Friday, July 8, 2011

பகலவனை அடுத்து ஆரம்பமாகும் முருகதாஸின் படம்

காந்தி ஜெயந்தியன்று விஜய் சீமான் இணையும் படம் ஆரம்பமாக உள்ளது என்று சீமான் தரப்பிலிருந்தும் விஜய் தரப்பிலிருந்தும் செய்தி வெளிவந்துள்ளது. விஜய் சீமான் ஏற்கனவே இணைய இருந்து அதன் பின் விஜய் ஏனைய படங்களுக்கு கால்சீட் கொடுத்து நடிக்கச்சென்றதாலும் சீமான் ஜெயிலுக்கு சென்றதாலும் விஜய் சீமாம் இணையும் படம் பிந்திப்போனது எனினும் விஜய் சீமான் இணையும் படம் காந்தி ஜெயந்தி அன்று தொடங்கவுள்ளது.விஜய் இப்படத்துக்கு முழுமையான மற்றும் தொடர்ச்சியான 60 நாள் கால்சீட் கொடுத்துள்ளார். தற்பொழுது பகலவன் படத்திரைக்கதையிலும் பட வசனத்திலும் செய்த மாற்றங்கள் முடிவடைந்துள்ளன.இப்படம் ஒரு வீரமிக்க இளைஞனின் துடிப்பான கதையம்சம் கொண்ட படமாக அமையவுள்ளது.விஜய் ரசிகர்கள் விஜயை வித்தியாசமான தோற்றத்தில் பார்க்கலாம்.விஜய் தற்பொழுது வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இப்படம் இவ்வருட இறுதியில் முடிவடைந்து 2012 தைத்திருநாளன்று திரைக்கு வெளிவர உள்ளது.அடுத்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உறுதி எனினும் படத்தின் தலைப்பு மாலை நேரம் மழைத்துளி இல்லை.இப்படத்துக்கு தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.இதனை ஹரிஸ் உறுதிப்படுத்த்யுள்ளார்.விஜய் முருகதாஸ் ஹரிஸ் தீபிகா இணையும் இப்படத்தின் தலைப்பை விரைவில் அறியத்தருகின்றோம். ஹரிஸ் விஜய் கூட்டணி நண்பன் படத்தின் பின் இரண்டாவது முறை இணையவுள்ளது.

0 comments:

Post a Comment