Friday, December 17, 2010

பொங்கலுக்கு வருமா ஆடுகளம்? - ஒரு 'இளைஞன்' அட்ஜஸ்ட்மென்ட்!

Aadukalamஎங்களை திட்டமிட்டு ஒழிக்க நடக்கிற சதி' என்று விரல் நீட்டுகிறார் விஜய். அவர்நீட்டுகிற திசையில் இருக்கிறவர்கள் எல்லாருமே முதல்வர் வீட்டு வாரிசுகள். காவலன் வரும்போது ஆடுகளமும் வரும் என்று கூறிவந்த சினிமா புள்ளிகள், அதற்காகவே படத்தை இன்னும் இன்னும் என்று இழைத்துக் கொண்டிருப்பதாகவும் கொளுத்திப் போட்டார்கள். ஆனால் இப்போது திடீர் பிரேக் போடப்பட்டிருக்கிறதாம் ஆடுகளத்திற்கு.
வருகிற பொங்கல் தினத்தன்று வெளிவரப்போகிறது காவலன். இதே தினத்தில்தான் கார்த்தி நடிக்கிற சிறுத்தையும், பா.விஜய் நடிக்கிற இளைஞனும் வரப்போகிறது. சிறுத்தைக்கு கார்த்தி அட்ராக்ஷன் என்றால், இளைஞனுக்கு இருக்கிற அட்ராக்ஷனே வேறு! இந்த நேரத்தில்தான் ஆடுகளத்தையும் கொண்டுவரப்போவதாக திட்டம்.
போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்றால் போட்டி போடுகிறவர்களையே தடுப்பதுதானே நல்ல யுக்தி. இதில், சொன்னால் கேட்கிற லிஸ்ட்டில் முதலில் இருப்பது ஆடுகளம்தான். எனவே அப்படத்தை இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் கழித்து ரிலீஸ் செய்ய பணித்திருக்கிறார்களாம்.
எனவே இப்போதைக்கு 'ஆடுகளம்' தள்ளிப்போகலாம். இந்த விஷயம் கடைசிநேர மாறுதலுக்குட்பட்டது என்பதையும் அறிக!

0 comments:

Post a Comment