Saturday, July 16, 2011

விஜய் கெளதம் இணையும் துப்பறியும் ஆனந்

ஒரு வருடத்துக்கு முதல் தொடங்க வேண்டிய படம் துப்பறியும் ஆனந். இப்படத்தை கெளதம் அஜித்தை வைத்து சிவாஜி பிலிம்ஸ் சார்பில் ஆரம்பிக்க இருந்தார். ஆனால் திரைக்கதையில் ஏற்பட்ட தாமதங்கள் அப்படம் பிந்திப்போனது அதன் பின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை சந்தித்த இப்படத்திற்கு சூர்யாவை வைத்து கெளதம் ஆரம்பிக்ககூடும் என்ற செய்தி வெளியானது ஆனால் அவ் செய்தியும் நிறைவேறாமல் போக கெளதம் ஹிந்தியில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை ஆரம்பித்தார். இப்பொழுது விஜயை வைத்து ஒரு படம் ஆரம்பிக்க முடிவுசெய்தார். கெளதம் படத்தில் விஜய் நடிக்க இணக்கம் தெரிவித்துவிட்ட நிலையில் அவர் விஜயுடன் இணையும் படம் துப்பறியும் ஆனந் என செய்தி வெளிவரத்தொடங்கிவிட்டது. இப்படத்தின் கதைப்படி விஜய் துப்பறியும் அதிகாரியாக வருகிறார் லண்டனில் நடைபெறும் கொலையை அடிப்படையாக கொண்டது. அங்கு இடம்பெறும் கொலையை விஜய்  யார் கொண்டார் என எவ்வாறு அறிகிறார் எனவும் அவருக்கு வில்லன் கொடுக்கும் தொந்தரவுகளையும் மற்றும் பல சுவாரஸ்யமான விடயங்களையும் கொண்டு நகர்கிறது கதை. விஜய்க்கு கதைபிடித்து விட்டது என விஜய் தரப்புக்கூறுகிறது.இப்படத்திற்கு எ.ஆர்.ரகுமான இசையமைக்கிறார். மனோஜ்பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்ய உள்ளார் தாமரை பாடலாசிரியராகவும் அன்டனி எடிட்டராகவும் பணியாற்ற உள்ளனர். ஏற்கன்வே இப்படத்திற்குரிய படப்பிடிப்பு இடங்களை கெளதம் வாசுதேவ மேனன் தெரிவு செய்து விட்டார். சென்னை மற்றும் லண்டனில் படப்பிடிப்பு இடம்பெற உள்ளது.

0 comments:

Post a Comment