நாம் முன்பே எழுதியிருந்த மாதிரி ஜெயலலிதாவுடன் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி யின் சந்திப்பு நடந்து விட்டது. இந்த சந்திப்பின் போது அவர் என்ன கூறினார் என்பதுதான் கோடம்பாக்கத்தில் புகைந்து கொண்டிருக்கிற கேள்வி. பலரும் பல விதமாக தகவல்கள் பரப்பினாலும், எஸ்.ஏ.சி கூறியது ரொம்பவே பரிதாபத்திற்குரியது என்கிறார்கள். தொடர்ந்து எங்களை அவமானப்படுத்துகிற முயற்சியில் இறங்கிவிட்டன சில சக்திகள்.
த்ரி இடியட்ஸ் படத்தில் நடிப்பதற்காக என் மகன் ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டு ஷ§ட்டிங் கிளம்ப தயாராக இருந்தார். அந்த கடைசி நேரத்தில்தான் படத்திலிருந்து விஜய் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள். வெளியூருக்கு நலத்திட்ட உதவிகளுக்காக செல்லும் விஜய்க்கு போலீஸ் பாதுகாப்பு கூட கொடுக்க மறுக்கிறார்கள் என்றெல்லாம் புலம்பினாராம்.
ஜெயலலிதாவின் ஆலோசனைப்படி அவர் செய்யப் போகும் அடுத்தடுத்த வேலைகள், தமிழகத்தில் பெரும் சூட்டை கிளப்பும் என்கிறார்கள் இந்த விஷயத்தை கூர்ந்து கவனிக்கிற பெரிய மனிதர்கள்.