அரசியலில் பெரிய இடத்தை பிடிக்கும் ஆசையோடு அந்த பக்கம் குதிக்கவிருக்கிறார் விஜய். ஆனால் அவரையும் வைத்துக் கொண்டே “சினிமாவை தவிர அவருக்கு வேறு எதுவுமே தெரியாது” என்று பேசி வைத்தார் காவலன் படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியிருக்கும் ஷக்தி சிதம்பரம்.
அதற்கு முன்னால் சிறிய அளவில் இந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள். அப்படியே அங்கு ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. அந்த விழாவில்தான் இப்படி பேசினார் ஷக்தி சிதம்பரம். விநியோகஸ்தர்களும், இன்னும் சில சக்திகளும் காவலன் படத்தை வெளிவர முடியாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும், விஜய் ரொம்ப நல்லவர் என்ற நோக்கத்திலும் சொல்வதாக நினைத்துக் கொண்டு அவர் இப்படி வார்த்தைகளை விட்டார்.
காலையில் ஷ§ட்டிங் வந்தா நடிக்கறதும், பேக்கப் சொன்னா வீட்டுக்கு போய் குடும்பத்தோடு இருப்பதுதான் அவருக்கு தெரியும்.அவருக்கு போய் தொல்லை கொடுக்கிறீங்களே என்றார் கவலையோடு. இதை விஜய் எப்படி எடுத்துக் கொண்டாரோ, அவர் அப்பா எஸ்.ஏ.சி பார்த்த பார்வை… அவ்வளவு சரியில்லை