Thursday, July 14, 2011

இலியானாவின் நம்பிக்கை பலம்




'கேடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதன் பிறகு தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு பக்கம் போனார். அங்கே அவர் திறமை காட்டியதால் முன்னணி நடிகையானார். தற்போது அவரை 'நண்பன்' படம் மூலம் தமிழுக்கு மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் ஷங்கர். இப் படத்தில் நாயகியாக நடித்து வரும் இலியானா, 'தமிழில் என்னை நிலை நிறுத்தப்போகும் படமாக இது இருக்கும்' என்று தனது நட்பு வட்டத்தில் சொல்லி வருகிறார். இந்தப் படம் தவிர ஹிந்தியில் ரன்பீன்கபூருடன் நடித்துவரும் 'பர்பி' படமும் அவரது பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. இந்த இரண்டு படமும் வெற்றி பெற்று விட்டால், இரண்டு மொழிகளிலும் ஒரு ரவுண்டு வரலாம் என்று புதிய நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். 

0 comments:

Post a Comment