Sunday, February 6, 2011

அஸாத் ஆகுமா வேலாயுதம்

விஜய் அடுத்ததாக நடிக்கும் படம் வேலாயுதம் . இது தெலுங்கு அஸார்த் படத்தின் கதை தழுவல் எனக்கூறியதால் அஸாத் படத்தை பார்தேன்.அவ் அஸாத் பட போஸ்ரர்களில் விஜயினது வேலாயுத போட்டோவினை கிரபிக்ஸ் செய்து போட்டிருந்தனர் ஒரே ஒரு கட்டத்தில் சூப்பர் மான் மாஸ் அணிந்து நாகர்யுனா நடித்துள்ளார்.ஆகவே இதிலிருந்து தெரிகிறது வேலாயுதம் ரீமேக் இல்லை கதையை மட்டும் எடுத்து ராஜா தனது பாணியில் மாற்றி செய்ய போகின்றார் என்று அஸாத் படத்தை பற்றி இனி பார்ப்போம்.

செளந்தரியா பேப்பர் ரிப்போட்டர் அவரும் தந்தையும் ஒரு பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போது வில்லன் கூட்டணியினர் அவ்பஸ்ஸில் செல்லும் ஒருவரை சாக்காட்டுவதற்காக அவ் பஸ்ஸிற்கு பாம் வைக்கின்றனர் அப் பஸ் விழுகின்றது அதனால் செளந்தர்யாவின் தந்தை கோமா நிலைக்கு போக செளந்தர்யா காயத்துடன் தப்புகிறார் வில்லன் கொல்லவந்தவரும் அவ் விபத்திலுருந்து தப்ப வில்லன் கோஷ்டியினர் அவரை கொல்கின்றனர் இதனை செளந்தரியா போட்டாவா எடுத்து தனது பத்திரிகைக்கு கொடுக்க அதனை அறிந்த வில்லன் தரப்பு செளந்தர்யாவை மிரட்டி போட்டோ போடவிடாமல் தடுகின்றனர்.இதனால் செளந்தர்யா தனது கற்பனையில் அஸார்த்தை உருவாக்கி பிரச்சனை நடப்பதை கண்டறிகிறார் ஏதேச்சையாக நடக்கும் விபத்தில் எல்லாம் அஸாத்தின் பேரை பாவிக்கிறார் இதனால் மக்கள் அஸாத்தை நம்பி தமது பிரச்சனைகளை தீர்க்கும் படி கடிதம் போடுகின்றனர்.

இது இவ்வாறு இருக்க கிராமத்தில் அஸாத் என்ற பெயரில் நாகர்யுனா வாழ்கிறார்.அவருக்கு முறைப்பொண்ணாக சில்பாசெட்டியும் தங்கையாக மீரா வாசுதேவனும் இருக்கின்றனர்.தனது தங்கையின் திருமணதுக்காக சேர்த்து வைத்த காசை எடுப்பதற்கு நகரத்திற்கு வரும் அஸாத் செள்ந்தையாவை சந்தித்து மோதல் கொண்டு அதன் பின் வில்லன் கோஷ்டியினருடன் தனக்கே தெரியாமல் செய்யும் காரணிகளால் வில்லன் கோஷ்டி சிலர் அழிகின்றனர் இதனை கண்டுபிடித்த செளந்தரியா இவன் தான் அதனை செய்தான் என நினைத்து அஸாத்தாய் மாறும்படி நாகர்யுனாவுக்கு வழியுறுத்த நாகர்யுனா மறுத்து விட்டு செல்கிறார் அங்கு காசு எடுக்க போகும் போது அவர்களுடைய காசு எடுக்குக் கம்பனி பூட்டப்படுள்ளது இதனால் அனைவரும் ஏமாற்றம் அடைய அனைவரினதும் பணத்தை கொடுக்க அஸாத்தாக மறுகிறார்.காசை அனைவருக்கும் அனுப்பிவிட்டு பிரதான வில்லனாகிய ரகுவரனையும் தாக்க அவன் இறந்தது போல் நடித்து தப்புகிறான்.

அதன் பின் வில்லன் என்ன செய்தான்?தங்கை கல்யாணம் நடந்ததா ? செளந்தரியா சில்பாசெட்டியின் காதலில் யாரை அஸாத் ஏற்றுக்கொண்டார் என கதை விறு விறுப்பாக நகர்கிறது.



வேலாயுதம் சூட்டிங்பொட் போட்டோவை பார்கும் போது சில காட்சிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் ராஜா தமிழுக்கு ஏற்ற மாதிரியும் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரியும் வடிவமைத்து படத்தை வெற்றி படமாக்குவார் என நம்பலாம்.

1 comments:

வேலாயுதம் கிட்

Post a Comment