்.உங்களது இந்தக்குறையை எனது அடுத்த படமான வேலாயுதம் தீர்த்து வைக்கும் என விஜய் கூறினார்.விஜய் பேசும் போது நான் சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் "வாங்கண்ணா சொல்லுங்கண்ணா "என்ற பொள்ளாச்சி மக்களின் அன்பான வார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.மற்ற ஊர்களில் படப்பிடிப்பின்போது கூட்டத்துக்காக ஜூனியர் நடிகர்களை பயன்படுத்துவோம் ஆனால் பொள்ளாச்சியில் மட்டும் ஊர் மக்களே ஜூனியர் நடிகர்களாக நடிப்பார்கள்.பொள்ளாச்சி மக்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.உடனே ரசிகர்கள் விசில் அடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.பின்னர் அ.தி.மு.க வைச் சேர்ந்த கண்ணாடிமணி அருணாசலம் ஊஞ்சவேலாம்பட்டி தலைவர் சின்னு என்கின்ற முருகானந்தம் விஜயை சந்திது சால்வை அணிவித்தனர்.

0 comments:

Post a Comment