Tuesday, July 5, 2011

கவுண்டமனி வீட்டில் நடந்த 'வேலாயுதம்' படப்பிடிப்பு

ஆகஸ்ட் மாதம் வேலாயுதம் படத்தை வெளியிட முடிவுசெய்திருக்கும் படக்குழுவினர், விறுவிறுப்பாக கடைசி கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இதற்காக இயக்குநர் ராஜா, விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் பொள்ளாச்சியில் முகாமிட்டிருக்கிறார்கள்.

பொள்ளாச்சியை அடுத்த திருமூர்த்தி மலை வட்டத்தில் உள்ள வல்ல குண்டாபுரம் என்ற கிராமத்தில்தான் வேலாயுதம் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. காமெடி நடிகர் கவுண்டமணி பிறந்து வளர்ந்த ஊராம் இது. இங்கே கவுண்டமணியின் பாரம்பரியமான சிறிய வீட்டில் அவருடைய அம்மா வசித்து வருகிறார்.

இதை கேள்விப்பட்ட விஜய், உடனே கவுண்டமணியின் அம்மாவை சந்தித்து அவரிடம் பேசினார். அப்போது கவுண்டமணி பற்றிய சிறு வயது நினைவுகளை பகிர்ந்துகொண்டாராம் அவரது தாயார். பிறகு அவரிடம் வாழ்த்துக்களைப் பெற்றுகொண்ட விஜய் கவுண்டமணியின் வீட்டிலும் தனது வேலாயுதம் படப்பிடிப்பு நடைபெற வேண்டும் என்று விரும்பினாராம். இதனால் விஜயின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் விஜய், ஹன்சிகா, சரண்யா மோகன் ஆகியோர் இடம்பெறும் திருமணக்காட்சி ஒன்றை படமாக்கினார் இயக்குநர் ராஜா.

1 comments:

super..who is the best director of tamil cinima என்பதில் ஓட்டு போட மறந்து விடாதீர்கள். http://kobirajkobi.blogspot.com/

Post a Comment