Tuesday, July 12, 2011

விஜய் ரசிகர்களின் சமூகப்பணி

ஒவ்வொரு நடிகரும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.அத்தகைய ரசிகர்கள் தமது நடிகரின் படம் வரும் பொழுது கட் அவுட் வைப்பது பாலாபிடேகம் செய்வதுடன் நின்று விடுகிறார்கள்.ஆனால் சிலரின் ரசிகர்கள் மாத்திரம் சமூகத்தொண்டைச் செய்கிறார்கள்.அந்த வகையில் விஜயின் ரசிகர்களும் பல சமூகத்தொண்டை செய்து வருகிறார்கள். விஜய் ரசிகர்கள் தமது கண்களை தானம் செய்துள்ளனர். இப்பொழுது நாகர்கோவிலுக்கு மிக அணமையில் உள்ள கிரமமாகிய ஆசாரிபாலம் எனும் இடத்தில் ஒரு சந்திப்பை நிகழ்த்தி  ஐம்பது விஜய் ரசிகர்கள் கண்ணை தானமாக வழங்கினர். விஜய் ரசிகர்மன்றம் சார்பில் ரசிகர்களே முன்னின்று இதனை செய்தனர். விஜயின் தந்தை சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக தலைமை தாங்கினார். இவ்வாறு கண்ணை தானம் வழங்கியோரை விஜயின் தந்தை ஊக்கப்படுத்தியதோடு ஆசாரிபாலம் அரசு வைத்தியசாலைக்குச் சென்று இதனை பார்த்தார்.

0 comments:

Post a Comment