Wednesday, November 17, 2010

‎20-20 கிரிக்கெட்-கேப்டனாகும் இளைய தளபதி!

இன்று வரை திரையுலகில் கேப்டன் என்றால் விஜயகாந்த் தான். இனி இதில் சற்று மாற்றம் ஏற்பட்டு விஜய்யை கேப்டன் என்று அழைக்கும் சூழ்நிலை ஏற்படப்போகிறது. அதுவும் தென்னிந்திய திரையுலகிற்கே கேப்டனாகப் போகிறார்.

கர்நாடக நடிகர் சங்கம் இந்திய திரைப்பட நடிகர்களை ஒருங்கிணைத்து ஐபிஎல் பாணியில் 20-20 கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக பாலிவுட் நடிகர்களையும், தென்னிந்திய நடிகர்களையும் ஒன்று சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறதாம். பெங்களூரில் நடத்த இருக்கும் இந்த நிகழ்ச்சிக்காக தற்போது பாலிவுட் மற்றும் தென்னிந்திய நடிகர்கள் சங்கங்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இதில் பாலிவுட் நட்சத்திர அணிக்கு சல்மான் கானையும், தென்னிந்திய நட்சத்திர அணிக்கு விஜய்யையும் கேப்டனாக நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

0 comments:

Post a Comment