
ஆனால் இளையதளபதிக்குள் இருக்கும் இன்னொரு திறமைசாலியை அடையாளம் காட்ட ரெடியாகிவிட்டார் அமீர். பருத்திவீரன் படத்திற்கு முன்பிலிருந்தே தனது “கண்ணபிரான்” கதை பற்றி பெருமையாக சொல்லிவருகிறார் அமீர். இந்த கதையை விஜய்க்கு சொல்லி ஓ.கேவும் வாங்கிவிட்டாராம். சமீபத்தில் முழு ஸ்கிரிப்டையும் கேட்ட விஜய், “அண்ணா…. நீங்க என்ன சொல்றீங்களோ அத செய்யுறேன். இந்த படத்திற்காக உங்ககிட்ட என்னை ஒப்படைத்து விடுகிறேன்” என சம்மதத்துடன் சத்தியத்தையும் கலந்து கொடுத்துள்ளாராம் விஜய்.

இது பற்றி அமீர் கூறியதாவது :
“விஜய்யை எல்லோரும் கமர்ஷியல் ஹீரோவாகத்தான் பார்க்கிறார்கள். அவார்டுகளை அள்ளி குவிக்கிற அளவிற்கு அழுத்தமான உழைப்பாளியும் அவருக்குள்ள இருக்கான். அந்த உழைப்பாளியின் படமா ‘கண்ணபிரான்’ அவருடைய உயரத்தை ஏற்றி வைக்கும்” என இளையதளபதிக்கு நற்சான்றிதழ் தருகிறார் அமீர்.
0 comments:
Post a Comment