Thursday, December 30, 2010

அடுத்து தலையை தயார்படுத்த வேண்டியது விஜய்?

துரை தயாநிதியின் க்ளவுட் நைன் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருக்கும் ‘வேட்டை’ படத்தில் வில்லனாக நடிப்பவர் மேடி மாதவன்.  கமல்,  மணிரத்னம் தவிர தமிழில் வேறு யாருக்காகவும் வேறு ஹீரோக்களுடன் நடிக்காத மாதவன், லிங்குச்சாமிக்கு எப்படி ஓகே சொன்னார்? இதுவும் நட்புக்காகத்தான் என்கிறார்கள். பொதுவாக மணிரத்னம், சீமான், கமல், லிங்குசாமி என்று இயக்குனர்களை மதிக்கும் மாதவன் இந்தமுறையும் ஒரு இயக்குனருக்காக வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

மாதவனை வைத்து ‘யாவரும் நலம்’ வெற்றிப் படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார்  படத்தில் இருந்து சியான் விக்ரம் வெளியேறியதால் மிகவும் அப்செட்டான விக்ரம் கே. குமாருக்கு உடனடியாக ஒரு வாய்ப்புக் கொடுத்தால் நான் வேட்டைக்கு கால்ஷீட் கொடுக்கத் தயார், விக்ரம் கே.குமார் படத்திலும் நான்தான்  ஹீரோ, இரண்டு படத்துக்கும் ஒரே பேக்கேஜாக சம்பளம் கொடுத்தால் போதும் என்றாராம்.  டீலிங் ஓகே ஆனதால் வேட்டையில் நடிக்க ஒப்புக்கொண்டார் மாதவன்.

வெற்றி கொடுத்த தன்னை மறவாமல் வாய்ப்புக் கொடுத்த மாதவனுக்கு ஒரு பெரிய வெற்றியைத் தரவேண்டும் என்று உழைக்க ஆரம்பித்துவிட்டார் விக்ரம்.கே.குமார்.  அதிஷ்டசாலி என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்காக மாதவன் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு புதிய ஹேர் ஸடைல் வைக்க இருக்கிறார் மாதவன். இது முழு நீள காமெடிப் படம். சொல்லி அடிக்கிற கில்லி ஸ்க்ரிப்டாம். வேட்டை முடிந்ததும் மாதவன் அதிஷ்டசாலியில் நடிக்க இருக்கிறார். இதில் ஸ்ருதி ஹாசன் ஜோடி சேரலாம் என்கிறார்கள்.

இந்த படத்தை முடித்துவிட்டு.விஜய்- விக்ரம் கே.குமார் கூட்டனி அதிவிரைவில் வரும் என எதிர்பாக்கலாம். அத்த படத்தின் பெயர் "24 " என்று வைத்திருப்பதாக சொல்லபடுகிறது.விஜய் காவலன் படத்தை முடித்துவிட்டு வேலாயுதம் படத்தில் நடித்து வருகிறார். இதை அடுத்து பகலவன் படத்தில் நடிக்க இருக்கிறார் நம் தளபதி.அதை அடுத்து "கண்ணபிரான்" இல்ல விடில் "24 ". வெற்றி திருமகனின்  படங்கள் மேலும் மேலும் வெற்றிபெற எங்களுடைய வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment