Sunday, November 14, 2010

விஜய், ஏஆர்ரகுமான், ஏ.எம்.ரத்னம் கூட்டனியல் புதிய படம்!

நீண்டஇடைவெளிக்குப் பின்பு படத்தயாரிப்பில் இறங்கவிருக்கிறார் ஏ.எம்.ரத்னம். இதற்கு நடிகர் விஜய் அவருக்கு ஒரு படம் நடித்துத்தர இசைந்ததே காரணம்.

விஜய் ஒப்புக் கொண்டதும் பல இயக்குநர்களைத் தேடி கடைசியில் விக்ரம்குமாரை வைத்து ஒரு கதை உருவாக்கி விட்டார்களாம். இதே இயக்குநர் முன்பு உருவாக்கிய கதையை விஜய் நிராகரித்துவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.

அதன்பின் வேறு கதையைத் தயார் செய்து விஜயை ஒப்புக்கொள்ள வைத்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரகுமானைக் கேட்டுக்கொண்டிருக்கிறாராம் ரத்னம்.

ஏற்கெனவே விக்ரம்குமார் விக்ரமை வைத்து இயக்கவிருந்த படத்துக்கு ரகுமான் இசையமைக்க ஒப்புக்கொண்டிருந்தார்.

அதனாலேயே இந்தப்படத்துக்கும் இசையமைக்க ஒப்புக்கொள்வார் என்று நம்பி அவரைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
ஆனால் இவரை அவர் பதிலேதும் சொல்லவில்லையாம். ஆனாலும் ரத்னம் மிகுந்த நம்பிக்கையோடு நான் அவரை ஒப்பந்தம் செய்வேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.

0 comments:

Post a Comment