Thursday, March 31, 2011

விஜய் ரஜனியின் தேர்தல் நேர முடிவு என்ன?

தேர்தல் நேரத்தில் வெளிநாட்டுக்கு பறந்துவிடுவார்கள் என்று கணிக்கப்பட்ட இரு பெரும் நடிகர்கள் அந்த கணிப்பை பொய்யாக்கிவிடுவார்கள் போலிருக்கிறது.
இதில் ஒருவர் ரஜினி மற்றவர் விஜய். திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேச வேண்டும் என்று கேட்டார்களாம் ரஜினியிடம்.
அவரோ, அதற்கு பிடி கொடுக்காமல் வேண்டுமென்றால் உங்க கூட்டணி வேட்பாளர்களை வீட்டுக்கு வரச்சொல்லுங்க.
சால்வை போட்டு அனுப்புகிறேன். அதுதான் என்னால் செய்ய முடியும் என்றாராம்.
தேர்தலுக்குள் இன்னும் முக்கியமான சிலருக்கு போர்வை போர்த்த வேண்டியிருப்பதால்தான் இந்த பயணத்தை தள்ளி போட்டிருக்கிறார் ரஜினி.
விஜய் விஷயத்தில் அவர் நேரடியாக ஏதாவது ஒரு பொதுக் கூட்டத்தில் தோன்றுகிற அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கிறது. இப்போதைக்கு அதை வெளிப்படையாக சொல்ல வேண்டாம்.
தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறாராம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.

0 comments:

Post a Comment