Wednesday, November 3, 2010

டிசெம்பர் 3 இல் காவலன்

விஜயின் 51 வது திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது என ரசிகர்கள் அறிந்தவிடயம் . ஆனால் ஆரம்பத்தில் இத்திரைப்படம் டிசெம்பர் 23 வெளிவரும் என கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது  டிசெம்பர் 03ஆம் திகதி இத்திரைப்படம் வெளியிடப்படும் என திருச்சி திரைப்பட உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.தீபாவளிக்கு ஏமாற்றிய காவலன் டிசெம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்தது ரசிகர்களுக்கு சந்தோசத்தை கொடுத்துள்ளது.இப்போது டிசெம்பர் 03 என அறிவித்துள்ளதால் ரசிகர்கள் ஏக சந்தோசத்தில் உள்ளனர்.மேலும் விஜய் படம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் அசின் இலங்கை சென்ற விடயம் காவலன் படத்துக்கு பிரச்சனையாக உள்ளபோதும் இப்பிரச்சனையும் பட ரீலுசுக்கு இடையில் தீர்வுக்கு வரும் என தெரியவருகிறது.ஏனெனில் சல்மான் ஜோடியாக அசின் ரெடி படத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து கிந்தி காவலன் ரீமேக்கில் நடிக்கும் படி அசினை அணுகியபோது அசின் தன்னால் தொடர்ந்து ஒரு கீரோவுடன் நடிக்க முடியாது என முறைப்படி அறிவித்துள்ளார்.இவர் விஜயுடன் 3 வது முறையாக தொடர்ந்து நடிக்கிறார்.அசின் சல்மானுக்கு மறுப்பு சொன்னதற்க்கு காரணம் தமிழர் மத்தியில்  நல்ல அபிப்பிராயத்தை எடுப்பதற்கு என கோடம்பக்க குருவி கிசுகிசுக்கிறது.

0 comments:

Post a Comment