Wednesday, October 27, 2010

காவலன் இசை வெளியீட்டு விழாவில் நிலவும் குழப்பம்

இப்பொழுது தமிழ் சினிமா படங்களின் இசை வெளியீட்டு என்றால் வெளிநாடுகளில் நடத்துவது என புதிய பரிமாணம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் மாஸ் கீரோக்களின் படங்களுக்கு இது முக்கியமாக பொருந்துகிறது.விண்ணைதாண்டி வருவாயா இசை வெளியீட்டு விழா லண்டனில் நடைபெற்றது.அதை தொடர்ந்து எந்திரன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது.பெரிய பட்ஜெட் படங்களுக்கு நிகராக ஒச்சாயி என்ற சிறிய பட்ஜெட் பட இசை வெளியீட்டு விழா அவுஸ்ரேலியாவில் நடைபெற்றது.இவ்வாறு இசை வெளியீட்டு விழாவை வெளிநாடுகளில் நடத்துவது தொடர்கிறது.வானம் இசை வெளியீட்டு விழா லண்டனிலும் மன்மதன் அம்பு சிங்கபூரிலும் வெளியிட படகுழுவினர் திட்டமிட்டுள்ளனர்.இதை போலவே காவலன் பட இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைப்போம் என பட தயாரிப்பாளர் விஜய்யிடம் கேட்க்கா விஜய் மறுத்துவிட்டாராம்.சிங்கபூரில் வைப்போம் என கேட்கவும் மறுத்துவிட்டாராம் நம்ம இளையதளபதி.எங்கே இசை வெளியீட்டு விழா என அறிவிப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:

Post a Comment