நடிகர், நடிகைகள் பலர் தங்களின் சுதந்திர தின ஆசைகளை வெளியிட்டு உள்ளனர். |
அதன் விவரம் பின்வருமாறு:![]() பொருளாதாரத்தில் பின் தங்கிய சிலருக்கு உயர் கல்வி செலவையும் ஏற்றுள்ளேன். அனைவருக்கும் கணணி கல்வி அவசியம். இதற்காக கணணி பயிற்சி மையங்கள் துவக்கியுள்ளேன். அங்கு இலவசமாக கணணி பயிற்சி அளிக்கப்படுகின்றன. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமன்னா: என்னை இந்தியன் என் அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். நம்மை சுற்றி நிறைய விசயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. நிறைய வழக்குகளும் நடக்கின்றன. இதையெல்லாம் பார்க்கும் போது வியப்பாக உள்ளது. இதோடு நல்ல விஷயங்களும் நடக்கின்றன. அவைகளை நினைவில் கொள்வோம். அமலாபால்: ஊழல் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எல்லா நாடுகளிலும் இருக்கிறது. அரசியல் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு ஊழலும் மலிந்து இருக்கும். அவற்றை எதிர்க்க அன்னாஹசாரே போன்றவர்கள் இருக்கிறார்கள். இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம். ஒவ்வொரு துறையிலும் இந்தியா ஒளிர்கிறது. அஜ்மல்: ஊழல் ஒழிய வேண்டும். நிறைய வழக்குகள் ஊழலை மையப்படுத்தி நடக்கின்றன. இக்காலத்து இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக மாற வேண்டும். இந்தியாவுக்கு வளமான எதிர்காலம் உள்ளது. |
0 comments:
Post a Comment